news

Wednesday, May 30, 2012

பிரபாகரன் தமிழரின் எழுச்சியின் வடிவம்: மேபெரும் நூல் வெளியீட்டு விழா லண்டனில் !


லண்டனில் வல்வை அரங்கத்தினர் மாபெரும் நூல் வெளியீட்டு விழா ஒன்றை நடத்தவுள்ளனர்(04/06/2012). பிரபாகரன் தமிழரின் எழுச்சியின் வடிவம் என்ற நூலை தமிழ் உணர்வாளர் பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் எழுதி சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் வெளியிட்டிருந்தார். இந் நூலையே தற்போது வல்வை அரங்கத்தினர் லண்டனில் வெளியிடவுள்ளனர். தேசிய தலைவர் குறித்து பல அரிய செய்திகளையும், தமிழர் போராட்டங்களையும் உள்ளடக்கியுள்ள இப் புத்தகம் ஒவ்வொரு தமிழர்கள் வீட்டிலும் இருக்கவேண்டிய ஒன்று.

காலத்தின் தேவை கருதி எழுதப்பட்ட இப் புத்தகம், லண்டனில் வெளியிடப்படுவது மிகவும் பெருமைக்குரிய விடையமாகும். அனைத்து தமிழ மக்களும், உணர்வாளர்களும் இன் நிகழ்வில் கலந்துகொண்டு, இந் நிகழ்வை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டி நிற்கின்றனர்.

நூல் வெளியீட்டு விழா நடைபெறும் இடம்:-

04/06/2012 Evening 7.00 pm
Valvai Arangam,
66 A London Road,
Tooting,
SW17 9HP

NOTE: Entrance Via 1a Arnold Raod

No comments:

Post a Comment