news
Friday, June 29, 2012
Sunday, June 17, 2012
தாய்மையால் அளவில்லா இன்பம் அடைகிறேன்: ஐஸ்வர்யா ராய்
தாய்மை தனக்கு அளவற்ற பேரின்பம் அளிப்பதாக நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார். |
இங்கிலாந்து வாழ் இந்தியரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கேத் வாஸ் 25 ஆண்டுகளாக பதவி வகிப்பதை முன்னிட்டு லண்டனில் விருந்தளித்தார். அதில் ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன் பங்கேற்றனர். அப்போது ஐஸ்வர்யா ராய் கூறுகையில், தாயாக கிடைத்துள்ள அனுபவம் பேரின்பம் தருகிறது. அதை ரசிக்கிறேன், நேசிக்கிறேன். இப்போதைக்கு குழந்தையை வளர்ப்பதே எனது முன்னுரிமை. மீண்டும் நடிக்க வருவது பற்றி உடனடி திட்டம் இல்லை என்றார். அபிஷேக் கூறுகையில், குழந்தையை கவனிக்க நான் நேரம் ஒதுக்காததை குற்றமாக நினைக்கிறேன். அந்த கடினமான வேலைகளை ஐஸ்வர்யா தான் செய்கிறார் என்றார். |
முரட்டுக்காளை
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முரட்டுக்காளை படத்தின் கதையைப் போன்றே இப்படத்தையும் எடுத்திருக்கிறார்கள். |
தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயத்தைப் பார்த்துக் கொண்டு, தனது நான்கு தம்பிகளோடு கிராமத்தில் வாழ்கிறார் காளை. பக்கத்து ஊரில் ரேக்ளா பந்தயம் நடக்கவே, அதில் கலந்து கொள்ளும் காளை வெற்றி மகுடம் சூட்டுகிறார். அந்த ஊரின் பெரியபுள்ளியான வரதராஜனின் தங்கை பிரியா, காளையைப் பார்த்ததும் அவர் மேல் ஒருதலையாய் காதல் கொள்கிறார். தனது ஆசையை தனது வீட்டில் வேலையாளாக இருக்கும் திருநங்கை சரோஜாவிடம் தெரிவிக்கிறார். காளையின் ஊருக்கு வரும் சரோஜா, காளையை பற்றி முழு தகவல்களை அறிந்து கொண்டு பிரியாவிடம் வருகிறார். காளைக்கு நான்கு தம்பிகள் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் சம்மதம் சொன்னால் காளை உன்னை திருமணம் செய்து கொள்வார் என்றும் சொல்கிறார். இதனையடுத்து காளையின் தம்பிகளை சந்திக்கும் பிரியா, தனது கல்யாணத்திற்கு அவர்களிடம் சம்மதமும் வாங்கிக் கொள்கிறார். வரதராஜன் தன்னிடம் வேலையாளாக இருப்பவரின் தங்கையாக வரும் புவனா மீது மோகம் கொள்கிறார். அவரை அடைய நினைக்கும் முயற்சியில் புவனாவின் அக்காவை கொலை செய்து விடுகிறார். இதனால் தனித்து விடப்படும் புவனா உயிர் பிழைத்துக் கொள்ள காளையின் வீட்டில் அடைக்கலமாகிறார். அவருக்கு காளையும் அடைக்கலம் தருகிறார். இந்நிலையில் தனது தங்கை காதலிக்கும் ஆள் காளை என்பதை விட, அவரது நிலத்தில் கனிமப் பொருள் இருப்பது வரதராஜனுக்கு தெரியவரவே, அவர் மாப்பிள்ளை கேட்டு காளை வீட்டிற்கு வருகிறார். இது அறியாமல் திருமணத்திற்கு சம்மதிக்கிறார் காளை. நிச்சயதார்த்தத்தின் போது வரதராஜனின் நிலத்தாசை தெரிய வருகிறது. பிரியா தன் தம்பிகள் மேல் வெறுப்பு காட்டுவதும் தெரிய வருகிறது. இதனால் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விடுகிறார். இதனால் காளையும் வரதராஜனும் எதிரிகளாகி விடுகின்றனர். தம்பிகள் மேல் அன்பு காட்டும் புவனாவை காளைக்கு பிடித்துப் போகிறது. அவரை கைப்பிடிக்க நினைக்கிறார். இதற்கு பலவிதமான முட்டுக் கட்டைகளைப் போடுவது மட்டுமின்றி ஒரு கொலைப்பழியையும் அவர் மீது சுமத்துகிறார் வரதராஜன். இத்தனை பிரச்சினைகளையும் காளை சமாளித்தாரா? புவனாவை கரம் பிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. காளை வேடத்தில் சுந்தர் சி நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும், ரேக்ளா பந்தயக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். புவனா கேரக்டரில் வரும் சினேகா அழகாய் நடித்திருப்பது மட்டுமின்றி, பாடல் காட்சிகளில் கவர்ச்சியும் காட்டியிருக்கிறார். வரதராஜன் வேடத்தில் வரும் சுமன் வில்லன் நடிப்பில் அசத்துகிறார். பிரியா கேரக்டரில் வரும் சிந்து துலானி தன் பங்கை உணர்ந்து நடித்திருகிறார். திருநங்கை சரோஜாவாக வரும் விவேக் சிறப்பாக நடித்திருக்கிறார். சுமனோடு இருந்து கொண்டு அவருக்கு எதிராக காளையை கொம்பு சீவி விடும் பாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். தனி டிராக்கில் இவர் நடத்தும் காமெடி, சில காட்சிகளில் சிரிப்பைத் தருகிறது. இவர் குளியல் போடும் காட்சிகளில் அருவறுப்பைத் தருகிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் 5 பாடல்கள். பொதுவாக என் மனசு தங்கம் ரீமிக்ஸ் பாடல், சிம்பு பாடிய சுந்தர புருஷா பாடல் தாளம் போட வைக்கிறது. ரேக்ளா பந்தயம், டிரெயின் சண்டை காட்சி, கிராமத்து பசுமை ஆகியவற்றை சான்டோனியோ கேமிரா அள்ளி வந்திருக்கிறது. அதனை அழகாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள் படத்தொகுப்பாளர்களான பிரவீண் மற்றும் ஸ்ரீகாந்த். ரஜினியின் முரட்டுக் காளையை இப்படத்தில் மீள்பதிவு செய்ய முயன்றிருக்கிறார் இயக்குனர் செல்வபாரதி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய படம் இது. இப்போது வந்திருந்தாலும் ரசிக்கும் படியாகவே கொடுத்திருக்கிறார் செல்வபாரதி. நடிகர்: சுந்தர் சி, சுமன், விவேக். நடிகை: சினேகா, சிந்து துலானி. இயக்குனர்: செல்வபாரதி. இசை: ஸ்ரீகாந்த் தேவா. ஒளிப்பதிவு: சான்டோனியோ. |
ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு! இந்த போராட்டம் தொடரும்!- காசிஆனந்தன்
விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி பேசிய அவர்,
இந்திய சுதந்திர போராட்டத்தைவிட தமிழீழத்திற்கானது பெரிய போராட்டம் ஆகும். சுபாஷ் சந்திரபோஸ் தான் எனக்கு வழிகாட்டி என்று பிரபாகரன் கூறியிருக்கிறார்.
இந்திய விடுதலைப்போராட்டத்தைவிட 100 மடங்கு பெரியது இலங்கை ஈழ விடுதலை போராட்டம்.
இந்திய போரில் சுமார் 30,000 பேர் இறந்து இருப்பார்கள். ஆனால் ஈழ மண்ணில் நடந்த போரில் மூன்று லட்சத்திற்கு மேல் இறந்துள்ளனர்.
அப்போது விமானத்தில் வந்து யாரும் குண்டுகள் போடவில்லை. இப்போது அப்படியில்லை, அதிகமாக தமிழர்கள் வாழ்ந்த பூமியில் அதிகமான அளவில் குண்டு போட்டு சாகடித்துள்ளனர்.
அந்த போரில் யாரும் விதவையாக்கப்படவில்லை. மாறாக இலங்கையில் 89,000 பெண்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 60,000 பெண்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக்கப்பட்டுள்ளனர்.
அதே போல் காந்தியடிகளின் உண்ணாவிரத போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை. ஆனால் இந்த இலங்கை விடுதலைப் போராட்டத்தில் திலீபன் போன்றவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள். இது மிகவும் உயர்ந்த விடுதலைப் போராட்டமாகும்.
அங்குள்ளவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். நாங்கள் அவர்களைவிட உறுதியாக இருக்கிறோம்.
ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு, இந்த போராட்டம் தொடரும். வழக்கம்போல் உங்கள் தோள்கள், கைகள் தொடர்ந்து எங்களுக்கு கைகொடுங்கள் என்று காசி ஆனந்தன் பேசினார்.
இந்திய சுதந்திர போராட்டத்தைவிட தமிழீழத்திற்கானது பெரிய போராட்டம் ஆகும். சுபாஷ் சந்திரபோஸ் தான் எனக்கு வழிகாட்டி என்று பிரபாகரன் கூறியிருக்கிறார்.
இந்திய விடுதலைப்போராட்டத்தைவிட 100 மடங்கு பெரியது இலங்கை ஈழ விடுதலை போராட்டம்.
இந்திய போரில் சுமார் 30,000 பேர் இறந்து இருப்பார்கள். ஆனால் ஈழ மண்ணில் நடந்த போரில் மூன்று லட்சத்திற்கு மேல் இறந்துள்ளனர்.
அப்போது விமானத்தில் வந்து யாரும் குண்டுகள் போடவில்லை. இப்போது அப்படியில்லை, அதிகமாக தமிழர்கள் வாழ்ந்த பூமியில் அதிகமான அளவில் குண்டு போட்டு சாகடித்துள்ளனர்.
அந்த போரில் யாரும் விதவையாக்கப்படவில்லை. மாறாக இலங்கையில் 89,000 பெண்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 60,000 பெண்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக்கப்பட்டுள்ளனர்.
அதே போல் காந்தியடிகளின் உண்ணாவிரத போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை. ஆனால் இந்த இலங்கை விடுதலைப் போராட்டத்தில் திலீபன் போன்றவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள். இது மிகவும் உயர்ந்த விடுதலைப் போராட்டமாகும்.
அங்குள்ளவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். நாங்கள் அவர்களைவிட உறுதியாக இருக்கிறோம்.
ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு, இந்த போராட்டம் தொடரும். வழக்கம்போல் உங்கள் தோள்கள், கைகள் தொடர்ந்து எங்களுக்கு கைகொடுங்கள் என்று காசி ஆனந்தன் பேசினார்.
தனி ஈழம் ஒன்றே தீர்வு! டெசோ மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும்!-திருமாவளவன்
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழ் ஈழம் ஒன்றுதான் ஈழச் சிக்கலுக்கு தீர்வு என்பதையும், அதற்காக உலகத் தமிழர்களிடையே ஒரு பொதுவாக்கு நடத்த வேண்டும் என்பதையும் டெசோ அமைப்பு வலியுறுத்துகிறது.
அந்த கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்பதினால் டெசோ அமைப்பில் இணைந்து செயல்பட ஒப்புதல் அளித்திருக்கிறோம்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு. டெசோ அமைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் உறுப்பினராக இணைத்துக்கொண்டதற்கு திமுக தலைவர் கலைஞருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெறவுள்ள டெசோ மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என்றார்.
தமிழ் ஈழம் ஒன்றுதான் ஈழச் சிக்கலுக்கு தீர்வு என்பதையும், அதற்காக உலகத் தமிழர்களிடையே ஒரு பொதுவாக்கு நடத்த வேண்டும் என்பதையும் டெசோ அமைப்பு வலியுறுத்துகிறது.
அந்த கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்பதினால் டெசோ அமைப்பில் இணைந்து செயல்பட ஒப்புதல் அளித்திருக்கிறோம்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு. டெசோ அமைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் உறுப்பினராக இணைத்துக்கொண்டதற்கு திமுக தலைவர் கலைஞருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெறவுள்ள டெசோ மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என்றார்.
Friday, June 15, 2012
Skype உரையாடல்களை ஒலி, ஒளிப்பதிவு செய்ய வேண்டுமா??
நீங்கள் அனைவரும் skype பயன்படுத்துவீர்கள். அதில் பல நண்பர்களுடன்
உரையாடுவீர்கள். வெளிநாடுகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்கள்
உறவினர்களுடன் கதைத்து மகிழவும் போகமுடியாத திருமண நிகழ்வுகள் வேறுபல
நிகழ்வுகளை காணவும் பயன்படுத்து கின்றனர். (காதலர்களின் உரையாடல்கள் உட்பட)
இவற்றில் சிலவற்றை பத்திரப்படுத்தி வைக்க விரும்புவர். அவர்களுக்கே
இப்பதிவு . powergramo pro இவ் மென்பொருளை நிறுவியதும் skype ஐ on
செய்யவும். செய்தபின்னர் skype இன் மேற்புறத்தே allow பண்ணுமாறு ஒரு
கோரிக்கை வரும் அதனை allow பண்ணுங்கள் இனி உங்களது மென்பொருள் தயார்
நிலைக்கு வந்துவிட்டது.
உங்களுக்கு vedio தேவையில்லை audio மட்டுமே போதுமானால் அவ் software இன் tools சென்று enable recording இல் தேவையான மாற்றங்களை செய்துகொள்ளுங்கள். இப்போது நீங்கள் skype ஐ பயன்படுத்தும்போது தானாகவே நீங்கள் செய்த settings இற்கு ஏற்ப ஒலிப்பதிவு/ஒளிப்பதிவு செய்ய தொடங்கும். இதில் பதிவு செய்யும் fileகள் அனைத்தும் இம்மென்பொருளினூடாகவே படிக்கமுடியும். ஆனால் தேவையான fileகளை தெரிவுசெய்து file சென்று export records as சென்று தேவையான format களில் (.mp3,.wma,.ogg,.wav,.avi) save செய்து கொள்ளலாம் .
தரவிறக்க
DOWNLOAD
இதற்கு வேறுபல மென்பொருள்களும் உண்டு. முயற்சி செய்து பாருங்கள்
01. Evaer Video Recorder For Skype
02. MX Skype Recorder
03. richy
04. hotrecorder
05. Virtual Audio Cable
உங்களுக்கு vedio தேவையில்லை audio மட்டுமே போதுமானால் அவ் software இன் tools சென்று enable recording இல் தேவையான மாற்றங்களை செய்துகொள்ளுங்கள். இப்போது நீங்கள் skype ஐ பயன்படுத்தும்போது தானாகவே நீங்கள் செய்த settings இற்கு ஏற்ப ஒலிப்பதிவு/ஒளிப்பதிவு செய்ய தொடங்கும். இதில் பதிவு செய்யும் fileகள் அனைத்தும் இம்மென்பொருளினூடாகவே படிக்கமுடியும். ஆனால் தேவையான fileகளை தெரிவுசெய்து file சென்று export records as சென்று தேவையான format களில் (.mp3,.wma,.ogg,.wav,.avi) save செய்து கொள்ளலாம் .
தரவிறக்க
DOWNLOAD
இதற்கு வேறுபல மென்பொருள்களும் உண்டு. முயற்சி செய்து பாருங்கள்
01. Evaer Video Recorder For Skype
02. MX Skype Recorder
03. richy
04. hotrecorder
05. Virtual Audio Cable
தேசிய தலைவரின் மகன் பாலச்சந்திரனைக் கொலை செய்த சூத்திரதாரி யார்?
பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின்
நேரடி ஆலோசனைக்கமைய 53ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக அன்று
கடமையாற்றிய பிரிகேடியர் கமல் குணரத்னவின் பற்றாலியனே இந்தச் சிறுவனை
சுட்டுக்கொன்றுள்ளதாகவும்,
2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி அதிகாலை 7.30 அளவில் பாலச்சந்திரன் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் நந்திக்கடல் களப்பில் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர். அதாவது, இராணுவத்தின் 4வது விஜயபா படைப்பிரிவின் முத்துபண்டாவின் தலைமையில் இருந்த 8 பேர் கொண்ட இராணுவப் படையணியிடம் இவர்கள் சரணடைந்ததாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவரது பிரத்தியே பாதுகாப்பு உறுப்பினர் இருவருடன் பாலச்சந்திரன் பிரபாகரன் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார். இதன்போது லெப்டினன் கேணல் அலுவிகார அவரது 681வது பற்றாலியனின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய லெப்டினன் கேணல் லலந்த கமமே ஊடாக, 53ஆவது படையணியில் அன்று மேஜர் ஜெனரல் பதவியிலிருந்த கமல் குணரத்னவிற்கு அறிவித்துள்ளார்.
கமல் குணரத்னவின் உத்தரவிற்கமைய பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரை நந்திக்கடல் களப்பு பிரதேசத்திலிருந்து கமல் குணரத்னவிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கமல் குணரத்ன, அவர்களிடம் தனிப்பட்ட விசாரணைகளை நடத்தியுள்ளார். இதன்போது தனது தந்தையிடமிருந்து பிரிந்து பாதுகாப்புத் தரப்பினருடன் வந்ததாக பாலச்சந்திரன் கூறியுள்ளான்.
பாலச்சந்திரனிடம் பெறப்பட்டத் இராணுவத்தினரிடம் தகவல்களை கமல் குணரத்ன உடனடியாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு தொலைபேசி ஊடாக அறிவித்ததும், இந்தத் தகவல்கள் அனைத்தையும் பாதுகாப்புச் செயலாளர், பிரதி அமைச்சர் முரளிதரனுக்கு அறிவித்துள்ளார்.
பாலச்சந்திரன் தலைவர் பிரபகாரனின் மகன் என்பதனால் எதிர்காலத்தில் விடுதலை புலிகளின் தலைவராக வரக்கூடும், சிறுவன் என்பதனால் நீதிமன்றத்தால் தண்டனைகள் கொடுக்கமுடியாத சாத்தியங்கள் இருப்பதாகவும், எனவே சிறுவனை கொன்றுவிடுவதே சரியான முடிவும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுக்கு, முரளிதரன் விநாயகமூர்த்தி கூறியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ஷ, மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்துவிடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் பிரித்தானியாவின் ''சனல் 4'' தொலைக்காட்சியில் பாலச்சந்திரனின் கொலை தொடர்பாக பல தகவல்களை வெளியிடப்பட்டிருந்ததைப் பார்த்த இந்தப் படையணியில் இருந்த இராணுவ அதிகாரியொருவரே மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.
ஏனையவர்கள் செய்த தவறுகளுக்கு எல்லாம் என்னால் பொறுப்பு நிற்க முடியாது என்பதனால் இந்தத் தகவல்களை வெளியிடுவதாகவும் அந்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளதாக மேலும் அவ் இணையம் தெரிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி அதிகாலை 7.30 அளவில் பாலச்சந்திரன் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் நந்திக்கடல் களப்பில் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர். அதாவது, இராணுவத்தின் 4வது விஜயபா படைப்பிரிவின் முத்துபண்டாவின் தலைமையில் இருந்த 8 பேர் கொண்ட இராணுவப் படையணியிடம் இவர்கள் சரணடைந்ததாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவரது பிரத்தியே பாதுகாப்பு உறுப்பினர் இருவருடன் பாலச்சந்திரன் பிரபாகரன் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார். இதன்போது லெப்டினன் கேணல் அலுவிகார அவரது 681வது பற்றாலியனின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய லெப்டினன் கேணல் லலந்த கமமே ஊடாக, 53ஆவது படையணியில் அன்று மேஜர் ஜெனரல் பதவியிலிருந்த கமல் குணரத்னவிற்கு அறிவித்துள்ளார்.
கமல் குணரத்னவின் உத்தரவிற்கமைய பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரை நந்திக்கடல் களப்பு பிரதேசத்திலிருந்து கமல் குணரத்னவிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கமல் குணரத்ன, அவர்களிடம் தனிப்பட்ட விசாரணைகளை நடத்தியுள்ளார். இதன்போது தனது தந்தையிடமிருந்து பிரிந்து பாதுகாப்புத் தரப்பினருடன் வந்ததாக பாலச்சந்திரன் கூறியுள்ளான்.
பாலச்சந்திரனிடம் பெறப்பட்டத் இராணுவத்தினரிடம் தகவல்களை கமல் குணரத்ன உடனடியாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு தொலைபேசி ஊடாக அறிவித்ததும், இந்தத் தகவல்கள் அனைத்தையும் பாதுகாப்புச் செயலாளர், பிரதி அமைச்சர் முரளிதரனுக்கு அறிவித்துள்ளார்.
பாலச்சந்திரன் தலைவர் பிரபகாரனின் மகன் என்பதனால் எதிர்காலத்தில் விடுதலை புலிகளின் தலைவராக வரக்கூடும், சிறுவன் என்பதனால் நீதிமன்றத்தால் தண்டனைகள் கொடுக்கமுடியாத சாத்தியங்கள் இருப்பதாகவும், எனவே சிறுவனை கொன்றுவிடுவதே சரியான முடிவும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுக்கு, முரளிதரன் விநாயகமூர்த்தி கூறியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ஷ, மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்துவிடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் பிரித்தானியாவின் ''சனல் 4'' தொலைக்காட்சியில் பாலச்சந்திரனின் கொலை தொடர்பாக பல தகவல்களை வெளியிடப்பட்டிருந்ததைப் பார்த்த இந்தப் படையணியில் இருந்த இராணுவ அதிகாரியொருவரே மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.
ஏனையவர்கள் செய்த தவறுகளுக்கு எல்லாம் என்னால் பொறுப்பு நிற்க முடியாது என்பதனால் இந்தத் தகவல்களை வெளியிடுவதாகவும் அந்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளதாக மேலும் அவ் இணையம் தெரிவித்துள்ளது.
Thursday, June 14, 2012
நித்தி ஆசிரமத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 50 சிறுவர்கள்: யாரென்று தெரியாமல் போலிசார் குழப்பம்!
பெங்களூரில் நித்தி நடத்தி வரும் பிடதி
ஆசிரமத்தில் சோதனை நடத்திய காவல்துறையினரும், அதிகாரிகளும் ஓர் அறையைத்
திறந்து பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். காரண்ம் அந்த அறையில் 50
சிறுவர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் யார் ஏன் மறைத்து
வைத்திருக்கிறார்கள் என்ற விபரம் எதுவும் இன்னமும் தெரியவில்லை.
அதைப்பற்றிய விசாரணைகள் நடைபெர்று வருகின்றன.
நித்தியாந்தாவின் பிடதி ஆசிரமம் கர்நாடக அரசின் கட்டுப்பாட்டுக்குள்
வந்துள்ளது. அங்கு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகள் பல அறைகளைப்
பூட்டி சீல் வைத்து விட்டனர்.அங்கு நடந்த சோதனையின்போது கஞ்சா பொட்டலங்கள், ஆணுறைகள், மது பாட்டில்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பக்தர்களுக்கு புனித நீர் என்ற பெயரில் கஞ்சாவைக் கலந்து கொடுப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்தது. அதை நிரூபிப்பது போல கஞ்சா பொட்டலங்கள் சிக்கியுள்ளன.
சில அறையில் வில், அம்பு, திரிசூலம், 5 அடி உயர சாமிசிலைகள், பஞ்சலோக பொருட்கள் இருந்தது. ஆசிரமத்தில் 3 கார்கள் நின்றது. அதன்மூலம் பணம், நகைகள் உள்பட சில பொருட்களை கடத்த முயற்சி நடந்ததாகவும் போலீசாரால் அது தடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
போலீசார் ஆசிரமத்தில் நுழைந்தபோது 200 பக்தர்கள் உள்ளே இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் இருந்து சில சொத்து பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் ஒரு ரகசிய அறையில் 50 சிறுவர்- சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். அனைவருக்கும் 8 முதல் 15 வயதே இருக்கும். அவர்கள் எதற்காக பயன்படுத்தப்பட்டார்கள் என்பது தெரியவில்லை.
அவர்களிடம் செக்ஸ் சில்மிஷ வேலைகளில் நித்தியானந்தாவோ அல்லது அவரது ஆதரவாளர்களோ ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் இதுகுறித்து தனியாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரமத்தில் இருந்த அத்தனை பேரிடமும் விசாரணை நடத்திய போலீஸார் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரித்துள்ளனர். வெளிநாட்டுக்கார ஆதரவாளர்களைத்தான் என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸார் விழிக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து அங்கேயேதான் டேரா போட்டுள்ளனர்.
அதிபரை மாற்றவேண்டாம்: வேம்படிப் பெண்கள் கடும் ஆர்பாட்டம் !
யாழ்ப்பாணம், வேம்படி மகளிர் கல்லூரி அதிபரின் திடீர்
இடமாற்றத்தை ரத்துச் செய்யக்கோரி அக்கல்லூரி மாணவிகளால் பாடசாலை வளாகத்தில்
கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்று நடத்தப்பட்டது. அத்துடன், தமது எதிர்ப்பினைத்
தெரிவித்து மாணவிகள் கையொப்பமிட்ட மகஜர் ஒன்று, மாகாண கல்வி அமைச்சின்
செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டம் தொடர்பாக மாணவிகள் கருத்து தெரிவிக்கையில், 'இந்த இடமாற்றத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நீண்ட காலமாக எமது அதிபர் பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார். அவரின் சிறப்பான செயற்பாடே இவ்வாண்டு க.பொ.த சாதரண தரப் பரீட்சையில் எமது பாடசாலை முதலிடம் பெறுவதற்கு காரணம். இந்த இடமாற்றத்தை யாழ் வலயக் கல்வித் திணைக்களம் உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும். அவ்வாறு ரத்து செய்யப்படாவிட்டால் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் இடம்பெறும்' என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டம் தொடர்பாக மாணவிகள் கருத்து தெரிவிக்கையில், 'இந்த இடமாற்றத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நீண்ட காலமாக எமது அதிபர் பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார். அவரின் சிறப்பான செயற்பாடே இவ்வாண்டு க.பொ.த சாதரண தரப் பரீட்சையில் எமது பாடசாலை முதலிடம் பெறுவதற்கு காரணம். இந்த இடமாற்றத்தை யாழ் வலயக் கல்வித் திணைக்களம் உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும். அவ்வாறு ரத்து செய்யப்படாவிட்டால் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் இடம்பெறும்' என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Sunday, June 10, 2012
அமெரிக்க அழகியாக ஒலீவியா கல்போ தேர்ந்தெடுக்கப்பட்டார் !
அமெரிக்காவில் நடைபெற்ற மிஸ் அமெரிக்க போட்டியில், 20 வயதான ஒலீவியா கல்போ தேர்வாகியுள்ளார். இறுதிப் போட்டிகளில் சுமார் 54 அழகிகள் கலந்துகொண்டபோதிலும் ஒலீவியா கல்போ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படுகிறது.
சிக்கென்ற தீபிகா கொடுத்த போஸ் !
ஏற்கெனவே ஒரு சிவப்பு ஸ்விம் சூட்டில் தீபிகா படுகோன் கொடுத்த போஸ்
பாலிவுட்டில் ஏற்படுத்திய பரபரப்பு ஓயும் முன்பே, மேலும் ஒரு பரபரப்பு...
வோக் என்ற பிரபல பேஷன் பத்திரிகை அட்டைப்படத்துக்காக, இன்னும் படுகவர்ச்சி நீச்சல் உடையில் அவர் தோன்றியுள்ளார்.
கறுப்பு - ஆரஞ்சு - பிங்க் நிற நீச்சல் உடையில், உடலின் அழகுகளும் வளைவுகளும் அப்பட்டமாகத் தெரிய அவர் நிற்பது போன்ற இந்த ஸ்டில், அவர் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் காக்டெயில் படத்திலும் இடம்பெறுகிறதாம்.
இதுகுறித்து தீபிகா அடித்துள்ள கமெண்ட்: "நான் தவறான செயல் எதையும் செய்யவில்லை. இது நிர்வாணமும் அல்ல. அழகை ரசிக்காமல் யாரும் கண்ணை மூடிக் கொள்ளப் போகிறார்களா என்ன!"
இந்த ஸ்டில் கிளப்பிய பரபரப்பு படத்தின் பப்ளிசிட்டிக்கு ரொம்பவே உதவியுள்ளதாம். தமிழில் ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்து வருகிறார் தீபிகா படுகோன்.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நியமித்த நிபுணரை திருப்பியனுப்பிய பணிப்பாளர்: அதிர்ச்சியில் வைத்தியர்கள்
இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு
நியமிக்கப்பட்ட வைத்திய நிபுணர் தற்காலிகமாக வவுனியா வைத்தியசாலையில்
பணியாற்ற சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் சுகாதார அமைச்சு நியமித்த நிபுணரை வைத்தியசாலையின், பணிப்பாளர் திருப்பியனுப்பிய சம்பவம் தமக்கு கடும் அதிர்ச்சியளிப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு குறித்த வைத்திய நிபுணரை உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நியமிக்க வேண்டும் என கோரி வைத்தியர்கள், யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளருக்கும் சுகாதார அமைச்சிற்கு கையெப்பமிட்டு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.
ஜெய்க்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் 12 சத்திர சிகிச்சை கூடங்கள் அடங்கிய சத்திரசிகிச்சை கூடம் ஒன்றை தற்போது அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இக்கூடமானது இவ்வருடம் இறுதிப் பகுதியில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு நவீன வசதிகளுடன் கூடிய புதிய சத்திரசிகிச்சை கூடங்கள் கொண்டு தொகுதி அமைக்கப்பட்டால் இப்போது இருப்பதைப் பார்க்கிலும் அதிகமாக நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்கள் தேவையாகவிருக்கும்.
இந்நிலையில் சுகாதார அமைச்சு இந்நிபுணரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நியமித்திருந்தது. இவ்வாறு சுகாதார அமைச்சு நியமித்த நிபுணரையோ தற்போது போதிய சத்திரசிகிச்சை கூட வசதிகள் யாழ்.போதான வைத்தியசாலையில் இல்லையென்ற காரணத்தை காட்டி பணிப்பாளர் நிராகரித்துள்ளார்.
இந்நிபுணர் தற்போது நியமிக்கப்பட்டால் இவ்வருட இறுதியில் திறக்கப்படவுள்ள சத்திர சிகிச்சை கூடங்கள் தொடர்பான பூர்வாகங்க நடவடிக்கைககளை இவர் மேற்கொள்ள முடியும் என்றும் இதன் மூலம் வடக்கில் வாழும் தமிழர்கள் அதிக நன்மையை பெற முடியும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை 1983ம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இவ்வாறான வைத்திய நிபுணர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நியமிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்ற வைத்தியர்கள் இவ்வாறான நடவடிக்கைகள் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமையே எடுத்துக்காட்டுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை ஏற்கனவே வைத்தியசாலையிலிருந்து இரும்புக் கேடர்கள் மற்றும் மின்பிறப்பாக்கி என்பன சட்டவிரோதமான முறையில் வைத்தியசாலையிலிருந்து வெளியே கொண்டு சென்றது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் சுகாதார அமைச்சு நியமித்த நிபுணரை வைத்தியசாலையின், பணிப்பாளர் திருப்பியனுப்பிய சம்பவம் தமக்கு கடும் அதிர்ச்சியளிப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு குறித்த வைத்திய நிபுணரை உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நியமிக்க வேண்டும் என கோரி வைத்தியர்கள், யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளருக்கும் சுகாதார அமைச்சிற்கு கையெப்பமிட்டு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.
ஜெய்க்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் 12 சத்திர சிகிச்சை கூடங்கள் அடங்கிய சத்திரசிகிச்சை கூடம் ஒன்றை தற்போது அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இக்கூடமானது இவ்வருடம் இறுதிப் பகுதியில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு நவீன வசதிகளுடன் கூடிய புதிய சத்திரசிகிச்சை கூடங்கள் கொண்டு தொகுதி அமைக்கப்பட்டால் இப்போது இருப்பதைப் பார்க்கிலும் அதிகமாக நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்கள் தேவையாகவிருக்கும்.
இந்நிலையில் சுகாதார அமைச்சு இந்நிபுணரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நியமித்திருந்தது. இவ்வாறு சுகாதார அமைச்சு நியமித்த நிபுணரையோ தற்போது போதிய சத்திரசிகிச்சை கூட வசதிகள் யாழ்.போதான வைத்தியசாலையில் இல்லையென்ற காரணத்தை காட்டி பணிப்பாளர் நிராகரித்துள்ளார்.
இந்நிபுணர் தற்போது நியமிக்கப்பட்டால் இவ்வருட இறுதியில் திறக்கப்படவுள்ள சத்திர சிகிச்சை கூடங்கள் தொடர்பான பூர்வாகங்க நடவடிக்கைககளை இவர் மேற்கொள்ள முடியும் என்றும் இதன் மூலம் வடக்கில் வாழும் தமிழர்கள் அதிக நன்மையை பெற முடியும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை 1983ம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இவ்வாறான வைத்திய நிபுணர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நியமிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்ற வைத்தியர்கள் இவ்வாறான நடவடிக்கைகள் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமையே எடுத்துக்காட்டுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை ஏற்கனவே வைத்தியசாலையிலிருந்து இரும்புக் கேடர்கள் மற்றும் மின்பிறப்பாக்கி என்பன சட்டவிரோதமான முறையில் வைத்தியசாலையிலிருந்து வெளியே கொண்டு சென்றது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை இடைத்தேர்தல் பிரசாரம்: விஜயகாந்தை கலாய்த்த 10 வயது சிறுவன்
தமிழ்நாட்டில் புதுகோட்டை இடைத்தேர்தலுக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனல் பறக்கும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். |
தேமுதிக சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜாகிர் உசேனை ஆதரித்து, புதுக்கோட்டை நகர் பகுதியில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில், தமிழகத்தில் பால், பேருந்து விலைகள் அதிகரித்து விட்டன. மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் மின்வெட்டும் அதிகரித்துள்ளது. மக்களே, குடிநீர் ஒழுங்காக கிடைக்கிறதா? என கேள்வி எழுப்பினார். அப்போது, “ சரியான கேள்வி, அப்படித்தான் கேட்க வேண்டும். அப்படியே கேளு என்று ஒரு சிறுவனின் குரல் மட்டும் தனித்து ஒலித்தது. இந்த குரலைக்கேட்ட விஜயகாந்த், சற்று நிமிடம் பேச்சை நிறுத்தி விட்டு சுற்றிப்பார்த்தார். அப்போது ஓட்டின் மீது அமர்ந்திருந்த 10 வயது சிறுவன் ஒருவன், சரியாத்தான் பேசுறீங்க, சரியாத்தான் கேக்குறீங்க, என அசராமல் கூற, அவனை புன்முறுவலோடு பார்த்தார் விஜயகாந்த். குடிபோதையில் விஜயகாந்த் அசிங்கமாக பேசுகிறார், வேட்பாளரை உதைக்கிறார் என்ற பலகுற்றச்சாட்டுகள் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் வந்தது. இந்நிலையில் இந்த இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, விஜயகாந்த் பேச்சை கவனித்து அவரை பாராட்டிய சிறுவனால் அவர் இழந்த நல்லபெயர் மீண்டும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
இராணுவ ஆக்கிரமிப்பினைக் கண்டித்து இம்மாத இறுதியில் சாத்வீகப் போராட்டம்! சிறிதரன் எம்.பி
இராணுவ ஆக்கிரமிப்பனைக் கண்டித்து இம்மாத இறுதியில் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு சாத்வீகப் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உதயன் செய்திப் பிரிவுக்குத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: வடக்கு கிழக்கில் தமிழர் பிரதேசங்களில் அவர்களது நிலங்களையும், வீடுகளையும் இலங்கை இராணுவம் ஆக்கிரமிப்பதற்கு முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
இதனைக் கண்டித்து நடப்பு மாதமான யூன் இறுதியில் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு சாத்வீகப் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.
2009ம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் மக்கள் மீது பயங்கரவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்தி யுத்தத்தை ஏற்படுத்தி வந்த அரசாங்கம் தற்போது யுத்த முடிவின் பின்னர் தமிழ் மக்களது நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றது.
அதனடிப்படையில் முறிகண்டியில் மக்களுக்குச் சொந்தமான நாலாயிரம் ஏக்கர் காணியில் சிங்களக் குடியேற்றத்தினை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவிலும் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேளையில் எமது மக்கள் இடைத்தங்கல் முகாம்களிலும் அகதி முகாம்களின் வாழ்ந்து வருகின்றனர்.
இவற்றுடன் மேலும் பல இலங்கை அரசின் அடாவடியான செயற்பாடுகளைக் கண்டித்தே எமது அமைதிப் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து சிறிதரன் எம்.பி. உதயனுக்குத் தெரிவித்தவை குரல் வடிவில்.....
இலங்கை படையினரின் கோரமுகம்: மற்றுமொரு போர்க்குற்ற ஆதாரம்
இறுதி யுத்தம் என்ற பெயரில் இருண்டது வன்னிப் பெருநிலப்பரப்பு. அந்த வன்னியில் நடந்தது என்ன என்பது கொஞ்சம் கொஞ்சமாக ஆதாரங்களுடன் வெளிவர, தமிழினத்துக்கு இலங்கை அரச படையால் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் நெஞ்சை பதற வைத்துள்ளன.
அந்த வகையில் அண்மையில் சில போர்க் குற்ற ஆதாரப் புகைப்படங்கள் வெளிவந்த அதேநேரம், தற்போது புதிய புதிய காணொளிகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு அங்கு அரங்கேற்றப்பட்ட தமிழினப் படுகொலை தமிழினத்தை மட்டுமல்ல தற்போது சர்வதேசத்தையே அதிர வைத்துள்ளது எனலாம்.
Saturday, June 9, 2012
அரவிந்தசாமி போல மாப்பிளையும் ஐஸ்வர்யாராய் போல பொண்ணுகேட்ட வங்களுக்கும் ஓர் எச்சரிக்கை
நீங்கள் பெண்களாக இருந்து ஒல்லியான மாப்பிளையையும், ஆண்களாக இருந்தால் ஒல்லி பெம்பிளையையும் தேடுகின்றீர்களா?
ஒல்லியை நம்பாதீங்க. உடனேயே குண்டாகிடுவாங்க. உலக அழகி ஐஸ்வர்யாவைப் போல பெண் வேணும் என காத்திருக்கும் ஆண்களும் அழகு நாயகன் அரவிந்தசாமியைப் போல ஆம்பிளை வேணும் என காத்திருக்கும் பெண்களும் இந்தப் படங்களை பார்த்துட்டு முடிவு எடுங்கோப்பா.
ஒல்லி மாப்பிளையும், ஒல்லி பெம்பிளையையும் நம்பவே கூடாது.
ஒல்லியை நம்பாதீங்க. உடனேயே குண்டாகிடுவாங்க. உலக அழகி ஐஸ்வர்யாவைப் போல பெண் வேணும் என காத்திருக்கும் ஆண்களும் அழகு நாயகன் அரவிந்தசாமியைப் போல ஆம்பிளை வேணும் என காத்திருக்கும் பெண்களும் இந்தப் படங்களை பார்த்துட்டு முடிவு எடுங்கோப்பா.
ஒல்லி மாப்பிளையும், ஒல்லி பெம்பிளையையும் நம்பவே கூடாது.
-
இரகசியமாக உலகைச் சுற்றி 270 நாட்கள் வேவு பார்த்த விமானம்:
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லல், சந்திரனை ஆய்வு செய்தல், செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பத் திட்டமிடல் ஆகிய பணிகளுக்காக விண்ணில் ஏவப்படும் விண்கலங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்போம். இதற்கு உதாரணமாக அமெரிக்காவின் டிஸ்கவரி, என்டேவர், மற்றும் ரஷ்யாவின் சோயுஷ் ஆகிய விண்கலங்களைக் கூறலாம்.
ஆனால் ஊடகங்களுக்குத் தெரிவிக்காமல் முற்றிலும் ரகசியமாக, வேவு பணிக்காக ஒரு விண்கலம் இயங்கி வருகின்றது என்றால் நம்பமுடியுமா ? அப்படியான ஒரு விண்கலம் அல்லது உளவு விமானம் போயிங் நிறுவனத்தினது X-37B 2 எனப் பெயரிடப்பட்ட அமெரிக்க விமானம் ஒன்று 17 000 mph வேகத்தில் பூமியை 110 - 500 மைல் உயரத்தில் 270 நாட்களாக சுற்றி வந்தது. இது இம்மாதம் (ஜூன்) கடைசியில் தரையிறக்கப் படவுள்ளது என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது.
இவ் விமானம் முக்கியமாக சீனாவின் டியாங்கொங் நகரில் சமீபத்தில் அமைக்கப் பட்ட புதிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செயற்பாடுகளை உன்னிப்பாக மாட்டிக் கொள்ளாமல் அவதானிக்கவே உருவாக்கப் பட்டது. எனினும் இதன் மூலம் வடகொரியா, ஈரான், இராக், பாகிஸ்தான் மற்றும் ஆஃபகானிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள அணு உலைகள் மற்றும் இராணுவப் பாசறைகள் வாகனங்கள் என்பவற்றையும் அவதானிக்கவும் இவ் விமானம் உபயோகப் படுத்தப் பட்டிருக்கும் எனவும் நம்பப் படுகின்றது.
அமெரிக்காவின் இவ்விமானம், விண்ணில் ஆராட்சி என்ற பெயரில் ஏவப்பட்டது. மனிதர்கள் இல்லாமல் முற்றாக ரிமோட்டில் இயங்கக்கூடிய இவ்விமானம் சுமார் 29 அடி நீளமும், 15 அடி அகலமும் கொண்டது. பல நாடுகளின் தகவல்களைச் சேகரித்துக்கொண்டு இவ்விமானம் விரைவில் தரையிறங்கவுள்ளது. குறிப்பாக பூமியில் உள்ள ஏனைய நாடுகளை வேவுபார்ப்பது என்பது அமெரிக்காவுக்கு கடுமையான விடையம். குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மேல் அமெரிக்க உளவு விமானத்தால் பறப்பில் ஈடுபட முடியாது. அந் நாடுகளின் ராடர்களில் மண்ணைத்தூவவேண்டி இருக்கும். ஆனால் பூமியில் இருந்து சுமார் 500 கி.மீட்டர் தொலைவில்(விண்வெளியில்) இருந்தவாறே இந்த வேவு விமானம் தான் சேகரிக்கவேண்டிய தகவல்களை சேகரிக்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
Friday, June 8, 2012
இலங்கைக்கு எந்த அவசர நிலையிலும் உதவ சீன இராணுவம் தயார்
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய
நேற்று சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லீயைச்
சந்தித்துப் பேசியபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கில் உள்ள மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைமையகத்தில் நேற்றுக்காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சீன இராணுவத்தின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி ஆறு நாள் பயணமாக நேற்றுமுன்தினம் மாலை பெய்ஜிங்கை சென்றடைந்தார்.
அவரை நேற்று சந்தித்தபோது, இருநாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கவும் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லீ உறுதியளித்துள்ளார்.
பேரழிவு அல்லது ஏனைய எந்த அவசரநிலையிலும் சீன இராணுவத்தின் உதவியை இலங்கை கோரலாம் என்றும் எந்தநேரத்திலும் இலங்கைக்கு உதவ தமது இராணுவம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுமார் ஒரு மணிநேரம் வரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இராணுவத் தளபதி ஒருவர் சீன பாதுகாப்பு அமைச்சரைத் தனியாகச் சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும். இந்தச் சந்திப்பில் சீன இராணுவத் தலைமை அதிகாரிகளின் பிரதி தலைவர் ஜெனரல் சியாவோ தியன் உள்ளிட்ட மூத்த இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அதேவேளை, சீனாவின் தலைமை அதிகாரிகளின் பிரதி தலைவர் ஜெனரல் சியாவோ தியனுடன் நடத்திய தனியான சந்திப்பின்போது, சீன இராணுவத்துக்கு போருக்கு பிந்திய விடயங்கள் குறித்து பயற்சியளிக்கத் தயாராக இருப்பதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
சீனா சரியான நேரத்தில் வழங்கிய இராணுவ உதவிகளும் பயிற்சியும் இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத் தளபதியுடன் 11வது டிவிசன் தளபதி பிரிகேடியர் குணவர்த்தன, இராணுவ அகடமியின் தளபதி பிரிகேடியர் ஜெயசுந்தர உள்ளிட்ட நான்கு அதிகாரிகளும் சீனா சென்றுள்ளனர்.
பெய்ஜிங்கில் உள்ள மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைமையகத்தில் நேற்றுக்காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சீன இராணுவத்தின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி ஆறு நாள் பயணமாக நேற்றுமுன்தினம் மாலை பெய்ஜிங்கை சென்றடைந்தார்.
அவரை நேற்று சந்தித்தபோது, இருநாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கவும் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லீ உறுதியளித்துள்ளார்.
பேரழிவு அல்லது ஏனைய எந்த அவசரநிலையிலும் சீன இராணுவத்தின் உதவியை இலங்கை கோரலாம் என்றும் எந்தநேரத்திலும் இலங்கைக்கு உதவ தமது இராணுவம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுமார் ஒரு மணிநேரம் வரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இராணுவத் தளபதி ஒருவர் சீன பாதுகாப்பு அமைச்சரைத் தனியாகச் சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும். இந்தச் சந்திப்பில் சீன இராணுவத் தலைமை அதிகாரிகளின் பிரதி தலைவர் ஜெனரல் சியாவோ தியன் உள்ளிட்ட மூத்த இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அதேவேளை, சீனாவின் தலைமை அதிகாரிகளின் பிரதி தலைவர் ஜெனரல் சியாவோ தியனுடன் நடத்திய தனியான சந்திப்பின்போது, சீன இராணுவத்துக்கு போருக்கு பிந்திய விடயங்கள் குறித்து பயற்சியளிக்கத் தயாராக இருப்பதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
சீனா சரியான நேரத்தில் வழங்கிய இராணுவ உதவிகளும் பயிற்சியும் இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத் தளபதியுடன் 11வது டிவிசன் தளபதி பிரிகேடியர் குணவர்த்தன, இராணுவ அகடமியின் தளபதி பிரிகேடியர் ஜெயசுந்தர உள்ளிட்ட நான்கு அதிகாரிகளும் சீனா சென்றுள்ளனர்.
அமெரிக்க பெண்ணை கற்பழித்தாரா நித்தியானந்தா? நிருபர்களின் கேள்வியால் ஆசிரமத்தில் தகராறு
டி.வி நிருபர்களை தாக்கியதாக சுவாமி நித்தியானந்தாவின் சீடர்கள் 17 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். |
சுவாமி நித்தியானந்தா தற்போது கர்நாடகாவில்
உள்ளார். இந்நிலையில் அங்குள்ள பிடதி ஆசிரமத்தில் நேற்று அவர் நிருபர்களை
சந்தித்தபோது ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது. நித்தியானந்தா தன்னைக் கற்பழித்ததாக ஆர்த்திராவ் என்னும் அமெரிக்க வாழ் இந்தியப் பெண் கூறிய புகார் பற்றி நேற்றைய செய்தியாளர் சந்திப்பின் போது நித்தியானந்தாவிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது நித்தியானந்தாவின் சீடர்களுக்கும், நிருபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்ததகராறில் டி.வி நிருபர் ஒருவரை நித்யானந்தாவின் சீடர்கள் தாக்கியதாகக் கூறி, நிருபர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த நவநிர்மாண் சேனா தொண்டர்களும், செய்தியாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது சீடர்கள் தங்களையும் தாக்கியதாக நவநிர்மாண் சேனா தொண்டர்களும் புகார் அளித்துள்ளனர். நவநிர்மாண் சேனா தொண்டர்கள் மற்றும் டி.வி நிருபர்கள் தங்களைத் தாக்கியதாக நித்தியானந்தாவின் சீடர்களும் இரண்டு புகார்களை அளித்தனர். இவ்விரு மனுக்கள் தொடர்பாகவும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகள் தொடர்பாக ராகசுதா, மோக்ஷயா என்னும் 2 பெண் சீடர்கள் உட்பட நித்தியானந்தாவின் 17 சீடர்கள் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். |
அழுத்தங்களுக்கு மத்தியில் புனித பாப்பரசரசரைச் சந்தித்த மகிந்த ராஜபக்ச!
இந்த சந்திப்பு வத்திக்கானில் இடம்பெற்றுள்ளதாக
இலங்கை ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார். எனினும்
பாப்பரசருடன் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களையும் அவர்
வெளியிடவில்லை.
ஏற்கனவே ஜனாதிபதி பாப்பரசரை சந்திக்கும் போது, மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் மீது இலங்கையில் காட்டப்படும் எதிர்ப்புணர்வு குறித்து பாப்பரசர் தமது கண்டனத்தை வெளியிடுவார் என்று சிரேஸ்ட தமிழ் செய்தியாளர் ஒருவர் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அழுத்தங்களுக்கு மத்தியில் புனித பாப்பரசரசரைச் சந்தித்த மகிந்த ராஜபக்ச!
மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை மீது இலங்கை அரசாங்கத்தினதும், இனவாதிகளினதும் அச்சுறுத்தல்கள், முக்கிய விடயமாக பலராலும் கவனிக்கப்பட்டு வரும் நிலையில், புனித பாப்பரசரை இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.
இலங்கை அரசுத் தலைவரின் சவால்மிகுந்த பிரித்தானியப் பயணத்தினைத் தொடர்ந்து, வத்திக்கானுக்கான பயணம் அமைந்திருந்தது.
அண்ணளவாக 30 நிமிடங்கள் வரை அமைந்த இந்தச் சந்திப்பின் போது, நீண்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தணித்து, சமூக - பொருளாதார அபிவிருத்தி
குறித்தும், இன நல்லிணக்கம் குறித்தும், புனித பாப்ரசரால் சிறிலங்கா அரசுத் தலைவருக்கு எடுத்துரைக்கப்பட்டதாக வத்திக்கானின் உத்தியோகபூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்ள்ளது.
மேலும் இசந்திப்பின் போது வத்திக்கானின் சர்வதேச விவகாரங்களுக்கான Archbishop Dominique Mamberti அவர்களும் கூடவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய காலங்களில் இலங்கை அரசாங்கத்தினதும், இனவாதிகளினதும் கத்தோலிக்க குருமார்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வரும் அழுத்தங்கள் குறித்து இவ்வேளை இசந்திப்பின் போது
விவாதிக்கப்பட்டதா என்பது பற்றி உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டவில்லை.
இருப்பினும் இலங்கைத்தீவில், கத்தோலிக்க குருமார்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும், மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்துப் தொடர்பிலும், இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்விடம் வினவுங்கள் என, புனித பாப்பரசர் 16ஆம் பெனடிக்ட் அவர்களிடம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஏலவே கோரிக்கையொன்றினை விடுத்திருந்தார்.
இலங்கையின் ஆயுதப்படைகளினால் பல கத்தோலிக்க குருமார்கள் பலர் படுகொலை செய்யப்பட்டும், கடத்திச் செல்லப்பட்டும், காணாமல் போயும் உள்ளனர் என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இவர்களில் சில குருமார்கள் இன்னும் உயிருடன் இருக்கலாம் எனவும், அவர்கள் இரகசியமான இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதான ஐயம் நிலவுகின்றதெனவும் தெரிவித்திருந்தார்.
- அருட் தந்தை மேரி பஸ்தியான் (சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்)
- அருட் தந்தை ஈகுஜீன் கேர்பர்ட் ளுது (கடத்திச் செல்லப்பட்டு காணமல் போயுள்ளார்)
- அருட் தந்தை ச. செல்வராசா (கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்)
- அருட் தந்தை திருச்செல்வம் நிகால் ஜிம் பிரவுண் ( கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்)
- அருட் தந்தை பாக்கியரஞ்சித் (கொலை செய்யப்பட்டுள்ளார்)
- அருட் தந்தை சேவியர் கருணாரத்தினம் (கொலை செய்யப் பட்டுள்ளார்)
- அருட் தந்தை பிரான்சிஸ் ஜோசேப்பு ( 2009ஆம் ஆண்டு முதல் காணமல் போயுள்ளார். இவர் யாழ் புனித சம்பத்தரிசியார் கல்லூரி முன்னை நாள் அதிபர்- இவரை இலங்கை ஆயுதப் படையினர் கூட்டிச்சென்றதை மக்கள் கண்டுள்ளார்கள். இவருக்கு என்ன நேர்ந்தது என இதுவரை தெரியவில்லை.)
மேற்குறித்த கத்தோலிக்க குருமார்களுக்கு நேர்ந்த அவலம் குறித்தும், புனித பாப்பரசர் அவர்களுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.
இதேவேளை மன்னர் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்களுக்கு, இலங்கை அரசாங்கத்தினாலும், இனவாதிகளினாலும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரியப்படுத்தியுள்ளார்.
அதில்,
2009ல் இலங்கை இராணுவத்தினரது இறுதியுத்த காலத்தின் போது 146,679 எண்ணிக்கையான தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பிலும் தமிழ் மக்கள் பெருந்தொகையாக கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பிலும்ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இலங்கை அரசுடன் இணைந்து செயற்படும் பௌத்த இனவாத அமைப்பாக ஜாதிக கெல உறுமய இராஜப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களைக் கைது செய்யம்படி பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
அண்மையில் மற்றுமொரு இலங்கையின் அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் ஆண்டகை அவர்களை மிரட்டியுள்ளதுடன், அவரது சமூகப் பணிகள் பற்றியும் மிரட்டும் பாணியில் நடந்துள்ளார்.
இலங்கையில் மிகக் கூடுதலான கத்தோலிக்க மக்கள் வாழும் மன்னார் மாவட்டத்திலும் புத்த சிலைகள் நிறுவுவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதாக செய்திகள் வெளி வந்துள்ளன.
ஆசியாவின் மிகப் பழமைவாய்ந்த தேவாலயங்களில் ஒன்றான மடு தேவாலயமும் மன்னார் மாவட்டத்தில் தான் அமைந்து ள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் புனித பாப்பரசருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
ஏற்கனவே ஜனாதிபதி பாப்பரசரை சந்திக்கும் போது, மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் மீது இலங்கையில் காட்டப்படும் எதிர்ப்புணர்வு குறித்து பாப்பரசர் தமது கண்டனத்தை வெளியிடுவார் என்று சிரேஸ்ட தமிழ் செய்தியாளர் ஒருவர் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அழுத்தங்களுக்கு மத்தியில் புனித பாப்பரசரசரைச் சந்தித்த மகிந்த ராஜபக்ச!
மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை மீது இலங்கை அரசாங்கத்தினதும், இனவாதிகளினதும் அச்சுறுத்தல்கள், முக்கிய விடயமாக பலராலும் கவனிக்கப்பட்டு வரும் நிலையில், புனித பாப்பரசரை இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.
இலங்கை அரசுத் தலைவரின் சவால்மிகுந்த பிரித்தானியப் பயணத்தினைத் தொடர்ந்து, வத்திக்கானுக்கான பயணம் அமைந்திருந்தது.
அண்ணளவாக 30 நிமிடங்கள் வரை அமைந்த இந்தச் சந்திப்பின் போது, நீண்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தணித்து, சமூக - பொருளாதார அபிவிருத்தி
குறித்தும், இன நல்லிணக்கம் குறித்தும், புனித பாப்ரசரால் சிறிலங்கா அரசுத் தலைவருக்கு எடுத்துரைக்கப்பட்டதாக வத்திக்கானின் உத்தியோகபூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்ள்ளது.
மேலும் இசந்திப்பின் போது வத்திக்கானின் சர்வதேச விவகாரங்களுக்கான Archbishop Dominique Mamberti அவர்களும் கூடவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய காலங்களில் இலங்கை அரசாங்கத்தினதும், இனவாதிகளினதும் கத்தோலிக்க குருமார்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வரும் அழுத்தங்கள் குறித்து இவ்வேளை இசந்திப்பின் போது
விவாதிக்கப்பட்டதா என்பது பற்றி உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டவில்லை.
இருப்பினும் இலங்கைத்தீவில், கத்தோலிக்க குருமார்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும், மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்துப் தொடர்பிலும், இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்விடம் வினவுங்கள் என, புனித பாப்பரசர் 16ஆம் பெனடிக்ட் அவர்களிடம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஏலவே கோரிக்கையொன்றினை விடுத்திருந்தார்.
இலங்கையின் ஆயுதப்படைகளினால் பல கத்தோலிக்க குருமார்கள் பலர் படுகொலை செய்யப்பட்டும், கடத்திச் செல்லப்பட்டும், காணாமல் போயும் உள்ளனர் என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இவர்களில் சில குருமார்கள் இன்னும் உயிருடன் இருக்கலாம் எனவும், அவர்கள் இரகசியமான இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதான ஐயம் நிலவுகின்றதெனவும் தெரிவித்திருந்தார்.
- அருட் தந்தை மேரி பஸ்தியான் (சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்)
- அருட் தந்தை ஈகுஜீன் கேர்பர்ட் ளுது (கடத்திச் செல்லப்பட்டு காணமல் போயுள்ளார்)
- அருட் தந்தை ச. செல்வராசா (கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்)
- அருட் தந்தை திருச்செல்வம் நிகால் ஜிம் பிரவுண் ( கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்)
- அருட் தந்தை பாக்கியரஞ்சித் (கொலை செய்யப்பட்டுள்ளார்)
- அருட் தந்தை சேவியர் கருணாரத்தினம் (கொலை செய்யப் பட்டுள்ளார்)
- அருட் தந்தை பிரான்சிஸ் ஜோசேப்பு ( 2009ஆம் ஆண்டு முதல் காணமல் போயுள்ளார். இவர் யாழ் புனித சம்பத்தரிசியார் கல்லூரி முன்னை நாள் அதிபர்- இவரை இலங்கை ஆயுதப் படையினர் கூட்டிச்சென்றதை மக்கள் கண்டுள்ளார்கள். இவருக்கு என்ன நேர்ந்தது என இதுவரை தெரியவில்லை.)
மேற்குறித்த கத்தோலிக்க குருமார்களுக்கு நேர்ந்த அவலம் குறித்தும், புனித பாப்பரசர் அவர்களுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.
இதேவேளை மன்னர் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்களுக்கு, இலங்கை அரசாங்கத்தினாலும், இனவாதிகளினாலும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரியப்படுத்தியுள்ளார்.
அதில்,
2009ல் இலங்கை இராணுவத்தினரது இறுதியுத்த காலத்தின் போது 146,679 எண்ணிக்கையான தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பிலும் தமிழ் மக்கள் பெருந்தொகையாக கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பிலும்ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இலங்கை அரசுடன் இணைந்து செயற்படும் பௌத்த இனவாத அமைப்பாக ஜாதிக கெல உறுமய இராஜப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களைக் கைது செய்யம்படி பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
அண்மையில் மற்றுமொரு இலங்கையின் அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் ஆண்டகை அவர்களை மிரட்டியுள்ளதுடன், அவரது சமூகப் பணிகள் பற்றியும் மிரட்டும் பாணியில் நடந்துள்ளார்.
இலங்கையில் மிகக் கூடுதலான கத்தோலிக்க மக்கள் வாழும் மன்னார் மாவட்டத்திலும் புத்த சிலைகள் நிறுவுவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதாக செய்திகள் வெளி வந்துள்ளன.
ஆசியாவின் மிகப் பழமைவாய்ந்த தேவாலயங்களில் ஒன்றான மடு தேவாலயமும் மன்னார் மாவட்டத்தில் தான் அமைந்து ள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் புனித பாப்பரசருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
தமிழினத்தின் மீதான இலங்கையின் போர்க்குற்றங்கள் அடங்கிய புதிய ஆதாரங்கள்
இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த இன்டிபென்டன்ட்'
ஊடகத்திடம் குறித்த ஆதாரங்களை கையளித்திருந்த வழக்கறிஞர் வாசுகி முருகதாஸ்
அவர்கள், குறித்த ஆதாரங்களை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடமும்
கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதொலைபேசியின் வழியே பதிவு செய்யப்பட்ட, 25க்கும்
மேற்பட்ட ஒளிப்படங்களுடன், 3நிமிட அளவிலான காணொளிப்பதிவும் அவ் ஆதாரங்களாக
உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா தொடர்பில், சுதந்திரமான அனைத்துலக விசாரணையின்
அவசியத்தினையே மீண்டும் ஒருதடவை, இந்த ஆதாரங்கள் வலியுறுத்தி நிற்பதாக,
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சக செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத்தீவில் இயங்கி வரும் சிறிலங்காவின் அரசியல்,
இராணுவக் கட்டமைப்பின் உயர் மட்டத் தலைவர்களுக்கு, இக் காட்டுமிராண்டித்
தனமான குற்றங்களில் பெரும் பங்குண்டு என்பதுடன், அவர்களின்
பங்களிப்புடனேயே, இக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன என்பதை இந்த ஆதாரங்கள்
தெளிவாக காட்டுவதோடு, இதுவரை வெளிவந்துள்ள எல்லாவகை ஆதாரங்களின்
அடிப்படையில், இன்றைய தேவை சுதந்திரமான அனைத்துலக விசாரணை ஒன்று
மட்டுமேயாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சக
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)