news

Friday, May 4, 2012

யாழில் இராணுவ வீரர்கள் இடையே மோதல் ஸ்தலத்தில் இருவர் பலி

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியோரமாக ஈபிடிபி அலுவலகத்திற்கு முன்னாள் உள்ள இராணுவ பாதுகாப்புச் சோதனைச் சாவடியொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு இராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி  பலியாகியுள்ளனர்.
இந்த இரு இராணுவ வீரர்களும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு இராணுவ வீரர் மீது மற்றுமொரு இராணுவ வீரர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார்.
இந்த இரு இராணுவ வீரர்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட காரணத்தின் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
தனது சக இராணுவ வீரர் மீது தொடர்ந்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட இராணுவ வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இச் சம்வப இடத்திற்கு சென்ற யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசாராச மற்றும் சட்ட வைத்திய அதிகாரி நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.<iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/3x2LMYR0bxU" frameborder="0" allowfullscreen></iframe>

No comments:

Post a Comment