news

Sunday, April 29, 2012

லண்டனில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் தமிழ் மாணவன் முருகேசப்பிள்ளை கோபிநாத்.


லண்டனில் நடைபெறவிருக்கும் சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்காக, போட்டி ஆரம்பிப்பதற்கு முன் ஏந்தப்படும் தீபத்தினை ஏந்துவதற்காக தெரிவானவர்களுள் பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவன் ஒருவனும் தெரிவாகியுள்ளான்.

முருகேசப்பிள்ளை கோபிநாத், வயது 21. மல்லாவியைச் சேர்ந்த இம்மாணவன் நியூகாஸ்டல் பல்கலைக்கழகத்தில் உயிரியல் மருத்துவ பீடத்தில் கல்விபயின்று வருபவர்.

ஒலிம்பிக் வரவேற்பு நடைபெற்ற போதும் எத்தனையோ மொழிகளுக்குள்ளும் முதலில் ��வணக்கம்�� என தமிழிலேயே ஆரம்பிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இத் தீபம் அலுமினியத்தில் செய்யப்பட்டுள்ளது. இத்தீபத்தில் 8000 துவாரங்கள் போடப்பட்டு இருக்கின்றன.

8000 துவாரங்கள் போடப்பட்டுள்ள இத்தீபத்தினை 8000 வீரர்கள் 8000 மைல்கள் ஓட இருக்கின்றார்கள். அவர்களுள் ஒருவர் மேற்படி தமிழ் மாணவன் என்பது குறிப்பிடத்தக்க பெருமைக்குரிய விடயம்.

இத்தீபத்தை ஏந்துவதற்காக தன்னையும் தெரிவுசெய்தமையால் தான் ஆச்சரியப்பட்டதாகவும் நன்றி கூறியதாகவும் கோபிநாத் தெரிவித்திருந்தார்.

எனது உடலமைப்பை கிண்டல் செய்கின்றனர்: அஜீத்


எனது நடிப்பு முயற்சியைப் பாராட்ட மனமில்லாதவர்கள், என் தோற்றத்தையும் உடல் அமைப்பையும் கிண்டல் செய்கின்றார்கள்.
நான் 15 ஒபரேஷன்களுக்குப் பிறகு  நடப்பதே பெரிய விஷயம், என்கிறார் அஜீத் குமார்.  சமீபத்தில் அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செல்ப் புரமோஷன் பற்றி
நான் மங்காத்தாவில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன். அது 'பில்லா-2’-வுக்கும் பொருந்தும். ஜூன் மாசம் படம் வெறிவருகின்றது. இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல்லை.
மனதை பாதித்த விமர்சனம்
''படம் நல்லா இருக்கா இல்லையானு சொல்லாம, சிலர் நான் குண்டா இருக்கேன்னு பெர்சனலா கமென்ட் அடிக்கிறாங்க”. 15 ஒபரேஷன்களுக்குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு காலையும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார். அதை நினைச்சு நான் சந்தோஷப்படுறேன்.
நான் நல்ல டான்ஸரா இல்லாம இருக்கலாம். ஆனா, அதுக்காக முயற்சி பண்றேன். இவ்வளவு சிகிச்சைகளுக்குப் பிறகும் ஹெலிகாப்டர்ல இருந்து குதிக்கிறேன், சண்டை போடுறேன். ஆனா, தொடர்ந்து என் பெர்சனல் தோற்றத்தை சிலர் கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு.

நெகடிவ் விமர்சனங்கள் குறித்து
என்கிட்டயே நிறையப் பேர் சொல்லியிருக்காங்க பொறந்தா அஜீத்குமாராப் பொறக்கணும்னு. அஜீத்குமாருக்கு என்னல்லாம் கஷ்டம் இருக்குனு, அஜீத்குமாரா வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். சச்சின் டெண்டுல்கர் இப்படி ஆடணும்னு சொல்றது ரொம்ப ஈஸி. ஆனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைச் சுமந்துக்கிட்டு விளையாடுற சச்சின் டெண்டுல்கருக்குத்தான் அது எவ்வளவு கஷ்டம்னு தெரியும்.
கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு கருத்து சொல்றது ஈஸி. களத்துல இறங்கி நின்னாதான், அது எவ்வளவு கஷ்டம்னு புரியும். 30 வயசுல நம்மால எல்லாம் முடியும்னு தோணும். இப்போ 40 வயசுக்கு மேல நம்மளை மீறி ஒரு சக்தி இருக்கு... அதுதான் எல்லாத்தையும் தீர்மானிக்கும்னு தோணுது. என்னை விமர்சிக்கிற எல்லாருக்கும் அந்தப் பக்குவம் கிடைக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன்.
ரசிகர்களுக்கு
இத்தனை ஆண்டுகளில் ரசிகர்கள் பலம் கூடிக் கொண்டே இருப்பது கடவுள் ஆசீர்வாதம்தான். என் ரசிகர்களுக்கு வெறும் நன்றி சொன்னால், அது முழுமையாகாது. உண்மையைச் சொல்றேன் தினமும் காலையில் கடவுளை வேண்டும்போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன். நாளைக்கு இல்லாமலும் போவேன். ஆனா, ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அட்வைஸ்னு தப்பா நினைக்கா தீங்க. உங்க தன்மானத்தை யாருக்கா கவும் விட்டுக்கொடுக்காதீங்க.
உங்க வேலையை 100 சதவிகிதம் ரசிச்சு செய்யுங்க. நல்லாப் படிங்க. நான் பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஆனா, அந்த ரூட் ரொம்பக் கஷ்டம். படிச்சிருந்தா இவ்வளவு அடிபட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்... வாழு... வாழவிடு!''
இவ்வாறு மிகவும் உருக்கமாக தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

படத்தில் கவர்ச்சியை தவிர்க்க முடியாது: காஜல் அகர்வால்


கமர்ஷியல் படங்களில் கவர்ச்சி காட்டுவதை தவிர்க்க முடியாது என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவின் பேரனும், நாகார்ஜுன் மகனுமான நாக சைதன்யா தெலுங்கில் நடித்த படம் ‘தடா’.
இப்படம் தமிழில் ‘டைகர் விஷ்வா’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றது. இதில் காஜல் அகர்வால், சமிக்ஷா நடிக்கின்றனர்.
இது பற்றி காஜல் அகர்வால் கூறிகையில்: தமிழில் விஜய்யுடன் ‘துப்பாக்கி’, சூர்யாவுடன் ‘மாற்றான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். தெலுங்கில் நான் நடித்த படங்கள் இப்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றது.
நாக சைதன்யாவுடன் நடித்த ‘தடா’ என்ற படம் ‘டைகர் விஷ்வா’ என்ற பெயரில் வெளிவருகின்றது. இப்படத்தை அஜெய் இயக்கி உள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கின்றார். இதில் மற்றொரு நாயகியாக சமிக்ஷா நடித்துள்ளார்.
தாதாவிடம் ஹீரோ மோத வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில் கதாநாயகியின் அண்ணன் தாதாவிடம் வேலை செய்கிறார். அவர் எப்படி மீட்கப்படுகிறார் என்பது தான் கதை.
இப்படத்தின் படப்பிடிப்பை மறக்க முடியாது. ஐதராபாத்தில் தெலங்கானா பிரச்னையால் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. பின்னர் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது.
ஒரே படத்தில் 2 ஹீரோயின்கள் நடிப்பதால் கவர்ச்சிக்கு போட்டி இருக்கிறதா என்கிறார்கள். கதைக்கு தேவைப்படும்போது இரண்டுக்கு அதிகமான நடிகைகள் கூட நடித்திருக்கிறோம்.
கமர்ஷியல் படம் என்றால் கவர்ச்சி ஒரு அம்சமாகிவிடுகிறது. அதை தவிர்க்க முடியாது. இது எல்லா மொழி படங்களுக்கும் பொருந்துவதாகிவிட்டது என்றார்.

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட போர் ஆயுதங்கள் மக்கள் பார்வைக்கு..!


தமிழீழ விடுதலைப்புலிகளால் சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட போராயுதங்களை போர் நினைவுச் சின்னமாக பாதுகாத்து வைத்திருக்கும் அரசாங்கம் அவற்றின் மூலம் தான் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பதை முல்லைத்தீவில் காணமுடிகின்றது.
கடந்தவாரம் புதுக்குடியிருப்பு- முள்ளிவாய்க்கால் வீதி திறக்கப்பட்டுள்ள நிலையில், முன்னர் சிங்கள மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த தமிழரின் சொத்துக்களை மீண்டும் தமிழர்கள் காணக்கூடியதாகவுள்ளது.
இவற்றில் புலிகளால் தமது சொந்த முயற்சியல் உருவாக்கி எடுக்கப்பட்ட பாரிய படகுகள், சிறிய நீர் மூழ்கி கப்பல்கள், மற்றும் போர் ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த காட்சிக் கூடத்தை தினசரி பெருமளவான மக்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
இதனை கடந்த சில தினங்களாகவே தமிழர்கள் சென்று பார்வையிட்டுத் திரும்புகின்றனர். அதன் மூலம் உள்ளார்ந்தமாக தமது போர்த்திறனையும், எமக்கிருந்த ஆற்றலையும் கண்டு ஒவ்வொரு தமிழனும் உள்ளார்ந்தமாக மகிழ்ந்து கொள்கின்றான்.

சிவப்பு உதடு வேண்டுமா??

தன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கிறது. மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல உதடுகளும் உண்டு. கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், “வாசலின்’ தடவிக் கொள்ளலாம்.
வைட்டமின்கள் குறைபாட்டினால், உதடுகளின் ஓரத்தில் புண்கள் கூட வரலாம். இதற்கு உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். வாய்ப் பகுதியை சுற்றி உதடுகளின் ஓரத்தில் உள்ள புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறைய, வைட்டமின், “இ’ சத்துகள் நிறைந்த, “சன்ஸ்கிரீன் லோஷனை’ தடவி வரலாம்.
உதடுகளில் வெடிப்பு
அதிக குளிர் மற்றும் வெப்பத்தை தாங்க முடியாமல், சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளுடனும் காணப்படும். பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.
உதடுகள் மென்மையாக
வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து உதடுகளில் ஒத்தடம் தரவேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் ஒத்தடம் தரலாம். வாரம் மூன்றுநாட்களுக்கு இவ்வாறு செய்து வர உதடுகள் ரோஜா பூ நிறத்திற்கு மாறுவதோடு மென்மையாகும்.
வறுத்து அரைத்த உளுத்தம் மாவு 1 சிட்டிகையுடன் 1 சொட்டு தேன் கலந்து பேஸ்ட்டாக்குங்கள். இந்த பேஸ்ட்டை உதட்டில் தடவி 5 நிமிடம் கழித்து மிதமான வெந்நீரில் கழுவுங்கள். நாளடைவில் உதடுகள் ரோஜா நிறமாவதுடன்,மென்மையாகவும் ஆகும்.
தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாகும்.
மென்மையான உதடுகள்
வீட்டில் உள்ள பொருட்களே உதடுகளை அழகாக்க பயன்படுகின்றன. வெண்ணெய் அல்லது நெய்யை தினசரி உதடுகளில் தடவி வர உதடுகளில் உள்ள வெடிப்புகள் நீங்கும்.
முட்டையின் வெள்ளைக்கருவோடு சிறிதளவு பாதம் பவுடர், சிறிதளவு பாலடை கலந்து உதடுகளில் தடவி வர உதடுகள் வறட்சி நீங்கி மென்மையாகும்.
பாதம் எண்ணெயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து உதடுகளில் ஐந்து நிமிடம் தேய்க்கவும். தினசரி இதனை தேய்க்க உதடுகள் மென்மையாகும்.

பழுப்பு கண்களா? அழகாக்க டிப்ஸ் இதோ!

முகத்தின் அழகை அதிகரித்துக் காட்டுவது கண்கள். கண்ணின் கருவிழிகள் கருப்பாக இருப்பது அனைவருக்கும் இயல்பானது. சிலரது கண்கள் பழுப்பாகவும், சிலரது கண்கள் நீலமாகவும் இருக்கும். கண்களின் நிறம் கருவிழியின் மெலனோசைட்டுகளால் உற்பத்தி செய்யப்படும் மெலனின் என்ற நிறப்பொருளின் வேறுபடும் விகிதாசாரத்தினால் ஏற்படுகின்றன
பழுப்பு கண்களை உடையவர்கள் அதற்கேற்ப மேக் அப் போட்டால் கண்களை அட்ராக்டிவாக காட்ட முடியும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
பழுப்பு நிற கண்ணிற்கு மேக் அப்
பழுப்பு நிற கண்களுக்கு ஏற்ற ஐ ஷேடோவை வாங்கி பயன்படுத்தலாம். அடர் நிற ஷேடோக்கள் பழுப்பு நிற கண்ணிற்கு ஏற்றது. கருப்பு, நீலம், ப்ளு க்ரே, பர்ப்பிள் போன்றவை பழுப்பு நிற கண்களுக்கு ஏற்றது.
ஐ லைனர், மஸ்காரா போன்றவை கருப்பு அல்லது சில்வர் ஷேடோவில் இருக்கவேண்டும். கீழே உள்ள கண் இமைக்கு திக்காக போடுவதன் மூலம் கண்களின் அழகை அதிகரித்துக் காட்டும். மெட்டாலிக் நிறங்களான கோல்டு, காப்பர், சில்வர் ஐ ஷேடோக்கள் பளுப்பு நிற கண்களுக்கு ஏற்றது.
லைட் கலர் ஐ லைனர் பயன் படுத்துவன் மூலம் கண்களை எடுப்பாக காட்டலாம். லைட் ப்ளு ஐ லைனர் பென்சில் கொண்டு கீழ் இமைகளில் லேசாக வரையவேண்டும்.
நமக்கு சரும நிறத்திற்கு ஏற்ற ஐ ஷேடோ பயன்படுத்துவது ஹைலைட் ஆகும். அதேசமயம் உதட்டிற்கு டார்க் கலர் லிப் கிளாஸ் பயன்படுத்தலாம். அழகியல் நிபுணர்கள் கூறியுள்ள இந்த ஐ மேக் அப் போட்டால் பழுப்பு நிற கண்கள் பக்காவாக இருக்கும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்

சிறுமியிடம் இருந்து எனது கணவரை மீட்டுத்தாருங்கள்: மனைவி !

காதலித்து, பதிவுத் திருமணம் செய்த மனைவியை விட்டு விட்டு சிறுமி ஒருவரை கூட்டிச் சென்று கல்யாணம் செய்துகொண்ட வாலிபர் ஒருவர் யாழ் நீதிமன்றத்தினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டார் என அதிர்வு இணையம் அறிகிறது. தாவடியை சேர்ந்த (இளவயது)வாலிபர் ஒருவர் ஏற்கனவே இளம் பெண் ஒருவரைப் பதிவுத் திருமணம் செய்திருந்தார். ஆறு மாதக் குழந்தையொன்றும் இத் தம்பதிகளுக்குப் பிறந்திருந்தது.

இந்த நிலையில் இந்த வாலிபர் 17 வயதுடைய சிறுமி ஒருவரோடு காதல் வயப்பட்டாராம். பாக் பீச் இன்ரர்நெட் கஃபே என இவர்களின் காதல் நாளுக்கு நாள் வளர்ந்து கல்யாணத்தில் நிறைவடைய வேண்டிய நிலைக்கு வந்தது. காரணம் இவர்களுக்கு இடயே ஏற்பட்ட உடலுறவு. இருவரும் இரகசியமாக வீட்டை விட்டுக் கிளம்பியிருந்தார்கள். தனது கணவன் இரகசியமாகக் காதலியைக் கூட்டிச் சென்றுவிட்ட செய்தியை அறிந்த மனைவி அதிர்ச்சியடைந்தார். யாழ். சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவில் இதுபற்றி கைக்குழந்தையுடன் சென்று முறைப்பாடு செய்திருந்தார். தனது கணவனை சிறுமியிடமிருந்து மீட்டுத்தருமாறு பொலிஸாரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பொலிஸார் பிடியாணையுடன் கணவணையும், காதலியையும் தேடிக்கண்டு பிடித்து கைது செய்தனர். யாழ் நீதிமன்றில் இவர்களை நேற்று முன்தினம் பொலிசார் ஆஜர் செய்தனர். எதிர்வரும் ஒன்பதாம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். யாழ் கலச்சாரம் எங்கே சென்றுகொண்டு இருக்கிறது. கட்டிய மனைவி தன் கணவனை சிறுமியிடம் இருந்து மீட்டுத்தருமாறு வேண்டி நிற்கிறாரே ! கணவன் கைதுசெய்யப்படுவதால், திருந்திவிடுவாரா ? இல்லை திரும்பவும் மனைவியுடன் வந்து வாழும்போது அந்த 17 வயதுக் காதலியை மறந்து தான் போய்விடுவார ? கல்யாணம் முடித்த ஆண் என்றுகூடப் பாராமல் சிறுமி அவரோடு பழக என்ன காரணம் ? உங்கள் கருத்துக்களையும் கொஞ்சம் பதிவுசெய்யுங்கள். நன்றி !

Saturday, April 28, 2012

காரில் செக்ஸ் வைத்துக் கொண்ட ஜோடிகள்! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு

உண்மையில் நீங்கள் இங்கே இருக்கின்ற விந்தையான ஜோடிகளைப் பார்த்து சற்று மிரளத்தான் போகின்றீர்கள்.

ஆனால் ஒன்று மட்டும் நன்றாகப் புரிகின்றது… இந்தப் படங்களை எடுத்த புகைப்படப் பிடிப்பாளர் நல்ல சக்தி வாய்ந்த கமரா லென்ஸ்களைப் பயன்படுத்தியுள்ளார்..

எவ்வளவு நுணுக்கமாக இந்தப் படப் பிடிப்பாளர் படம் பிடித்துள்ளார் என்று பாருங்கள்…

எங்கு என்று இல்லை உயிருள்ள ஜீவன்கள் செக்ஸ் உறவு கொள்ளும் காட்சிகளே இவை.. எங்கே நீங்களும் பாருங்களேன் இந்தக் காட்சிகளை…







கொடி போல இடை வேண்டுமா? இதைப் படிங்க!!

பெண்களின் இடையே கொடியோடு ஒப்பிட்டு கவிஞர்கள் எழுதியுள்ளனர். ஆனால் இன்றைய உணவுப்பழக்கத்தினால் ஜீரோ சைஸ் இடை ஒரு சிலருக்கு மட்டுமே வாய்கிறது.

இடுப்பு பகுதியில் அதிகம் சதை போட்டால் உடலின் அழகான வடிவமே மாறிவிடும். அந்த அளவிற்கு உடலின் வடிவத்தோடு தொடர்புடையது. சரியான உடற்பயிற்சி மேற்கொண்டால் அனைவராலும் கொடி போன்ற இடைக்கு மாறமுடியும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். ஜிம் போகாமல், செலவு செய்யாமல் கொடி இடை பெற நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றலாம்.

சிக் உடல் பெற

கச்சிதமான உடலுடன் இருக்க விரும்பும் பெண்களுக்கு உடலில் அதற்கு தகுந்த மாதிரி தசை இருப்பது அவசியம். சிறிய தசைகள் மீது போதிய கவனம் செலுத்தினால் உடல் நல்ல வடிவத்தைப் பெறும். இந்த தசைகளைச் சுற்றி குறைந்த அளவு கொழுப்பே இருப்பதால் மேக்ரோ ஏரியாக்கள் எனப்படும் தொடை மற்றும் பின்புறம் மீதே நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். சிறிய தசைகள் உள்ள பகுதிகளில் கவனம் செலுத்துவதன் மூலம் குறைந்த காலத்தில் சிக் கென்ற உடம்பைப் பெற முடியும்.

வயிற்றுப் பயிற்சி

தட்டையான வயிற்றைப் பெற இந்தப் பயிற்சியைப் பெறவும். தரையில் மல்லாந்து படுக்கவும். பாதம் தரையில் படும்படி இருக்க வேண்டும். கைகளை விட்டம் நோக்கி உயர்த்தும் போது வயிற்றை இறுக்கமாக வைத்திருக்கவும். இடுப்புப் பகுதியிலிருந்து கால்களை உயர்த்தவும். கொண்டைக்கால் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். முதுகை தட்டையாக தரையில் படும்படி வைத்து கைகளை தலையை நோக்கி கொண்டு வரவும். இதே சமயத்தில் உங்கள் வலது காலை நீட்டவும். ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும். மீண்டும் பழைய நிலைக்கு வந்து இடது காலை நீட்டவும்.

அழகான தோள்கள்

நல்ல வடிவமான தோள்கள் உங்கள் இடுப்பை சிறியதாகக் காட்ட உதவும். இதற்கு மிக எளிதான பயிற்சி ஒன்று உள்ளது. தரையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு கைகளைப் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். இந்த நிலையில் தலை மற்றும் மார்பை உயர்த்தவும்.

தோள் பட்டையை குறுக்கி வயிற்றுத் தசைகளை இறுக்கமாக வைத்துக் கொண்டு நிமிரவும். இந்த நிலையில் ஒன்று முதல் ஆறுவரை எண்ணவும். இந்த பயிற்சியை 12 தடவைகள் செய்யவும்.

முதுகுப் பயிற்சி

வலிமையான முதுகு உங்கள் தோற்றத்தை செம்மையாக்கும். உங்களை ஸ்லிம்மாக காட்ட உதவும். ஒரு நாற்காலியில் உட்கார்ந்து பாதங்களைத் தரையில் பதித்துக் கொள்ளுங்கள். அப்படியே முன்புறமாக முதுகை (நிமிர்த்திய நிலையில்) வளைத்து முழங்கால்களின் மீது மார்பு படும் நிலைக்கு வரவும். உங்கள் கைகள் ஒவ்வொன்றிலும் 2 அல்லது 3 கிலோ எடையை பிடித்துக் கொண்டு கீழ்புறமாக தொங்க விடவும். கைகளை மெல்ல தோளுக்கு இணையாக (பக்க வாட்டில்) உயர்த்தவும். பிறகு மெல்ல கீழிறக்கவும். 10 தடவை இப்படிச் செய்யவும். இடைவெளி விட்டுவிட்டு இந்தப் பயிற்சியை 3 முறை செய்யவும்.

இடுப்பு குறைய

படுக்கையை விரித்து அதில் வலது புறம் திரும்பி படுக்கவும். வலது கையை தலைக்கு மேல் நீட்டவும், இடது கையை வயிற்றின் முன் பகுதியில் ஊன்றிபடி வைக்கவும். வலதுகாலின் மீது இடதுகால் இருக்குமாறு வைக்கவும்.

இதே நிலையில் மெதுவாக இடதுகாலை 45 டிகிரி அளவிற்கு உயர்த்தவும். இருபது எண்ணும் வரை மேலே உயர்த்தியவாறு இருக்கவும். பின்னர் மெதுவாக பொஸிசனுக்கு வரவும். இதேபோல் இடது பக்கம் திரும்பி படுத்து வலது காலை உயர்த்தவும். இதனால் தொடை, இடுப்பு பகுதிகள் ஒரு வடிவத்திற்கு வரும்.

ஜன்னலைப் பிடித்துக் கொண்டு இடுப்பைத் திருப்ப வேண்டும். கால்களுக்குக் கீழே பவுடரைப் போட்டு வட்டமாகத் திருப்பினால் இடுப்பும் சரியான முறையில் அமையும். இது நல்ல பயிற்சியாகும். தினசரி செய்து வந்தால் கொடியிடையைப் பெறலாம்.

புளிப்பு வேண்டாம்

அன்னாசிப் பழம் கொழுப்பை கரைக்கும். அன்னாசிப் பழத்தை வெட்டி ஓமம் சேர்த்து வேகவைத்து வடிகட்டி குடிக்க இடுப்பு சதை குறையும்.

புளிப்பான பொருட்களான புளித்த தயிர், புளிக்குழம்பு போன்றவைகளை சாப்பிடக் கூடாது, அதேபோல் ஊறுகாயும் சாப்பிடக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள். எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்பு உணவுகளை தவிர்த்து விடவேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஓபாமாவின் காவலாளிகள் காம லீலை அம்பலம் !

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஓபாமா கொலம்பியா செல்லவிருந்தார். அவர் அங்குசெல்ல முன்னர், ஓபாமாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தனிப்பட்ட காவலாளிகள் பலர் அங்கே அனுப்பப்பட்டனர். இவர்கள் அனைவரும் அதிபர் ஓபாமாவின் பிரத்தியேகக் காவலாளிகள் ஆவர். இவர்களில் சுமார் 11 பேர் கொலம்பியாவில் உள்ள பிளே-கிளப் என்னும் களியாட்ட விடுதியில் மது அருந்திவிட்டு, விலைமாதுகளுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். ஓபாமாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்காமல், இவர்கள் பல முறை அந்த களியாட்ட விடுதிக்குச் சென்றுள்ளனர்.

அங்கே தானிய என்று அழைக்கப்படும் பெண்ணோடு உல்லாசமாக இருக்க 800 டாலர்கள் விலைபேசியுள்ளனர். இருப்பினும் 250 டாலரை இறுதியாகக் கொடுத்து அவர்கள் அப்பெண்ணோடு காமக் களியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 9 அதிகாரிகளும் 2 உயரதிகாரிகளும் இவ்வாறு உல்லாசமாக இருந்ததை அமெரிக்க உளவுத்துறை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டது. இவ்விடையம் அமெரிக்க தலைமைக்கு தெரியவந்ததை அடுத்து இந்தப் 11 பேரையும் உடனடியாக நாடு திரும்புமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

தற்போது கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையில், இவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மேல் தீவிர விசாரணைகள் நடைபெறவிருப்பதாகவும் அறியப்படுகிறது. இவர்கள் சாதாரணமாக மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அல்லர் என்றும், இவர்களுக்கு யாராவது போதைப் பொருட்களைக் கொடுத்து விலைமாதரிடம் செல்லுமாறு தூண்டியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதனூடாக அமெரிக்க அதிபர் ஓபாமாவின் வரவு குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கலாம் எனவும், மேலும் பல இரகசியங்கள் கசிந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

விலைமாதுக்களை கைதுசெய்யாமல், அவர்களை இரகசிய அறை ஒன்றில் வைத்து அமெரிக்க உளவு நிறுவனம் விசாரணைகளை நடத்திவருவதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன

இலங்கையில் ஜம்மியத்துல் உலமாவுக்குள் பிளவு: புதிய அமைப்பு நடவடிக்கை ஆரம்பம்


தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டமை தொடர்பான விடயத்தை அடுத்து, இலங்கையில் பலமிக்க இஸ்லாமிய இயக்கமாக இருந்து வந்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கு எதிராக மற்றும் ஒரு சபை நேற்று முதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை என்ற பெயரில் இந்த அமைப்பே நேற்று தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட போதும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து வந்தது.
எனினும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, இலங்கையின் அரசாங்கத்துடன் இணைந்துள்ள முஸ்லிம் அமைச்சர்களுக்கு ஆதரவாக செயற்படுகிறது. அது தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதல் விடயத்தில் உரிய எதிர்ப்புகளை வெளியிடவில்லை
எனவே, தாம் இனிமேல் முஸ்லிம் மக்களுக்கான உரிமைகளுக்காக போராட்டப்போவதாக இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவில் இணைந்திருக்கப் போவதில்லை என்றும் இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி மிப்லால் தெரிவித்துள்ளார்.

விஜய்யை பின்னுக்குத்தள்ளிய விஜயகாந்த் மகன்!

தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்து மெகா ஹிட்டான படம் பிருந்தாவனம்.
அப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவும் அதன் தமிழ் உரிமையை வாங்கவும் கோலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களிற்கு இடையே விஜய் உட்பட பெரும் போட்டி நடந்து வந்துள்ளது.
ஆனால் அவர்களைப் பின்னுக்குத்தள்ளி பிருந்தாவனம் படத்தின் தமிழ் உரிமையை வாங்கியுள்ளார் விஜயகாந்த். அவருக்கு அல்ல அவருடைய மகன்  சண்முகபாண்டியனுக்காக.  அந்தப்படத்தின் தயாரிப்பாளரும் விஜயகாந்த் கேட்டதும் எந்த நிபந்தனையோ பேரமோ இல்லாமல் உடனையே கொடுத்துவிட்டாராம்.
நடிகரும் கட்சித்தலைவருமான விஜயகாந்த் தனது இரண்டாவது மகனை எப்படியாவது ஹீரோ ஆக்குவதற்கு பல இயக்குனர்களிடமும் கதை கேட்டு வந்துள்ளார். ஆனால் எந்தக் கதையும் அவருக்கும் அவரது மகனுக்கும் புடிக்கவில்லையாம்.
எதுவும் கைகூடாததால் கடைசியில் பிருந்தாவனம் படத்தையே ரீமேக் செய்யும் முடிவுக்கு வந்துள்ளார். ஜூனியர் என்டிஆர் நடித்த பிருந்தாவனம். விஜயகாந்தின் சொந்த நிறுவனமான‌ கேப்டன் சினி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தமிழில் சண்முகபாண்டியனின் அறிமுகப் படமாக ரீமேக் செய்கிறது.
படத்தில் சண்முக பாண்டியனுக்கு இரண்டு நாயகிகளாம். முன்னணி இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நட்பு: தமிழ்நட்பு: சினிமாவை பாடல்கலை மிஞ்சும் திருமண வீடி...

தமிழ்நட்பு: தமிழ்நட்பு: சினிமாவை பாடல்கலை மிஞ்சும் திருமண வீடி...: தமிழ்நட்பு: சினிமாவை பாடல்கலை மிஞ்சும் திருமண வீடியோ பாடல் : youtube விடியோவில் என் கண்ணுக்கு தென்பட்ட இலங்கையில் புத்தளத்தில் எடுக்கப்பட்ட ...

தமிழ்நட்பு: ரோஸ் லிப்ஸ் வேணுமா? இதப்படிங்க !

தமிழ்நட்பு: ரோஸ் லிப்ஸ் வேணுமா? இதப்படிங்க !: தன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கிறது. மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில்க...

கொத்தணி குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை

வன்னியில் மனிதாபிமான நடவடிக்கையின் போது எவ்விதமான தடைச் செய்யப்பட்ட ஆயுதங்களையும் இலங்கை இராணுவம் பயன்படுத்தவில்லை. கொத்தணிக்குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அடிப்படை தன்மையற்றவை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பில் கொத்தணிக்குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டதாக வெளியாகின்ற செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. அதே போன்று பளையில் சிறுவர்கள் இருவர் கைக்குண்டு வெடித்து மரணித்தமைக்கும் புதுக்குடியிருப்பு செய்திக்கும் தொடர்பில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிக சூரிய தொடர்ந்தும் கூறுகையில்,
இலங்கையில் வடக்கு பிரதேசம் ஒன்றில் கொத்தணிக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச இணையத்தள செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது. இச் செய்தியானது இலங்கைக்கும் இராணுவத்திற்கும் அபகீர்த்தியாகவே அமைந்துள்ளது.
அத்தோடு மேற்படி குற்றச்சாட்டினை இலங்கை இராணுவம் அடியோடு மறுக்கின்றது. ஏனென்றால் வடக்கில் நிலை கொண்டிருந்த புலி பயங்கரவாதிகளை அழித்து அங்கிருந்து பொது மக்களை பாதுகாப்பாக மீட்டெடுப்பதற்காக இராணுவம் கடந்த காலங்களில் தியாகபூர்வமாக செயற்பட்டது.
சர்வதேச போர் ஒழுக்க நெறிகளை கையாண்டு பொது மக்களின் உயிர் சேதங்களை முழு அளவில் கட்டுப்படுத்தி மிகவும் வெளிப்படை தன்மையுடனேயே உள்நாட்டுப் போரை முடிவிற்கு கொண்டு வந்தோம். ஆனால் தற்போது போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினை என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை சர்வதேச நாடுகள் இராணுவத்திற்கு எதிராக சுமத்துகின்றன.
தற்போது கொத்தணிக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றமை பொய்யான தகவலாகும். நல்லிணக்க ஆணைக்குழுவை பரிந்துரைகளில் இராணுவத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து விசாரித்து வருகிறோம் எனக்கூறினார்.

விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? காரணம் கூறுகிறார் கருணாநிதி!


இலங்கையில் இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வெற்றிபெறாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம் ஓரணியாய் நின்று போரிடாததுதான் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஈழத் தமிழர்கள் மீது இன்றைக்குக் காட்டும் உணர்வுபூர்வமான அக்கறையை இலங்கையில் போர் நடைபெற்றபோதே காட்டியிருக்கக் கூடாதா என்ற ஆதங்கம் உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழர்களுக்கு இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்று எண்ணுகின்றனர்.
ஆனால் கேட்பவர்களுக்கே தெரியும். விடுதலைப் புலிகள் வெற்றியைப் பெறாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம் ஓரணியாய் நின்று போரிடாததுதான்.
சகோதர யுத்தம் வேண்டாம் என்று காலில் விழாத குறையாக ஒவ்வொரு அணியினரின் கரம் பிடித்து கெஞ்சிக் கேட்டும், அவர்களின் உள்பகையைத் தீர்க்க முடியவில்லை.
இந்த உள்பகையால் ஓர் இனம் பெற வேண்டிய வெற்றியின் காலகட்டத்தையே தள்ளிப் போட வேண்டிய சோக நிகழ்வாக அமைந்துவிட்டது.
இறுதி யுத்தம் நடைபெற்றபோது அதை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் இயன்றவரை எல்லா நடவடிக்கைகளையும் செய்தது. ஆனால், இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிகளையெல்லாம் மீறி, தமிழ்ப் போராளிகளைக் கொன்று குவித்தது.
சகோதர யுத்தத்தினால் ஏற்பட்ட சரிவைப் பயன்படுத்தியே இலங்கை அரசு வெற்றிபெற்றது. இருப்பினும், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட தோல்வி நிரந்தரமானது இல்லை.
களத்தில் மறைந்த அனைவருக்கும் இறுதி வணக்கத்தைத் தெரிவித்து, தமிழ் இனம் தலைநிமிர உடல், பொருள், ஆவி அனைத்தையும் தரத் தயங்கமாட்டோம் என்ற உறுதியுடன் அறப்போர் தொடர்ந்திட அணிவகுப்போம் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Friday, April 27, 2012

விரிவான செய்திகள்    இலங்கையில் ஆபாச வலையத்தளத்துக்கு இழுத்துச் செல்லும் வைரஸ் !

பிரதிகூலமான கணினி வைரஸ் ஒன்றின் காரணமாக கணினி பாவனையாளர்கள் இணையத்தில் பிரவேசிப்பதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக, இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த வைரஸ் கணினிக்குள் நுழைந்த பின் கணினியில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு இணையத்திற்கு பிரவேசிப்பவர்களை ஆபாச இணையத்தின் பக்கமாக இழுத்துச் செல்வதாகவும் அந்தப் பிரிவு எச்சரித்துள்ளது.

க்ட்ட்://ந்ந்ந்.ட்cந்க்.ஒர்க்/டெடெcட் என்ற இணையத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் குறித்த வைரஸில் இருந்து உங்கள் கணினியை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த வைரஸ் குறித்து இதுவரை தமக்கு எதுவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 9ம் திகதி குறித்த வைரஸில் இருந்து பாதுகாப்பை பெறும் வகையில் அமெரிக்காவின் FBஈ விசாரணை பிரிவு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அதன் பின்னர் அந்த வைரஸ் தாக்கப்பட்டுள்ள கணினிகளில் இருந்து இணையத்திற்கு பிரவேசிக்க முடியாது என்றும் சொல்லப்படுகிறது. உலகில் சுமார் 3 மில்லியன் மக்களின் கணணிகளை இந்த வைரஸ் தற்போது பாதித்துள்ளதாக FBஈ தெரிவித்துள்ளது

திருக்கேதீஸ்வர புனித பூமியிலிருந்து புத்த கோவில் விடுதிகள் அகற்றப்படவேண்டும்: ஜமமு

ஏனைய இந்து கோவில் உடைப்பு முயற்சிகள் கைவிடப்பட வேண்டும். ஹெல உறுமயவின் இந்து, முஸ்லிம் கோவில் அழிப்பு, புத்தமத ஆக்கிரமிப்பு திட்டம் இந்த நாட்டுக்கு பொருத்தமற்றது. புத்தமதத்தை பாதுகாப்பதென்பது ஏனைய மதங்களை அழிப்பதுமல்ல, ஆக்கிரமிப்பதுமல்ல.
தம்புள்ளையிலும் இரண்டு இந்துக் கோவில்களை அகற்ற நகர அபிவிருத்தி அதிகாரசபை கோரியுள்ளது, திருகோணமலையில் வைத்தியசாலை வளாகத்துள் பல்லாண்டுகளாக உள்ள இக்கோவிலின் ஒருபகுதியை உடைக்க கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. தம்புள்ளையிலும் இரண்டு இந்துக் கோவில்களை அகற்ற நகர அபிவிருத்தி அதிகாரசபை கோரியுள்ளது, திருகோணமலையில் வைத்தியசாலை வளாகத்துள் பல்லாண்டுகளாக உள்ள இந்துக்கோவிலின் ஒருபகுதியை உடைக்க கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. பல இடங்களில் பெறுமதி மிக்க சிலைகள் உடைத்து களவாடப்பட்டு விட்டது. இந்த பின்னணியில், இந்துமதத்தை காப்பாற்ற வேண்டிய கடமையும் காலத்தின் கட்டாயமும் எழுந்த்துள்ளது அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் இந்த நாட்டின் இந்து மத இருப்பை, வியாபஹத்தை, புனிதத்தை, மேலாக வரலாற்றை காப்பாற்ற வேண்டிய தேவை எழுந்துவிட்டது. இனவாதம் மதவாத மாகிவிட்டது.
இஸ்லாமிய சகோதரர்கள் சிறந்த முன்மாதிரியாக நடந்துகொண்டார்கள். இஸ்லாமிய சகோதரர்கள் பல அரசியல் நிலைப்பாட்டுக்கும் மத்தியிலும், தமது அமைச்சு மற்றும் ஆளுநர் பதவிகள் என்று கூட தயங்காது தமது மத விடயத்தில் ஒன்றுபட்டு வரலாற்றை அடித்து கூறினார்கள் தம்புள்ள பள்ளிவாசலை காப்பாற்ற முன்வந்தார்கள். தம் காட்டமான கருத்தினால் தம் இஸ்லாமிய பள்ளியின் பாரம்பரிய உரிமைகளை காப்பாற்றிய முஸ்லீம் அமைச்சர்கள், ஆளுநர் போல் வல்ல தமிழ் அமைச்சச்சர்கள் இந்துக்கோவில்களை காப்பாற்ற முன்வரமட்டர்களா எனும் ஆதங்கம் தமிழ் இந்து சைவ மக்களிடம் எழுந்து இருப்பது நியாயமானதே. அமைச்சர்களாய் இருந்தும் கூட பள்ளியை அகற்றினால் விளைவு பாரதூரமாகும் என்றார் நண்பர் ரவுப் ஹக்கீம்.
இன்னுமொரு அமைச்சர் ரிஷாத் பது இடீன் முரண்பட்டால் முரண்படத்தயார் என்றார். பெருமைக்குரியவர்கள், புத்தமதத்தை பாதுகாப்பதென்பது ஏனைய மதங்களை அழிப்பதல்ல ஆக்கிரமிப்பதுமல்ல. இது ஒரு பல்லினம் வாழும் நாடு, அமெரிக்காவைப்போல கானடாவைப்போல இங்கு எல்லோரும் வந்தேறு குடிகளே. ALL ARE MIGRANTS EXCEPT YAKKAAS AND NAAGAAS IF LIVING
அகில இலங்கை இந்து காங்கரஸ் கூட தமிழ் தலைவர்களுக்கு அவசர அழைப்பினை விடுத்துள்ளது இந்து கோவில்களை காப்பாற்ற வாருங்கள் என்று. அப்படி மோசமான நிலை. திருகேதீஸ்வரத்தில் ஒரு புத்தரும் இல்லை வெகுசில ராணுவத்தினர் மட்டுமே, ஏன் புத்தருக்கு கோவில்? சில வருடங்களின் பின் இங்கும் புத்தர்கள் வாழ்ந்தார்கள் என்று சொல்லவா?. தம்புள்ளையிலும் இரண்டு இந்துக் கோவில்களை அகற்ற நகர அபிவிருத்தி அதிகாரசபை கோரியுள்ளது இந்துக்கள் இங்கு வாழ்ந்தார்கள் எனும் வரலாற்றை மறைக்கவா?,
திருகோணமலையில் வைத்தியசாலை வளாகத்துள் பல்லாண்டுகளாக உள்ள இக்கோவிலின் ஒருபகுதியை உடைக்க கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறதாம். பல இடங்களில் பெறுமதி மிக்க சிலைகள் உடைத்து களவாடப்பட்டு விட்டது. இந்துமதத்தை காப்பாற்ற வேண்டிய கடமையும் காலத்தின் கட்டாயமும் எழுந்த்துள்ளது. அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் இந்த நாட்டின் இந்து மத இருப்பை, வியாபஹத்தை புனிதத்தை, மேலாக வரலாற்றை காப்பாற்ற வேண்டிய தேவை எழுந்துவிட்டது. கடந்தகால இனவாதம் இன்று மதவாத மாகிவிட்டது.

யாழில் வைத்தே யாழ்ப்பாணத்தானுக்கு ஆப்படிக்கும் சிங்களவர்கள்!

யாழ்ப்பாணத்தின் சில முக்கிய வீதிகளின் புனர் நிர்மாணப் பணிகள் முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றன.
இந்த நடவடிக்கைகளில் சிங்கள ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.
வீதிகளை அகலமாக்கும் போது அங்கிருந்த மண் முதலில் வெட்டி எடுக்கப்பட்டு பின்னர் குறித்த இடத்தில் கிறசர் மண் பரவப்படுகின்றது.
குறித்த இடங்களில் வெட்டி எடுக்கப்படும் மண் அந்தப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்களுக்கே நயவஞ்சகமாகப் பேசி விற்கப்படுகின்றது.
சிங்களவர்களின் இந்த மண் வியாபாரமானது அங்கு கொடி கட்டிப் பறப்பதாக யாழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இப்படியாக வெட்டப்படும் மண் 3500 ரூபாயில் இருந்து 4500 ரூபாய் வரை பேசி விற்கப்படுகின்றது.
சிங்கள ஒப்பந்தக் காரர்களின் இந்த நடவடிக்கைக்கு அனுமதி கொடுத்தது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இது தவிர, யாழ்ப்பாணத்தில் உள்ள ஏராளமான ஒழுங்கைகள், வீதிகள் போன்றவை குண்டும் குழியுமாக இருப்பதனால் மழை காலத்தில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை! அரசின் அறிவிப்பால் அதிர்ச்சியானார் சுஸ்மா சுவராஜ்!!

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு 13வது அரசிலயமைப்புத் திருத்தம் தொடர்பாக எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது குறித்து, இந்தியக் குழுவுக்குத் தலைமையேற்றிருந்த, இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக்குழுவிடம் 13வது திருத்தம் மற்றும் அதற்கு அப்பாலான அதிகாரங்களைப் பகிரும் பொறுப்பு தனக்கு இருப்பதாக சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார்.
இதனை சுஸ்மா சுவராஜ் கொழும்பிலும் பின்னர் புதுடெல்லயிலும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், அப்படியான எந்த வாக்குறுதியும் சுஸ்மா சுவராஜுக்கு சிறிலங்கா அதிபர் வழங்கவில்லை என்று சிறிலங்கா அரச வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குக் கூறியிருந்தன.
இது இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அரசின் இந்த நிலைப்பாடு குறித்துக் கண்டனம் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர மறுக்கின்ற சிறிலங்கா அதிபரின் இந்தக் கருத்து தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

உத்தரவின்றி அமைக்கப்பட்ட அனைத்து புத்தர் சிலைகளும் உடைத்து அகற்ற வேண்டும்!

அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து புத்தர் சிலைகளும் உடைத்து அகற்றப்பட வேண்டும் எனவும் தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பில் எந்த அடிப்படைவாத கருத்துக்களையும் தாம் வெளியிடவில்லை எனவும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ஆசாத் சாலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நான் எந்த சந்தர்ப்பத்திலும் அடிப்படைவாத கருத்துக்களை வெளியிட்டதில்லை.
எனினும் சட்டவிரோதமான அனுமதியற்ற சமய வழிப்பாட்டு தலங்கள் அகற்றப்பட வேண்டுமாயின் அனைத்து சட்டவிரோத மத வழிப்பாட்டு தலங்களையும் அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன்.
நான் இவ்வாறு தெரிவித்த கருத்துக்களை பௌத்த அடிப்படைவாதிகளும் இனவாதிகளும் திரிபுபடுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர். இவற்றை தடுக்க என்னால் முடியாது.
எனினும் அரசாங்கம் இவற்றுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்க வேண்டும்.
இந்த நாட்டில் உள்ளவர்கள் சிலருக்கு இன, மத பேதங்களை ஏற்படுத்தி அவற்றில் பிரயோசனமடையும் தேவையுள்ளது எனவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

காகிதக் கப்பல் விடுவதற்காய் எமை அழைக்கும் கலைஞர் கருணாநிதி!

நன்றாகப் பேசவும் எழுதவும் தெரிந்த ஒரு அறிஞர் என்று உலகத் தமிழினமே நம்பியிருந்த கலைஞர் கருணாநிதி, உலகத் தமிழர்களுக்கே வஞ்சனை செய்த வடுக்களோடு கடந்த தமிழ்நாட்டுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.
அப்போது தான் தெரிந்தது அவர் பொருளோடு பேசும் ஆற்றல் கொண்டவர் மட்டுமல்ல, நன்கு பொருள் சேர்க்கத் தெரிந்த ஒரு “வியாபாரி” என்பது.
தமிழ் நாட்டு அரசியல் பதவி மூலம் தமிழுக்கும் தமிழர்களுக்கு சேவை செய்வதை மறந்து தனக்கும் தனது குடும்பத்திற்கும் சொத்துச் சேர்ப்பதில் செல்வாக்கை பலப்படுத்துவதிலும், துரிதமான செயற்பட்ட ஒரு “செயல் வீரன்” கருணாநிதி என்பதை அனைவருமே நன்கு உணர்ந்து கொண்டார்கள்.
இந்திய மத்திய அரசில் நன்கு செல்வாக்குச் செலுத்தக் கூடிய அரசியல் மற்றும் பொருளாதார பலம் இருந்தும் அருகே உள்ள நாட்டில் அவதிப்பட்ட போராளிகளையும் பொதுமக்களையும் காப்பாற்றுவதற்கு இதயமே இல்லாத ஒரு மனிதனாகவே அன்று அவர் அனைவருக்கும் தெரிந்தார்.
வன்னி மண்ணிலும் இன்னும் பல இடங்களிலும் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளும் அவர்களுக்கு பக்க பலமாக நின்றிருந்த பொதுமக்களும் குறி வைத்து நடத்தப்பட்ட போரின் போது இன்று என்ன நடக்கும், நாளை என்ன நடக்கும் என்பதையெல்லாம் நன்கு அறிந்து கொண்டு ஒன்றும் அறியாதவராக பாசாங்கு செய்து, இறுதியில் முள்ளிவாய்க்காலோடு முடக்கப்பட்ட நமது விடுதலைப் போராட்டத்தின் “சாவை”க் கண்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டவர்தான் இந்த முத்துவேல் கருணாநிதி.
வெற்றியின் விளிம்பில் நின்ற விடுதலைப் புலிகளின் கனவை நனவாக்கக் கூடிய வல்லமை இருந்தும் அந்த போராட்டம் அடங்கினால் தமிழ் நாட்டில் தனக்கெதிராகப் பேசும் அரசியல் செயற்பாட்டாளர்களை அடக்கி விடலாம் என்று கனவு கண்டவரும் இந்த கருணாநிதி தான்.
தமிழீழம் என்று பெயரிட்டு நாம் வளர்த்து வந்த அந்த பச்சைக் கிளியை கொன்று எரிவதற்கு துணை நின்றவர்தான் இவர். எத்தனையோ ஆயிரம் போராளிகளின் இரத்தம் சிந்திய உடல்களை தமது கைகளால் அடக்கம் செய்து விட்டு அடுத்து நிமிடம் மண் மீட்புப் போரை நடத்துவதற்கு அணிவகுத்து நின்ற போராளிகளை கொத்துக் கொத்தாய் கொன்றழிப்பதற்கு “பச்சைக் கொடி” காட்டிய “இச்சை அரசன்” தான் இவர்.
இவருக்கு என்ன நடந்ததோ தெரியாது, சிறிது காலம் பேசாமல் இருந்த இந்த “பெரியவர்” இப்போது பேசுவதற்கு தனது வாயைத் திறந்துள்ளார். முன்னர் அவர் பதவியிலிருந்த போது ஈழ மண்ணில் அந்த கொடுமைகள் அரங்கேறின. உலகமே திரண்டு வந்து அங்கு அணிவகுத்து நின்றது.
வான் பரப்பில் இரைச்சல்களோடு பறந்து செல்லும் விமானங்களும் கடலைக் கிழித்தபடி நமது மண்ணைச் சூறையாடச் சென்ற கொடிய போர்க் கப்பல்கள் எல்லாம் அவரது தமிழ் நாட்டு வான்பரப்பினூடாகவும், தமிழ்நாடு சார்ந்த கடற் பிரதேசத்தின் ஊடாகவே “பறந்திருக்க” வேண்டும். அப்போதெல்லாம் அவர் கடைப்பிடித்த கடும் விரதம் மௌனம் தான்.
இந்தக் கருணாநிதியின் இப்போது தமிழீழம் பற்றிப் பேசுகின்றார். தமிழீழம் அமைவதற்கான அனைத்து சாதகமான சூழ்நிலையிருந்தும், அது நிகழக்கூடாது என்று விரும்பிய அல்லது எண்ணிய ஏனைய அரசியல் சக்திகளோடு கைகோர்த்து நின்று அவர் அதனைச் சாதித்தார். எத்தனையோ போராளிகளையும் பொது மக்களையும் சமாதியாக்கினார்.
இராணுவ பலம் கொண்ட நாடுகள் கூட எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு இராணுவ தளபாடங்கள் மற்றும் சுயமான செயற்பாடுகள் அதனோடு பலமான எதிரிகளோடு மோதக் கூடிய வகையிலான புதிய கண்டு பிடிப்புக்கள், மரணத்தைக் கண்டு அஞ்சாத அர்ப்பணிப்புள்ள நெஞ்சங்கள், புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து கிடைத்த தாராளமான பொருளுதவிகள், தொழில் நுட்ப பலம்.. இவை அனைத்தும் கொண்ட நமது விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் ஒப்பற்ற தலைவர்களும் கொடூரமான முறையில் கொன்றழிக்கப்படும் காட்சியை தனது மனக்கண்களால் கண்டு மகிழ்ந்திருப்பார் இந்த முத்துவேல் கருணாநிதி.
கண்ணுக்கு எட்டிய தூரத்திலிருந்த தமிழீழம்; என்ற தாயை கதறக் கதற அடித்துத் துரத்துவதற்கு துணை நின்றவர் கருணாநிதி. விடுதலை வேட்கை என்ற அந்த ஒப்பில்லாத தியாக உணர்வு இனிமேலும் ஒருபோதும் அந்த மண்ணில் துளிர் விடக் கூடாது என்று எந்தளவிற்கு இலங்கை ஜனாதிபதி மகிந்தா உறுதியாக இருந்தாரோ அதனை விஞ்சுகின்ற அளவிற்கு கலைஞர் கருணாநிதிக்கும் கருத்துக்கள் இருந்திருக்கின்றன. அதை அவரது அன்றைய நடவடிக்கைகள் அனைத்துமே நமக்கு காட்டி நின்றன.
உலகமே வியந்த விடுதலை இயக்கத்தை உலகமே திரண்டு வந்து அழி;க்கின்றது என்று தமிழ் நாட்டில் மூலை முடுக்கெல்லாம் தமிழ் உறவுகள் தீக்குளித்தும் தற்கொலை செய்து கொண்டும் உண்ணா நோன்பிருந்தும் தங்கள் அனுதாபத்தையும் ஆதரவவை காட்டி நின்ற வண்ணம், இந்தியாவின் மத்திய அரசிற்கு உங்கள் எதிரப்பைத் தெரிவிக்கும் வண்ணம் மத்திய அரசில் திமுக வகித்த அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்யுங்கள் என்று தமிழக மக்கள் கெஞ்சிக் கேட்டும் சற்றும் மனம் மாறாத ஒரு மாற்றானை ஒத்து நடந்து கொண்ட இந்தக் கலைஞர் இப்போது தமிழ் ஈழம் பற்றி பேசத் தொடங்கியுள்ளார்.
மத்திய அரசின் கபடமோ அன்றி மு. கருணாநிதியிடம் இயல்பாகவே உள்ள வஞ்சக சிந்தனையோ தெரியாது, இவர் தற்போது ஈழத்தமி;ழர்களின் தமிழ் ஈழம் பற்றி பேசுகின்றார். கைகளில் தான் செய்த காகிதக் கப்பலைக்; காட்டிய வண்ணம், நமது மக்களுக்கு போலியான நம்பிக்கைகளை ஊட்ட முனைகின்றார். தான் இறப்பதற்கு முன்னர் தமிழீழம் மலருமாம். அவ்வாறு தோன்றும் தமிழீழத்தைக் கண்களால் தரிசித்த பின்னர்தான் தான் இந்த உலகத்தை விட்டுப் போவாராம்.
கருணாநிதியின் இந்த காகிதக் கப்பல் கதைகளைக் கேட்டு வை.கோ போன்றவர்கள் அவருக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர். தமிழீழக் கனவை சிதறடித்த கருணாநிதிக்கு தமிழீழம் பற்றி பேசுவதற்கு எவ்வித உரிமையும் இல்லை என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார் வை. கோ அவர்கள். அந்த தமிழ் நாட்டுத் தலைவர்கள் ஒரு புறம் புலம் பெயர் தமிழர்கள் ஒரு புறம் தாயகத் தமிழர்கள் ஒரு புறம் என்று நின்றபடி கபடம் நிறைந்த கருணாநிதியின் போலியான கருணை நமக்குத் தேவையில்லை என்பதை அவருக்கு கேட்கும்படியாக நாம் உரத்துக் கூறவேண்டும்.
கனடா உதயன் - கதிரோட்டம்