news

Wednesday, July 4, 2012

அரச சார்பு இணையத்தளங்கள் இனந்தெரியாதோரால் கைப்பற்றுட்டுள்ளது


அரச சார்பு இணையத்தளங்கள் இனந்தெரியாதோரால் கைப்பற்றுட்டுள்ளது
சில தினங்களாக இலங்கையில் தமிழ் இணையத்தளங்களை பார்வையிடாமல் முடக்கிய இலங்கை அரசு, இலங்கை ஊடகவியலாளர்களையும், இலங்கையில் இருந்து இயங்கும் ஊடக நிறுவனங்களையும் முடக்கி இருக்கிறது.
இந்நிலையில், ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP), இலங்கை சுதந்திரக் கட்சி (SLFC), மக்கள் விடுதலை முன்னணி (JVP) போன்ற அரச சார்பான உத்தியோகபூர்வ இணையத்தளங்களும் இனந்தெரியாத சில புலம்பெயர் விசமிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேற்படி அரச சார்பான இணையத்தளங்களை ஒருவர், குறித்த ஒரு குழுவினர் தான் கைப்பற்றியுள்ளதாக தம்மால் கருத முடிகின்றது என அரச கட்சி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சில அரச இணையத்தளங்களை கைப்பற்றுவதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அரச சார்பான தளங்களைக் கைப்பற்றியுள்ள மர்ம சக்திகளின் நோக்கம் என்ன, இவர்களின் பின்னால் யார் இயங்குகின்றார்கள் என்பன தெரியாத இலங்கை அரசு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
இலங்கை அரசைப் பற்றிய உண்மைகளை வெளியிடும் ஊடகங்களை முடக்கியும், ஊடகவியலாளர்களை அடக்கி வரும் இந்நிலையில் அரச சார்பு தளங்கள் மீதான இப்பாரிய தாக்குதலால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.
அத்தோடு புலம் பெயர் நாடு ஒன்றிலிருந்து அரசுக்கு எதிரான இந்த தாக்குதலில் இன்னும் பல இலங்கை அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் முடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது கிடைத்துள்ள தகவலின் படி கீழே இணைத்துள்ள இணையத்தளங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
http://epdp.net/
http://jvpnews.com/
http://slfpnews.com/

பிரசன்னா சினேகா 2 மணிநேர திருமண நிகழ்ச்சித்தொகுப்பு


ஐ.நா பொதுச்செயளாரும் சிறிலங்காவுக்கு கண்டனம்

சிறிலங்காவில் சிறிலங்கா மிரர் மற்றும் சிறிலங்கா எக்ஸ் நியூஸ் ஆகிய இணையத்தளங்களின் மீதான நடவடிக்கை மற்றும் ஒன்பது ஊடகவியலாளர்கள் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது குறித்து ஐ.நா கவலை வெளியிட்டுள்ளது.
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கி நியுயோர்க்கில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
“சிறிலங்காவில் இணையத்தள பணியகங்கள் மீதான நடவடிக்கை குறித்து ஐ.நா அறிந்துள்ளது.
எந்தத் தலையீடுகளும் இன்றி ஊடகவியலாளர்கள் பணியாற்றக் கூடிய நிலை இருக்க வேண்டும் என்று சிறிலங்காவுக்கு மட்டுமன்றி, ஏனைய நாடுகளுக்கும் பல சந்தர்ப்பங்களில் நாம் கூறியுள்ளோம்.
அந்தப் பொதுவான கோட்பாடு இந்த விவகாரத்திலும கூடப் பொருத்தமானது.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இணையத்தளங்கள் மீதான சிறிலங்கா அரசின் நடவடிக்கைக்கு அமெரிக்காவும், ஐரோய்பிய ஒன்றியமும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Sunday, June 17, 2012

தாய்மையால் அளவில்லா இன்பம் அடைகிறேன்: ஐஸ்வர்யா ராய்


தாய்மை தனக்கு அளவற்ற பேரின்பம் அளிப்பதாக நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து வாழ் இந்தியரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கேத் வாஸ் 25 ஆண்டுகளாக பதவி வகிப்பதை முன்னிட்டு லண்டனில் விருந்தளித்தார்.
அதில் ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன் பங்கேற்றனர்.
அப்போது ஐஸ்வர்யா ராய் கூறுகையில், தாயாக கிடைத்துள்ள அனுபவம் பேரின்பம் தருகிறது. அதை ரசிக்கிறேன், நேசிக்கிறேன். இப்போதைக்கு குழந்தையை வளர்ப்பதே எனது முன்னுரிமை. மீண்டும் நடிக்க வருவது பற்றி உடனடி திட்டம் இல்லை என்றார்.
அபிஷேக் கூறுகையில், குழந்தையை கவனிக்க நான் நேரம் ஒதுக்காததை குற்றமாக நினைக்கிறேன். அந்த கடினமான வேலைகளை ஐஸ்வர்யா தான் செய்கிறார் என்றார்.

முரட்டுக்காளை


ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முரட்டுக்காளை படத்தின் கதையைப் போன்றே இப்படத்தையும் எடுத்திருக்கிறார்கள்.
தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயத்தைப் பார்த்துக் கொண்டு, தனது நான்கு தம்பிகளோடு கிராமத்தில் வாழ்கிறார் காளை.
பக்கத்து ஊரில் ரேக்ளா பந்தயம் நடக்கவே, அதில் கலந்து கொள்ளும் காளை வெற்றி மகுடம் சூட்டுகிறார்.
அந்த ஊரின் பெரியபுள்ளியான வரதராஜனின் தங்கை பிரியா, காளையைப் பார்த்ததும் அவர் மேல் ஒருதலையாய் காதல் கொள்கிறார். தனது ஆசையை தனது வீட்டில் வேலையாளாக இருக்கும் திருநங்கை சரோஜாவிடம் தெரிவிக்கிறார்.
காளையின் ஊருக்கு வரும் சரோஜா, காளையை பற்றி முழு தகவல்களை அறிந்து கொண்டு பிரியாவிடம் வருகிறார். காளைக்கு நான்கு தம்பிகள் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் சம்மதம் சொன்னால் காளை உன்னை திருமணம் செய்து கொள்வார் என்றும் சொல்கிறார்.
இதனையடுத்து காளையின் தம்பிகளை சந்திக்கும் பிரியா, தனது கல்யாணத்திற்கு அவர்களிடம் சம்மதமும் வாங்கிக் கொள்கிறார்.
வரதராஜன் தன்னிடம் வேலையாளாக இருப்பவரின் தங்கையாக வரும் புவனா மீது மோகம் கொள்கிறார். அவரை அடைய நினைக்கும் முயற்சியில் புவனாவின் அக்காவை கொலை செய்து விடுகிறார். இதனால் தனித்து விடப்படும் புவனா உயிர் பிழைத்துக் கொள்ள காளையின் வீட்டில் அடைக்கலமாகிறார். அவருக்கு காளையும் அடைக்கலம் தருகிறார்.
இந்நிலையில் தனது தங்கை காதலிக்கும் ஆள் காளை என்பதை விட, அவரது நிலத்தில் கனிமப் பொருள் இருப்பது வரதராஜனுக்கு தெரியவரவே, அவர் மாப்பிள்ளை கேட்டு காளை வீட்டிற்கு வருகிறார். இது அறியாமல் திருமணத்திற்கு சம்மதிக்கிறார் காளை.
நிச்சயதார்த்தத்தின் போது வரதராஜனின் நிலத்தாசை தெரிய வருகிறது. பிரியா தன் தம்பிகள் மேல் வெறுப்பு காட்டுவதும் தெரிய வருகிறது. இதனால் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விடுகிறார். இதனால் காளையும் வரதராஜனும் எதிரிகளாகி விடுகின்றனர்.
தம்பிகள் மேல் அன்பு காட்டும் புவனாவை காளைக்கு பிடித்துப் போகிறது. அவரை கைப்பிடிக்க நினைக்கிறார். இதற்கு பலவிதமான முட்டுக் கட்டைகளைப் போடுவது மட்டுமின்றி ஒரு கொலைப்பழியையும் அவர் மீது சுமத்துகிறார் வரதராஜன்.
இத்தனை பிரச்சினைகளையும் காளை சமாளித்தாரா? புவனாவை கரம் பிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
காளை வேடத்தில் சுந்தர் சி நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும், ரேக்ளா பந்தயக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். புவனா கேரக்டரில் வரும் சினேகா அழகாய் நடித்திருப்பது மட்டுமின்றி, பாடல் காட்சிகளில் கவர்ச்சியும் காட்டியிருக்கிறார்.
வரதராஜன் வேடத்தில் வரும் சுமன் வில்லன் நடிப்பில் அசத்துகிறார். பிரியா கேரக்டரில் வரும் சிந்து துலானி தன் பங்கை உணர்ந்து நடித்திருகிறார்.
திருநங்கை சரோஜாவாக வரும் விவேக் சிறப்பாக நடித்திருக்கிறார். சுமனோடு இருந்து கொண்டு அவருக்கு எதிராக காளையை கொம்பு சீவி விடும் பாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.
தனி டிராக்கில் இவர் நடத்தும் காமெடி, சில காட்சிகளில் சிரிப்பைத் தருகிறது. இவர் குளியல் போடும் காட்சிகளில் அருவறுப்பைத் தருகிறது.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் 5 பாடல்கள். பொதுவாக என் மனசு தங்கம் ரீமிக்ஸ் பாடல், சிம்பு பாடிய சுந்தர புருஷா பாடல் தாளம் போட வைக்கிறது.
ரேக்ளா பந்தயம், டிரெயின் சண்டை காட்சி, கிராமத்து பசுமை ஆகியவற்றை சான்டோனியோ கேமிரா அள்ளி வந்திருக்கிறது. அதனை அழகாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள் படத்தொகுப்பாளர்களான பிரவீண் மற்றும் ஸ்ரீகாந்த்.
ரஜினியின் முரட்டுக் காளையை இப்படத்தில் மீள்பதிவு செய்ய முயன்றிருக்கிறார் இயக்குனர் செல்வபாரதி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய படம் இது. இப்போது வந்திருந்தாலும் ரசிக்கும் படியாகவே கொடுத்திருக்கிறார் செல்வபாரதி.
நடிகர்: சுந்தர் சி, சுமன், விவேக்.
நடிகை: சினேகா, சிந்து துலானி.
இயக்குனர்: செல்வபாரதி.
இசை: ஸ்ரீகாந்த் தேவா.
ஒளிப்பதிவு: சான்டோனியோ.

ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு! இந்த போராட்டம் தொடரும்!- காசிஆனந்தன்


ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு, இந்த போராட்டம் தொடரும். இந்திய விடுதலைப் போராட்டத்தை விட 100 மடங்கு பெரியது இலங்கை ஈழ விடுதலை போராட்டம் என்று புத்தக வெளியீட்டு விழாவில் காசி ஆனந்தன் பேசினார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி பேசிய அவர்,

இந்திய சுதந்திர போராட்டத்தைவிட தமிழீழத்திற்கானது பெரிய போராட்டம் ஆகும். சுபாஷ் சந்திரபோஸ் தான் எனக்கு வழிகாட்டி என்று பிரபாகரன் கூறியிருக்கிறார்.
இந்திய விடுதலைப்போராட்டத்தைவிட 100 மடங்கு பெரியது இலங்கை ஈழ விடுதலை போராட்டம்.
இந்திய போரில் சுமார் 30,000 பேர் இறந்து இருப்பார்கள். ஆனால் ஈழ மண்ணில் நடந்த போரில் மூன்று லட்சத்திற்கு மேல் இறந்துள்ளனர்.
அப்போது விமானத்தில் வந்து யாரும் குண்டுகள் போடவில்லை. இப்போது அப்படியில்லை, அதிகமாக தமிழர்கள் வாழ்ந்த பூமியில் அதிகமான அளவில் குண்டு போட்டு சாகடித்துள்ளனர்.
அந்த போரில் யாரும் விதவையாக்கப்படவில்லை. மாறாக இலங்கையில் 89,000 பெண்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 60,000 பெண்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக்கப்பட்டுள்ளனர்.
அதே போல் காந்தியடிகளின் உண்ணாவிரத போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை. ஆனால் இந்த இலங்கை விடுதலைப் போராட்டத்தில் திலீபன் போன்றவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள். இது மிகவும் உயர்ந்த விடுதலைப் போராட்டமாகும்.
அங்குள்ளவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். நாங்கள் அவர்களைவிட உறுதியாக இருக்கிறோம்.
ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு, இந்த போராட்டம் தொடரும். வழக்கம்போல் உங்கள் தோள்கள், கைகள் தொடர்ந்து எங்களுக்கு கைகொடுங்கள் என்று காசி ஆனந்தன் பேசினார்.

தனி ஈழம் ஒன்றே தீர்வு! டெசோ மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும்!-திருமாவளவன்


இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு. விழுப்புரத்தில் நடைபெறவுள்ள டெசோ மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்க இருப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழ் ஈழம் ஒன்றுதான் ஈழச் சிக்கலுக்கு தீர்வு என்பதையும், அதற்காக உலகத் தமிழர்களிடையே ஒரு பொதுவாக்கு நடத்த வேண்டும் என்பதையும் டெசோ அமைப்பு வலியுறுத்துகிறது.
அந்த கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்பதினால் டெசோ அமைப்பில் இணைந்து செயல்பட ஒப்புதல் அளித்திருக்கிறோம்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு. டெசோ அமைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் உறுப்பினராக இணைத்துக்கொண்டதற்கு திமுக தலைவர் கலைஞருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெறவுள்ள டெசோ மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என்றார்.

Friday, June 15, 2012

Skype உரையாடல்களை ஒலி, ஒளிப்பதிவு செய்ய வேண்டுமா??

நீங்கள் அனைவரும் skype பயன்படுத்துவீர்கள். அதில் பல நண்பர்களுடன் உரையாடுவீர்கள். வெளிநாடுகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்கள் உறவினர்களுடன் கதைத்து மகிழவும் போகமுடியாத திருமண நிகழ்வுகள் வேறுபல நிகழ்வுகளை காணவும் பயன்படுத்து கின்றனர். (காதலர்களின் உரையாடல்கள் உட்பட) இவற்றில் சிலவற்றை பத்திரப்படுத்தி வைக்க விரும்புவர். அவர்களுக்கே இப்பதிவு . powergramo pro இவ் மென்பொருளை நிறுவியதும் skype ஐ on செய்யவும். செய்தபின்னர் skype இன் மேற்புறத்தே allow பண்ணுமாறு ஒரு கோரிக்கை வரும் அதனை allow பண்ணுங்கள் இனி உங்களது மென்பொருள் தயார் நிலைக்கு வந்துவிட்டது.

உங்களுக்கு vedio தேவையில்லை audio மட்டுமே போதுமானால் அவ் software இன் tools சென்று enable recording இல் தேவையான மாற்றங்களை செய்துகொள்ளுங்கள். இப்போது நீங்கள் skype ஐ பயன்படுத்தும்போது தானாகவே நீங்கள் செய்த settings இற்கு ஏற்ப ஒலிப்பதிவு/ஒளிப்பதிவு செய்ய தொடங்கும். இதில் பதிவு செய்யும் fileகள் அனைத்தும் இம்மென்பொருளினூடாகவே படிக்கமுடியும். ஆனால் தேவையான fileகளை தெரிவுசெய்து file சென்று export records as சென்று தேவையான format களில் (.mp3,.wma,.ogg,.wav,.avi) save செய்து கொள்ளலாம் .
தரவிறக்க
DOWNLOAD
இதற்கு வேறுபல மென்பொருள்களும் உண்டு. முயற்சி செய்து பாருங்கள்
01. Evaer Video Recorder For Skype
02. MX Skype Recorder
03. richy
04. hotrecorder
05. Virtual Audio Cable

தேசிய தலைவரின் மகன் பாலச்சந்திரனைக் கொலை செய்த சூத்திரதாரி யார்?


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை(வயது 14)  இலங்கை இராணுவத்தின் 53ஆவது படைப் பிரிவே சுட்டுக் கொன்றுள்ளதாக லங்கா நியூஸ் வெப் செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் நேரடி ஆலோசனைக்கமைய 53ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக அன்று கடமையாற்றிய பிரிகேடியர் கமல் குணரத்னவின் பற்றாலியனே இந்தச் சிறுவனை சுட்டுக்கொன்றுள்ளதாகவும்,
2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி அதிகாலை 7.30 அளவில் பாலச்சந்திரன் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் நந்திக்கடல் களப்பில் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர். அதாவது, இராணுவத்தின் 4வது விஜயபா படைப்பிரிவின் முத்துபண்டாவின் தலைமையில் இருந்த 8 பேர் கொண்ட இராணுவப் படையணியிடம் இவர்கள் சரணடைந்ததாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவரது பிரத்தியே பாதுகாப்பு உறுப்பினர் இருவருடன் பாலச்சந்திரன் பிரபாகரன் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார். இதன்போது லெப்டினன் கேணல் அலுவிகார அவரது 681வது பற்றாலியனின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய லெப்டினன் கேணல் லலந்த கமமே ஊடாக, 53ஆவது படையணியில் அன்று மேஜர் ஜெனரல் பதவியிலிருந்த கமல் குணரத்னவிற்கு அறிவித்துள்ளார்.
கமல் குணரத்னவின் உத்தரவிற்கமைய பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரை நந்திக்கடல் களப்பு பிரதேசத்திலிருந்து கமல் குணரத்னவிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கமல் குணரத்ன, அவர்களிடம் தனிப்பட்ட விசாரணைகளை நடத்தியுள்ளார். இதன்போது தனது தந்தையிடமிருந்து பிரிந்து பாதுகாப்புத் தரப்பினருடன் வந்ததாக பாலச்சந்திரன் கூறியுள்ளான்.
பாலச்சந்திரனிடம் பெறப்பட்டத் இராணுவத்தினரிடம் தகவல்களை கமல் குணரத்ன உடனடியாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவிற்கு தொலைபேசி ஊடாக அறிவித்ததும், இந்தத் தகவல்கள் அனைத்தையும் பாதுகாப்புச் செயலாளர், பிரதி அமைச்சர் முரளிதரனுக்கு அறிவித்துள்ளார்.
பாலச்சந்திரன் தலைவர் பிரபகாரனின் மகன் என்பதனால் எதிர்காலத்தில் விடுதலை புலிகளின் தலைவராக வரக்கூடும், சிறுவன் என்பதனால் நீதிமன்றத்தால் தண்டனைகள் கொடுக்கமுடியாத சாத்தியங்கள் இருப்பதாகவும், எனவே சிறுவனை கொன்றுவிடுவதே சரியான முடிவும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுக்கு, முரளிதரன் விநாயகமூர்த்தி கூறியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்‌ஷ, மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்துவிடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் பிரித்தானியாவின் ''சனல் 4'' தொலைக்காட்சியில் பாலச்சந்திரனின் கொலை தொடர்பாக பல தகவல்களை வெளியிடப்பட்டிருந்ததைப் பார்த்த இந்தப் படையணியில் இருந்த இராணுவ அதிகாரியொருவரே மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.
ஏனையவர்கள் செய்த தவறுகளுக்கு எல்லாம் என்னால் பொறுப்பு நிற்க முடியாது என்பதனால் இந்தத் தகவல்களை வெளியிடுவதாகவும் அந்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளதாக மேலும் அவ் இணையம் தெரிவித்துள்ளது.