தமிழ் திரை உலகில் இளைய தளபதி என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகின்ற நடிகர் விஜயின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் இவை.
நாம் இணையத்தில் நடத்திய தேடுதல் வேட்டையின்போது இப்புகைப்படங்கள் கிடைக்கப் பெற்று உள்ளன
இவற்றை உங்கள் பார்வைக்கு தருகின்றோம்.
news
Wednesday, May 30, 2012
இந்தியன் ராணுவம் காட்டிய எமது தலைவரின் இறந்த உடலை மீண்டும் உங்களுக்காக பிரசுரிக்கிறோம்
எங்கள்
தேசிய தலைவர் எத்தனை தடவை இறந்திருப்பார்.? எத்தனை தடவைகள் அவரது சடலங்கள்
கண்டுபிடிக்க பட்டிருக்கும் மக்கள் மத்தியில் பல கருத்துக்கள் இருந்த
போதும் உங்களுக்காக நாங்கள் மீண்டும் நினைவலைகளாக இந்த படம்
பிரபாகரன் தமிழரின் எழுச்சியின் வடிவம்: மேபெரும் நூல் வெளியீட்டு விழா லண்டனில் !
லண்டனில்
வல்வை அரங்கத்தினர் மாபெரும் நூல் வெளியீட்டு விழா ஒன்றை
நடத்தவுள்ளனர்(04/06/2012). பிரபாகரன் தமிழரின் எழுச்சியின் வடிவம் என்ற
நூலை தமிழ் உணர்வாளர் பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் எழுதி சில தினங்களுக்கு
முன்னர் சென்னையில் வெளியிட்டிருந்தார். இந் நூலையே தற்போது வல்வை
அரங்கத்தினர் லண்டனில் வெளியிடவுள்ளனர். தேசிய தலைவர் குறித்து பல அரிய
செய்திகளையும், தமிழர் போராட்டங்களையும் உள்ளடக்கியுள்ள இப் புத்தகம்
ஒவ்வொரு தமிழர்கள் வீட்டிலும் இருக்கவேண்டிய ஒன்று.
காலத்தின் தேவை கருதி எழுதப்பட்ட இப் புத்தகம், லண்டனில் வெளியிடப்படுவது மிகவும் பெருமைக்குரிய விடையமாகும். அனைத்து தமிழ மக்களும், உணர்வாளர்களும் இன் நிகழ்வில் கலந்துகொண்டு, இந் நிகழ்வை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டி நிற்கின்றனர்.
நூல் வெளியீட்டு விழா நடைபெறும் இடம்:-
04/06/2012 Evening 7.00 pm
Valvai Arangam,
66 A London Road,
Tooting,
SW17 9HP
NOTE: Entrance Via 1a Arnold Raod
காலத்தின் தேவை கருதி எழுதப்பட்ட இப் புத்தகம், லண்டனில் வெளியிடப்படுவது மிகவும் பெருமைக்குரிய விடையமாகும். அனைத்து தமிழ மக்களும், உணர்வாளர்களும் இன் நிகழ்வில் கலந்துகொண்டு, இந் நிகழ்வை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டி நிற்கின்றனர்.
நூல் வெளியீட்டு விழா நடைபெறும் இடம்:-
04/06/2012 Evening 7.00 pm
Valvai Arangam,
66 A London Road,
Tooting,
SW17 9HP
NOTE: Entrance Via 1a Arnold Raod
தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுவது திடீர் நிறுத்தம்: பிரித்தானியா அதிரடி !
பிரித்தானியாவில்
இருந்து நாளை, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த தமிழ் அகதிகளை,
குடிவரவு அதிகாரிகள் இடைநிறுத்தியுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது.
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழ் அகதிகள், சித்திரவதைகளுக்கு
உள்ளாக்கப்படுவதாகவும், மேலும் சிலர் கொல்லப்படுவதாகவும் கிடைக்கப்பெற்ற
முறைப்பாட்டை அடுத்தே அதிகாரிகள் திடீர் முடிவை எடுத்துள்ளதாக மேலும்
அறியப்படுகிறது. சமீபத்தில் பிரித்தானியப் பாராளுமன்றிலும் இதுதொடர்பான
விவாதம் ஒன்று நடைபெற்றிருந்தது யாவரும் அறிந்ததே. இந் நிலையில் நாளை
சுமார் 40க்கும் மேற்பட்ட தமிழர்கள் நாடுகடத்தப்படவிருந்தனர்.
மனித உரிமை அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் பிரித்தானியக் குடிவரவு அதிகாரிகளுக்கு சில தரவுகளை வழங்கியுள்ளனர். புதிதாக சேர்க்கப்பட்ட ஆதாரங்களையும் அவர்கள் சமர்பித்துள்ளனர். இதனைக் கருத்திற்கொண்டே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையில், கைச்சாத்திட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்றாகும். இந் நாட்டில் இருந்து ஒருவர் திருப்பி அனுப்பப்படும்போது, குறிப்பிட்ட நபர் சித்திரவதைக்கு உள்ளாவார் என்றால், அதற்கான பொறுப்பை பிரித்தானியா ஏற்க்கவேண்டும்.
இவ்வாறனதொரு சூழ் நிலையிலேயே பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் நாளை நாடுகடத்தப்படவிருந்த தமிழர்களை, தற்போது திருப்பி அனுப்புவது இல்லை என முடிவெடுத்துள்ளனர் என மேலும் அறியப்படுகிறது.
மனித உரிமை அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் பிரித்தானியக் குடிவரவு அதிகாரிகளுக்கு சில தரவுகளை வழங்கியுள்ளனர். புதிதாக சேர்க்கப்பட்ட ஆதாரங்களையும் அவர்கள் சமர்பித்துள்ளனர். இதனைக் கருத்திற்கொண்டே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையில், கைச்சாத்திட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்றாகும். இந் நாட்டில் இருந்து ஒருவர் திருப்பி அனுப்பப்படும்போது, குறிப்பிட்ட நபர் சித்திரவதைக்கு உள்ளாவார் என்றால், அதற்கான பொறுப்பை பிரித்தானியா ஏற்க்கவேண்டும்.
இவ்வாறனதொரு சூழ் நிலையிலேயே பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் நாளை நாடுகடத்தப்படவிருந்த தமிழர்களை, தற்போது திருப்பி அனுப்புவது இல்லை என முடிவெடுத்துள்ளனர் என மேலும் அறியப்படுகிறது.
வந்தேறு குடிகளான தமிழர் வடக்குக்கு உரிமை கோர முடியாது: எல்லாவெல மேதானந்த தேரர்
]
வடக்கு
தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய
ராஜபக்ச அளித்த செவ்வி குறித்து ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற
உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இந்த நூற்றாண்டின் மிகநேர்மையான உண்மை இது என்று அவர் வர்ணித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளது மிகச்சரியான உண்மை. இந்த நாட்டின் இன, மத, மொழி வேறுபாடுகளை வெறுக்கும் மக்கள் இந்த அறிக்கைக்காக அவரைக் கௌரவிக்க வேண்டும்.
இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்த முனையும் ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான். வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம் என்று உரிமை கோருவதற்கு அவர்களுக்கு எந்த சான்றோ அல்லது ஆதரவுக் காரணமோ கிடையாது.
நன்கு அறியப்பட்ட இந்திய வரலாற்றாசிரியர் வேலகந்த சாஸ்திரி தனது நூலில், தமிழர்கள் ஏனைய இடங்களில் இருந்தே தென்னிந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் காணப்படும் புதைபடிமங்கள், தென்னிந்தியாவின் புதைபடிமங்களை விடவும் தொன்மையானது என்று அவர் தனது நூலில் கூறியுள்ளார்.
இந்தநிலையில், இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழர்கள் எவ்வாறு வடபகுதியை தமது தாயகம் என்று உரிமை கோரமுடியும்? வடக்கு தமிழர்களின் தாயகம் என்பதற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை.
கந்தகுடி, நாகதீப, காரைதீவு, நெடுந்தீவு ஆகிய இடங்களில் உள்ள கோவில்களை எடுத்துக் கொண்டால், முன்னர் பௌத்த வழிபாட்டு இடங்கள் அமைந்திருந்த இடங்களிலேயே அவை அமைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணக் குடாநாடும், அதனைச் சுற்றியுள்ள தீவுகளும் நாகதீப என்றே வசம்ப மன்னனின் காலத்தில் எழுதப்பட்ட வல்லிபுரம் தங்க நூலில் கூறப்பட்டுள்ளது.
நயினாதீவில் கட்டப்பட்டுள்ள நாகபூசனி அம்மன் கோவில் முன்னர் அங்கிருந்த பாரிய பௌத்த வழிபாட்டு இடத்தின் மீது தான் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் இருந்து அகற்றப்பட்ட ஒரு கல்வெட்டு தற்போது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் திணைக்களம் இந்தக் கல்வெட்டின் மீது கவனம் செலுத்த வேண்டும். பராக்கிரமபாகு மன்னன் ஊர்காவற்றுறையில் ஒரு துறைமுகத்தை நிறுவி அதைப் பராமரித்ததாக இந்தக் கல்வெட்டு நிரூபித்துள்ளது.
அப்போது அது ஊரதோட்ட என்றே அழைக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவ ஆட்சிக்காலத்தில் ஊர்காவற்றுறைத் துறைமுகம் சிங்களவர்களால் நிர்வகிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வடக்கைத் தமிழர்கள் தமது தாயகம் என்று எப்படி உரிமை கோரமுடியும்?
துணுக்காய் கல்வெட்டில் அனுராதபுர ஆட்சிக்காலத்தில் மருத்துவமனை இருந்ததாக கூறபட்டுள்ளது. பொல்கந்துகம என்ற கிராமத்துக்காக இந்த மருத்துவமனை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை அதிகாரிகள் திருகோணமலை கல்லம்பற்றுக்கு பயணம் மேற்கொண்டது குறித்தும், அங்கு பிக்குணி ஆச்சிரமத்துக்கு நிலத்தை தானமாக வழங்கியது குறித்தும் இந்தக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள்,இலங்கையில் எந்தப் பகுதியுமே தமிழர்கள் தமது தாயகம் என்று உரிமை கோர முடியாது என்பதை நிரூபிக்கின்றன என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளது மிகச்சரியான உண்மை. இந்த நாட்டின் இன, மத, மொழி வேறுபாடுகளை வெறுக்கும் மக்கள் இந்த அறிக்கைக்காக அவரைக் கௌரவிக்க வேண்டும்.
இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்த முனையும் ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான். வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம் என்று உரிமை கோருவதற்கு அவர்களுக்கு எந்த சான்றோ அல்லது ஆதரவுக் காரணமோ கிடையாது.
நன்கு அறியப்பட்ட இந்திய வரலாற்றாசிரியர் வேலகந்த சாஸ்திரி தனது நூலில், தமிழர்கள் ஏனைய இடங்களில் இருந்தே தென்னிந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் காணப்படும் புதைபடிமங்கள், தென்னிந்தியாவின் புதைபடிமங்களை விடவும் தொன்மையானது என்று அவர் தனது நூலில் கூறியுள்ளார்.
இந்தநிலையில், இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழர்கள் எவ்வாறு வடபகுதியை தமது தாயகம் என்று உரிமை கோரமுடியும்? வடக்கு தமிழர்களின் தாயகம் என்பதற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை.
கந்தகுடி, நாகதீப, காரைதீவு, நெடுந்தீவு ஆகிய இடங்களில் உள்ள கோவில்களை எடுத்துக் கொண்டால், முன்னர் பௌத்த வழிபாட்டு இடங்கள் அமைந்திருந்த இடங்களிலேயே அவை அமைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணக் குடாநாடும், அதனைச் சுற்றியுள்ள தீவுகளும் நாகதீப என்றே வசம்ப மன்னனின் காலத்தில் எழுதப்பட்ட வல்லிபுரம் தங்க நூலில் கூறப்பட்டுள்ளது.
நயினாதீவில் கட்டப்பட்டுள்ள நாகபூசனி அம்மன் கோவில் முன்னர் அங்கிருந்த பாரிய பௌத்த வழிபாட்டு இடத்தின் மீது தான் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் இருந்து அகற்றப்பட்ட ஒரு கல்வெட்டு தற்போது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் திணைக்களம் இந்தக் கல்வெட்டின் மீது கவனம் செலுத்த வேண்டும். பராக்கிரமபாகு மன்னன் ஊர்காவற்றுறையில் ஒரு துறைமுகத்தை நிறுவி அதைப் பராமரித்ததாக இந்தக் கல்வெட்டு நிரூபித்துள்ளது.
அப்போது அது ஊரதோட்ட என்றே அழைக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவ ஆட்சிக்காலத்தில் ஊர்காவற்றுறைத் துறைமுகம் சிங்களவர்களால் நிர்வகிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வடக்கைத் தமிழர்கள் தமது தாயகம் என்று எப்படி உரிமை கோரமுடியும்?
துணுக்காய் கல்வெட்டில் அனுராதபுர ஆட்சிக்காலத்தில் மருத்துவமனை இருந்ததாக கூறபட்டுள்ளது. பொல்கந்துகம என்ற கிராமத்துக்காக இந்த மருத்துவமனை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை அதிகாரிகள் திருகோணமலை கல்லம்பற்றுக்கு பயணம் மேற்கொண்டது குறித்தும், அங்கு பிக்குணி ஆச்சிரமத்துக்கு நிலத்தை தானமாக வழங்கியது குறித்தும் இந்தக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள்,இலங்கையில் எந்தப் பகுதியுமே தமிழர்கள் தமது தாயகம் என்று உரிமை கோர முடியாது என்பதை நிரூபிக்கின்றன என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாளை ஒரு தொகுதி தமிழர்களை நாடுகடத்த பிரித்தானியா முடிவு!- நிறுத்துமாறு மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள்
அடுத்த கட்டமாக மே31, 2012 அன்று தனது நாட்டில்
தஞ்சம் கோரியுள்ள இலங்கையர்களின் ஒரு தொகுதியினரை மீண்டும் அவர்களது
நாட்டுக்கு திருப்பு அனுப்புவதென பிரித்தானியா தீர்மானித்துள்ள நிலையிலேயே
மனித உரிமைகள் கண்காணிப்பகம் இவ்வேண்டுகோளை முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா மற்றும் ஏனைய சில நாடுகளில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கு அனுப்பு வைக்கப்பட்ட தமிழர்களில் பலர், அங்கே பலாத்காரமாக கைதுசெய்யப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்ட பல சம்பவங்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசாரணை செய்ததன் பிற்பாடே இவ்வாறானதொரு வேண்டுகோளை விடுத்துள்ளது.
கடந்த பெப்ரவரியில் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், அனைத்துலக நாடுகளில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் மக்கள், இலங்கைப் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட எட்டு சம்பவங்கள் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் பின்னர், அதாவது பெப்ரவரி 2012 இலிருந்து இது வரை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் மேலும் ஐந்து சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன.
வேறு நாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்து கொண்ட இலங்கைத் தமிழர்கள் பலர் மீண்டும் அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் பல்வேறு சித்திரவதைகள் மற்றும் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர் என்பதற்கான சான்றுகள் தற்போது அதிகமாகக் கிடைத்துள்ள போதிலும், இலங்கைக்கு தமிழ் மக்களை திருப்பி அனுப்புவதால் அங்கே அவர்கள் ஆபத்தைச் சந்திப்பார்கள் என்பதை அடையாளங் கண்டு அதனை அங்கீகரிப்பதில் பிரித்தானிய அரசாங்கம் தவறிழைக்கின்றது" என மனித உரிமைகள் கண்காணிப்பகத்துக்கான ஐக்கிய இராச்சியத்தின் இயக்குனர் டேவிட் மெபாம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழ் மக்கள் அங்கு எவ்வாறான சித்திரவதைகளையும், துன்பங்களையும் அனுபவிக்கின்றார்கள் என்பது தொடர்பில் மனித உரிமைகள் அமைப்பால் வெளியிடப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பிரித்தானிய அரசாங்கம் முழுமையான, நியாயமான ஆய்வுகளை மேற்கொண்டு தீர்வை எட்டும் வரை இவ்வாறு இலங்கைக்கு தமிழ் மக்களை திருப்பி அனுப்புவதை இடைநிறுத்த வேண்டும்" எனவும் டேவிட் மெபாம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை இலங்கை பாதுகாப்பு படையினர் நீண்ட காலமாக துன்புறுத்தி வருவதாகவும், புலம்பெயர் நாடுகளில் அரசியல் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடும் தமிழ் மக்களை சித்திரவதைப்படுத்துதல் மற்றும் ஏனைய மீறல்களுக்கு உட்படுத்துவதானது அதிகரித்து வருவதையே அண்மைய சான்றுகள் உறுதிப்படுத்தி நிற்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதைப்படுத்தப்பட்ட தமிழ் மக்களுடன் தொடர்புபட்ட ஐந்து சம்பவங்களில் நான்கு சம்பவங்கள் மருத்துவசான்றுகள் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மே 2009ல் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ்ப் பெண் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்ட அதேவேளையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்களால் பாலியல் ரீதியாக சித்திரவதைப்படுத்தப்பட்டு, இராணுவ முகாம் ஒன்றில் ஐந்து மாதங்கள் வரை அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதேபோன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இரு தமிழ் மகன்கள் இவ்வாறான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதில் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். அத்துடன் இவரது உடல் முழுவதும் சிகரெட்டால் சுடப்பட்டதுடன், நெருப்பில் வைத்து காய்ச்சப்பட்ட இரும்புக் கம்பியாலும் காயப்படுத்தப்பட்டது.
இவ்விரு தமிழ் ஆண்களிலும் மற்றையவர், இலங்கை விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் இலங்கை இராணுவ குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவின் தலைமையகத்தில் பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.
நான் தாக்கப்பட்டேன். சித்திரவதைப்படுத்தப்பட்டேன். எனது தலையை சுவருடன் மோதினார்கள். சிகரெட்டால் சுட்டார்கள். எனது கைகள் கட்டப்பட்ட நிலையில் இவ்வாறான பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் என் மீது மேற்கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்புக்காக செயற்படுபவன் என என் மீது அவர்கள் குற்றம் சாட்டினார்கள். பெற்றோல் ஊற்றப்பட்ட பிளாஸ்ரிக் பை ஒன்றினுள் எனது முகத்தை வைக்க முற்பட்டார்கள்" என அவர் தெரிவித்தார்.
இலங்கையில் பரந்தளவில் இவ்வாறான சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், ஆனால் குறிப்பாக அனைத்துலக நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசியற் செயற்பாடுகளில் பங்குபற்றுகின்றதைப் பொறுத்து அவர்கள் மீதான சித்திரவதைகள் அமைந்திருப்பதாகவும் ஏப்ரல் 2012ல் புதுப்பிக்கப்பட்ட, பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பின் நடவடிக்கை வழிகாட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழ் மக்களிடம் புலம் பெயர் நாடுகளில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அரசியற் செயற்பாடுகள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு துன்புறுத்தப் படுவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தான் துன்புறுத்தப்படலாம் என்கின்ற ஆபத்தை உணர்கின்ற ஒரு பாதிக்கப்பட்ட நபர் தனது நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு தப்பிச் சென்று புகலிடம் கோரும் போது, குறிப்பிட்ட நபரை மீண்டும் அவரது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பக் கூடாது என சித்திரவதைப்படுத்தல், மற்றும் ஏனைய கொடூரச் செயல்களில் ஈடுபடுதல், மனிதாபிமானத்துக்கு எதிரான முறையில் தண்டனை வழங்குதல் போன்றவற்றுக்கு எதிரான சாசனத்தின் மூன்றாவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சாசனத்தை பிரித்தானியா ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவானது தனது அனைத்துலக சட்டக் கட்டுப்பாடுகளை மதிப்பதற்கு அப்பால், இலங்கைக்கு திருப்பி அனுப்ப எத்தனிக்கும் தமிழ் மக்கள் தொடர்பில் தனது அடிப்படை கண்ணியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என மெபாம் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியா மற்றும் ஏனைய சில நாடுகளில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கு அனுப்பு வைக்கப்பட்ட தமிழர்களில் பலர், அங்கே பலாத்காரமாக கைதுசெய்யப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்ட பல சம்பவங்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசாரணை செய்ததன் பிற்பாடே இவ்வாறானதொரு வேண்டுகோளை விடுத்துள்ளது.
கடந்த பெப்ரவரியில் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், அனைத்துலக நாடுகளில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் மக்கள், இலங்கைப் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட எட்டு சம்பவங்கள் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் பின்னர், அதாவது பெப்ரவரி 2012 இலிருந்து இது வரை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் மேலும் ஐந்து சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன.
வேறு நாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்து கொண்ட இலங்கைத் தமிழர்கள் பலர் மீண்டும் அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் பல்வேறு சித்திரவதைகள் மற்றும் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர் என்பதற்கான சான்றுகள் தற்போது அதிகமாகக் கிடைத்துள்ள போதிலும், இலங்கைக்கு தமிழ் மக்களை திருப்பி அனுப்புவதால் அங்கே அவர்கள் ஆபத்தைச் சந்திப்பார்கள் என்பதை அடையாளங் கண்டு அதனை அங்கீகரிப்பதில் பிரித்தானிய அரசாங்கம் தவறிழைக்கின்றது" என மனித உரிமைகள் கண்காணிப்பகத்துக்கான ஐக்கிய இராச்சியத்தின் இயக்குனர் டேவிட் மெபாம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழ் மக்கள் அங்கு எவ்வாறான சித்திரவதைகளையும், துன்பங்களையும் அனுபவிக்கின்றார்கள் என்பது தொடர்பில் மனித உரிமைகள் அமைப்பால் வெளியிடப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பிரித்தானிய அரசாங்கம் முழுமையான, நியாயமான ஆய்வுகளை மேற்கொண்டு தீர்வை எட்டும் வரை இவ்வாறு இலங்கைக்கு தமிழ் மக்களை திருப்பி அனுப்புவதை இடைநிறுத்த வேண்டும்" எனவும் டேவிட் மெபாம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை இலங்கை பாதுகாப்பு படையினர் நீண்ட காலமாக துன்புறுத்தி வருவதாகவும், புலம்பெயர் நாடுகளில் அரசியல் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடும் தமிழ் மக்களை சித்திரவதைப்படுத்துதல் மற்றும் ஏனைய மீறல்களுக்கு உட்படுத்துவதானது அதிகரித்து வருவதையே அண்மைய சான்றுகள் உறுதிப்படுத்தி நிற்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதைப்படுத்தப்பட்ட தமிழ் மக்களுடன் தொடர்புபட்ட ஐந்து சம்பவங்களில் நான்கு சம்பவங்கள் மருத்துவசான்றுகள் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மே 2009ல் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ்ப் பெண் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்ட அதேவேளையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்களால் பாலியல் ரீதியாக சித்திரவதைப்படுத்தப்பட்டு, இராணுவ முகாம் ஒன்றில் ஐந்து மாதங்கள் வரை அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதேபோன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இரு தமிழ் மகன்கள் இவ்வாறான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதில் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். அத்துடன் இவரது உடல் முழுவதும் சிகரெட்டால் சுடப்பட்டதுடன், நெருப்பில் வைத்து காய்ச்சப்பட்ட இரும்புக் கம்பியாலும் காயப்படுத்தப்பட்டது.
இவ்விரு தமிழ் ஆண்களிலும் மற்றையவர், இலங்கை விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் இலங்கை இராணுவ குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவின் தலைமையகத்தில் பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.
நான் தாக்கப்பட்டேன். சித்திரவதைப்படுத்தப்பட்டேன். எனது தலையை சுவருடன் மோதினார்கள். சிகரெட்டால் சுட்டார்கள். எனது கைகள் கட்டப்பட்ட நிலையில் இவ்வாறான பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் என் மீது மேற்கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்புக்காக செயற்படுபவன் என என் மீது அவர்கள் குற்றம் சாட்டினார்கள். பெற்றோல் ஊற்றப்பட்ட பிளாஸ்ரிக் பை ஒன்றினுள் எனது முகத்தை வைக்க முற்பட்டார்கள்" என அவர் தெரிவித்தார்.
இலங்கையில் பரந்தளவில் இவ்வாறான சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், ஆனால் குறிப்பாக அனைத்துலக நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசியற் செயற்பாடுகளில் பங்குபற்றுகின்றதைப் பொறுத்து அவர்கள் மீதான சித்திரவதைகள் அமைந்திருப்பதாகவும் ஏப்ரல் 2012ல் புதுப்பிக்கப்பட்ட, பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பின் நடவடிக்கை வழிகாட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழ் மக்களிடம் புலம் பெயர் நாடுகளில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அரசியற் செயற்பாடுகள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு துன்புறுத்தப் படுவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தான் துன்புறுத்தப்படலாம் என்கின்ற ஆபத்தை உணர்கின்ற ஒரு பாதிக்கப்பட்ட நபர் தனது நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு தப்பிச் சென்று புகலிடம் கோரும் போது, குறிப்பிட்ட நபரை மீண்டும் அவரது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பக் கூடாது என சித்திரவதைப்படுத்தல், மற்றும் ஏனைய கொடூரச் செயல்களில் ஈடுபடுதல், மனிதாபிமானத்துக்கு எதிரான முறையில் தண்டனை வழங்குதல் போன்றவற்றுக்கு எதிரான சாசனத்தின் மூன்றாவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சாசனத்தை பிரித்தானியா ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவானது தனது அனைத்துலக சட்டக் கட்டுப்பாடுகளை மதிப்பதற்கு அப்பால், இலங்கைக்கு திருப்பி அனுப்ப எத்தனிக்கும் தமிழ் மக்கள் தொடர்பில் தனது அடிப்படை கண்ணியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என மெபாம் குறிப்பிட்டுள்ளார்.
Tuesday, May 29, 2012
இரவு முழுவதும் எங்களை தூங்கவே விடவில்லை:ஷாருக்கானின் சில்மிஷம் அம்பலம்!
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐ.பி.எல்
இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அணியும் மோதின. இதில் சென்னை அணியை தோற்கடித்து கொல்கத்தா அணி கோப்பையை
கைப்பற்றியது.
கொல்கத்தா அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகர் ஷாருக்கான் இந்த
வெற்றியால் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார். அத்தோடு இதே ஐ.பி.எல்லில்
நடைபெற்ற லீக் ஆட்டங்களில் அவருடைய நடத்தையால் நிறைய சர்ச்சைகளில்
மாட்டிக்கொண்டதும் நினைவிருக்கலாம்.இரவு முழுவதும் தூங்காமல் தனது சந்தோஷத்தை வெளிக்காட்டியுள்ளார். சேப்பாக்கம் மைதானத்திலும் வீரர்கள் அறையிலும் போட்டி முடிந்த பிறகு 1 1/2 மணி நேரம் வெற்றியை கொண்டாடினார். பின்னர் வீரர்களை ஓட்டலுக்கு அழைத்து சென்று விருந்து கொடுத்தார். இந்த விருந்து நிகழ்ச்சி இரவு முழுவதும் நடந்தது. கொல்கத்தா வெற்றியை வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
கொல்கத்தா அணி வீரர் லட்சுமி ரத்தன் சுக்லா கூறும்போது, ஷாருக்கான் இரவு முழுவதும் தூங்கவில்லை. எங்களையும் தூங்க விடவில்லை என்றார்.
யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு PSTD என்ற மனநோய்
யுத்தத்தில் பங்கு கொண்ட இராணுவத்தினர் முதலில் உளவியல் அழுத்தங்களுக்கு உட்படுகின்றனர்.
இவர்களுடன் பணியாற்றுபவர் என்ற வகையில் இதனை என்னால் உணர முடிகின்றது. அவர்கள் பல்வேறு உளவியல் தாக்கங்களுக்கு உட்படுகின்றனர் என ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் பங்கு பற்றிய பின்னர் அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பிய இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்றிய றாமநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இதேபோன்றே இலங்கையில் தொடரப்பட்ட நீண்ட கால யுத்தத்தின் விளைவாக அதில் பங்கு கொண்ட இராணுவத்தினரும் மன அழுத்தங்களுக்கு ஆளாகியிருப்பர் என அவர் உறுதியாகத் தெரிவிக்கின்றார்.
யுத்தத்தில் பங்கு கொண்ட பெரும்பாலான இராணுவத்தினர் Post-Traumatic Stress Disorder -PSTD என்கின்ற உளவியல் நோய்க்கு உட்படுகின்றனர். அறிவியல் ரீதியாக நோக்கில் இதன் விளைவுகள் மோதலின் போது மட்டும் வெளிப்படமாட்டாது.
ஆனால் மிகத் தீவிர யுத்தத்தில் பங்கு கொள்ளும் ஒரு இராணுவத்தினன் மன அழுத்தம் தரவல்ல சூழலில் வித்தியாசமான கோணத்தில் செயற்படத் தொடங்குவார். அதாவது அவர் தீவிர யுத்தத்தில் பங்கு கொண்டதன் பின்னர் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு இவர் உள்ளாவதால் இவ்வாறு நடந்து கொள்ள முற்படுவார் என றாமநாயக்க தெரிவித்துள்ளார்.
இது பொதுவாக இராணுவத்தினர் மத்தியில் காணப்படுகின்ற ஒரு பிரச்சினை என்பதால் இதனை மிகக் கவனமாகக் கையாள்வதுடன், இதற்குத் தேவையான உள ஆற்றுப்படுத்தலையும் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தில் பங்கு கொண்டதன் பின்னர் ஏற்படும் PSTD என்கின்ற மன அழுத்த நோயால் பாதிக்கப்படும் இராணுவத்தினரோ அல்லது இவ்வாறான தாக்கங்களுக்கு உட்பட்ட வேறுயாராவது தாம் பெற்றுக் கொண்ட உளத்தை சிதைக்கும் அந்தக் கோரமான, கடினமான அனுபவங்கள் மீண்டும் மீண்டும் அவர்களது மனங்களில் பிரதிபலிப்பதால் இவ்வாறான உளத்தாக்கத்துக்கு உட்படுகின்றனர்.
இவ்வாறு இவர்களின் மனங்களைப் பாதித்த பழைய சம்பவங்கள் மீண்டும் இவர்களை ஆட்கொள்ளும் போது, இவர்கள் தமது உண்மையான நிலையை இழந்து விடுகின்றனர். இதனால் PSTD என்கின்ற உளவியல் தாக்கத்துக்கு உட்படும் இராணுவத்தினர் ஒருவர் தன்னைச் சூழ என்ன நடக்கின்றது என்பதை அறியாது வன்முறையான சம்பவங்களை மேற்கொள்ள மனதளவில் தூண்டப்படுகின்றனர் என அவர் தெளிவுபடுத்தினார்.
அண்மைய காலங்களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான விரிவான தகவல்கள் தனக்குத் தெரியாது என்பதை ஏற்றுக் கொண்ட றாமநாயக்க அதேவேளையில், இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் அதிகரிப்பதால் தொடர்புபட்ட அதிகாரிகள் உடனடியாக இவற்றுடன் தொடர்புபட்ட காரணங்களை அறிந்து ஆர்வத்துடன் செயற்பட்டு, இவ்வாறான படுகொலைகள் மேலும் நடைபெறாது தடுப்பதற்குகந்த வழிவகைகளை ஆராய்ந்து செயற்படுத்த வேண்டும் எனவும் இவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வீட்டு வன்முறைகள் மற்றும் கொலைச் சம்பவங்களில் அதிகளவான ஒழுக்கமான ஆண்கள் மற்றும் பெண்கள் ஈடுபடுவதானது, இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்கான பிரதான காரணங்கள் அடையாளங் காணப்படாது உள்ளதையே சுட்டிக்காட்டுகின்றது என றாமநாயக்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவைப் பொறுத்தளவில் யுத்த வலயத்துக்கு கடமைக்கு அனுப்பப்படும் இராணுவத்தினர் மீண்டும் திரும்பி வந்தவுடன் அவர்கள் தமது வீட்டுக்குச் சென்று குடும்பத்தவர்களுடன் பொழுதைக் கழிப்பதற்கான விடுமுறை வழங்கப்படுவதாகவும், இதனால் இவர்களின் மன அழுத்தங்கள் குறைக்கப்படுவதாகவும் றாமநாயக்க தெரிவித்துள்ளார்.
எடுத்துக்காட்டாக ஆறு மாதங்கள் யுத்த களத்தில் பணியாற்றும் ஒருவர் தனது ஒவ்வொரு நாள் வாழ்வையும் இழக்கின்றார். இதனால் இவ்வாறான இராணுவத்தினர் அவர்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட்டு, அங்கே பெரும்பாலான பொழுதுகளைக் கழிக்க வேண்டும் என பல உளவியலாளர்கள் கூறுகின்றனர் எனவும் றாமநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடமையாற்றும் இராணுவத்தினருக்கு எந்த அடிப்படையில் விடுமுறை வழங்கப்படுவது தொடர்பாக தனக்கு உறுதியாகத் தெரியாது எனவும் இவர் கூறுகின்றார்.
இராணுவத்தினருக்கு உள ஆற்றுப் படுத்தல் வழங்கப்படுகின்றது. இராணுவத்தின் அதிகார கட்டளைச் சங்கிலியை எடுத்துப் பார்த்தால் இங்குள்ள ஒவ்வொரு இராணுவத்தினனுக்கும் எவ்வாறான ஆற்றுப்படுத்தல்கள் வழங்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறான உளவியல் மேம்பாட்டுப் பயிற்சிகள் இராணுவத்தினர் பல்வேறு உதவிகளை வழங்குகின்றது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் றுவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தில் கோப்ரல் தர நிலையிலுள்ள ஒருவர் ஏழு சிப்பாய்களுக்கு பொறுப்பாக கடமையாற்றுகின்றார். இவ் ஏழு சிப்பாய்களுடனும் அவர்களது கோப்ரல் ஒவ்வொரு வாரமும் முறைசார் கலந்துரையாடல்களை மேற்கொள்வார்.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் நேர்காணல்களின் மூலம் அறியப்படும், அடையாளங் காணப்படும் பிரச்சினைகளை உத்தியோக பூர்வமாக இக் கோப்ரல் பதிவு செய்து அறிக்கையிடுவார். இலங்கை இராணுவக் கட்டமைப்பில் நான்கு பிளாற்றூன்கள் ஒரு கொம்பனி ஆகும். இதன்படி, கொம்பனிப் பொறுப்பதிகாரி தனக்குக் கீழுள்ள இராணுவத்தினர் சந்தித்து அவர்களுக்கு தேவைப்படும் உள ஆற்றுப்படுத்தல்களை வழங்குவார்.
இவ்வாறு இலங்கை இராணுவக் கட்டமைப்பின் கட்டளைச் சங்கிலியில் கீழிருந்து மேல்நோக்கி பதவி வகிக்கும் அனைத்து இராணுவ அதிகாரிகளும் தேவைப்படும் பட்சத்தில் தமக்கு கீழுள்ள இராணுவத்தினருக்கு உள ஆற்றுப்படுத்தல்களை தேவையான பல்வேறு வடிவங்களில் வழங்குவர். இதன் மூலம் அனைத்து இராணுவத்தினரதும் உளவியலானது மிகச் சிறப்பாக காணப்படும் என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேலும் விளக்கமளித்தார்.
எவ்வாறிருப்பினும், இவ் இராணுவத்தினரின் மனங்களை அறிந்து அவர்களின் உளத் தாக்கங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இராணுவ டிவிசன்களில் தகைமையான மனோதத்துவ வைத்தியர் ஒருவர் மட்டும் உள்ளார்.
இராணுவ வீரர் ஒருவருக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமா அல்லது இல்லையா என்பதை இலங்கை கட்டளைத் தர அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்வார்கள். இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தலைமைத்துவ பயிற்சிகளில் ஆற்றுப்படுத்தலும் உள்ளடங்குகின்றது.
தனது கட்டளையின் கீழ் செயற்படும் இராணுவத்தினர் ஒருவர் எவ்வாறான மனத் தாக்கத்துக்கு உட்பட்டுள்ளார் என்பதை இவ் இராணுவ அதிகாரிகள் அடையாளங் கண்டுகொள்வர் எனவும் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
உளவியல் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த தகைமை பெற்ற மனோதத்துவ வைத்தியர் ஒருவராலேயே உளவியல் தாக்கத்துக்கு உட்பட்ட ஒருவரை நன்கு அடையாளங் காணமுடியும். உளத் தாக்கத்துக்கு உட்பட்ட இராணுவத்தினர் ஒருவரை அவருடன் கூடப் பணியாற்றும் சக இராணுத்தினனால் அடையாளங் கண்டு கொள்ள முடியாது என றாமநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த அடிப்படையில் இலங்கை இராணுவப் பேச்சாளரால் கூறப்பட்ட விளக்கத்தை இவர் ஏற்க மறுத்துள்ளதுடன், இவ்வாறான ஒரு முறைமை போதியளவு ஆற்றுப்படுத்தலை வழங்கமாட்டாது எனவும் றாமநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான உள மேம்பாட்டு பயிற்சிகள் பெற்ற ஒரு இராணுவ அதிகாரியும் தாக்கத்துக்கு உள்ளான இராணுவத்தினனும் ஒரே சூழலில் பணியாற்றுவதால் இவ்வாறான உளத்தாக்கங்களை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதாவது உள மேம்பாட்டு பயிற்சி பெற்ற குறிப்பிட்ட இராணுவ அதிகாரியும் அந்த சூழலில் மனத் தாக்கத்துக்கு உட்பட்ட உள நோயாளி ஆவார். இவ்வாறான ஒரு நோயாளியால் தனது சக இராணுவத்தினனை அடையாளங் கண்டு கொள்ள முடியாது என றாமநாயக்க விளக்கமளிக்கின்றார்.
கொழும்பு பல்கலைக் கழகத்தில் உளவியல் கற்கைத் துறை விரிவுரையாளரான கலாநிதி சரத் விஜயசூரியா போன்றவர்கள் களத்தில் பணியாற்றும் இராணுவத்தினரைச் சந்தித்து உளவியல் ஆலோசனைகளை வழங்குவதாகவும் இராணுவப் பேச்சாளர் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
தியானப் பயிற்சி போன்ற பல்வேறு மன அழுத்தங்களைக் குறைக்கும் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்வாறான தியானப் பயிற்சிகளைப் பெற விரும்புபவர்கள் இதனைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் இதனை Vipassana தியான மையம் வழங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் தொடர்பாக வினவியபோது, இவ்வாறான படுகொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒவ்வொரு இராணுவத்தினர் நிலைப்பாடு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்ட போதிலும், இவர்கள் PSTD என்கின்ற மன நோய்க்கு உட்பட்டிருக்கவில்லை எனவும் வனிகசூரிய பதிலளித்துள்ளார்.
கடந்த வாரம் இராணுவத்தினன் ஒருவன் கண்டியிலிருந்த தனது காதலியின் வீட்டை உடைத்து அங்கே புகுந்து கொண்டதுடன், தனது காதலியையும், காதலியின் தாயாரையும், தந்தையையும் துப்பாக்கியில் சுட்டுப் படுகொலை செய்து விட்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இச்சம்பவம் தொடர்பாக வனிகசூரியவிடம் வினவியபோது, "குறிப்பிட்ட இராணுவத்தினன் ஒரு ஆண்டுக்கு முன்னரே இராணுவத்தில் இணைந்திருந்தார். இவர் ஒருபோதும் யுத்தத்தில் பங்கு கொள்ளவில்லை. இவர் தனது தனிப்பட்ட விடயத்துக்காகவே இந்தப் படுகொலைகளை மேற்கொண்டுள்ளார். இவர் இராணுவத்தில் இணைந்திருக்காவிட்டாலும், இந்தப் படுகொலைகளைச் செய்திருப்பார் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன் எனப் பதிலளித்தார்.
ஆறு ஆண்டு சேவையைப் பூர்த்தி செய்த இராணுவத்தினர் ஒருவர், ஒன்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்த இராணுவத்தினர் ஒருவருக்கு பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டதால், இந்த மாதத்தின் ஆரம்பத்தில் ஒன்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்த இராணுவத்தினர் தனது இராணுவ பொறுப்பதிகாரியை படுகொலை செய்திருந்தார்.
உண்மையில் இந்தச் சம்பவத்தைப் பார்த்தால், இது முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகும். அதாவது சேவைக் காலம் குறைந்த ஒருவரை தனது பொறுப்பதிகாரியாக ஏற்றுக் கொள்ள முடியாது, பொறாமை உணர்வால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவம் இதுவாகும் என வனிகசூரிய விளக்கமளித்தார்.
ஆனால் இவை PSTD என்கின்ற மனநோய்த் தாக்கத்தால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் என்பதை வனிகசூரிய ஏற்க மறுத்துவிட்டார். மேற்கூறிய இரு எடுத்துக்காட்டுக்களும் PSTD என்கின்ற நோயின் புதிய அறிகுறிகளாக இருக்கலாம் எனவும், அண்மைக்காலத்தில் இலங்கையில் இராணுவத்தினர் படுகொலைச் சம்பவங்களில் ஈடுபடுவதால், இவர்களைப் பரிசோதிக்க வேண்டும் எனவும் றாமநாயக்க உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
வழிமூலம்: The Sunday Leader
தமிழில்: நித்தியபாரதி
இவர்களுடன் பணியாற்றுபவர் என்ற வகையில் இதனை என்னால் உணர முடிகின்றது. அவர்கள் பல்வேறு உளவியல் தாக்கங்களுக்கு உட்படுகின்றனர் என ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் பங்கு பற்றிய பின்னர் அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பிய இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்றிய றாமநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இதேபோன்றே இலங்கையில் தொடரப்பட்ட நீண்ட கால யுத்தத்தின் விளைவாக அதில் பங்கு கொண்ட இராணுவத்தினரும் மன அழுத்தங்களுக்கு ஆளாகியிருப்பர் என அவர் உறுதியாகத் தெரிவிக்கின்றார்.
யுத்தத்தில் பங்கு கொண்ட பெரும்பாலான இராணுவத்தினர் Post-Traumatic Stress Disorder -PSTD என்கின்ற உளவியல் நோய்க்கு உட்படுகின்றனர். அறிவியல் ரீதியாக நோக்கில் இதன் விளைவுகள் மோதலின் போது மட்டும் வெளிப்படமாட்டாது.
ஆனால் மிகத் தீவிர யுத்தத்தில் பங்கு கொள்ளும் ஒரு இராணுவத்தினன் மன அழுத்தம் தரவல்ல சூழலில் வித்தியாசமான கோணத்தில் செயற்படத் தொடங்குவார். அதாவது அவர் தீவிர யுத்தத்தில் பங்கு கொண்டதன் பின்னர் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு இவர் உள்ளாவதால் இவ்வாறு நடந்து கொள்ள முற்படுவார் என றாமநாயக்க தெரிவித்துள்ளார்.
இது பொதுவாக இராணுவத்தினர் மத்தியில் காணப்படுகின்ற ஒரு பிரச்சினை என்பதால் இதனை மிகக் கவனமாகக் கையாள்வதுடன், இதற்குத் தேவையான உள ஆற்றுப்படுத்தலையும் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தில் பங்கு கொண்டதன் பின்னர் ஏற்படும் PSTD என்கின்ற மன அழுத்த நோயால் பாதிக்கப்படும் இராணுவத்தினரோ அல்லது இவ்வாறான தாக்கங்களுக்கு உட்பட்ட வேறுயாராவது தாம் பெற்றுக் கொண்ட உளத்தை சிதைக்கும் அந்தக் கோரமான, கடினமான அனுபவங்கள் மீண்டும் மீண்டும் அவர்களது மனங்களில் பிரதிபலிப்பதால் இவ்வாறான உளத்தாக்கத்துக்கு உட்படுகின்றனர்.
இவ்வாறு இவர்களின் மனங்களைப் பாதித்த பழைய சம்பவங்கள் மீண்டும் இவர்களை ஆட்கொள்ளும் போது, இவர்கள் தமது உண்மையான நிலையை இழந்து விடுகின்றனர். இதனால் PSTD என்கின்ற உளவியல் தாக்கத்துக்கு உட்படும் இராணுவத்தினர் ஒருவர் தன்னைச் சூழ என்ன நடக்கின்றது என்பதை அறியாது வன்முறையான சம்பவங்களை மேற்கொள்ள மனதளவில் தூண்டப்படுகின்றனர் என அவர் தெளிவுபடுத்தினார்.
அண்மைய காலங்களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான விரிவான தகவல்கள் தனக்குத் தெரியாது என்பதை ஏற்றுக் கொண்ட றாமநாயக்க அதேவேளையில், இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் அதிகரிப்பதால் தொடர்புபட்ட அதிகாரிகள் உடனடியாக இவற்றுடன் தொடர்புபட்ட காரணங்களை அறிந்து ஆர்வத்துடன் செயற்பட்டு, இவ்வாறான படுகொலைகள் மேலும் நடைபெறாது தடுப்பதற்குகந்த வழிவகைகளை ஆராய்ந்து செயற்படுத்த வேண்டும் எனவும் இவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வீட்டு வன்முறைகள் மற்றும் கொலைச் சம்பவங்களில் அதிகளவான ஒழுக்கமான ஆண்கள் மற்றும் பெண்கள் ஈடுபடுவதானது, இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்கான பிரதான காரணங்கள் அடையாளங் காணப்படாது உள்ளதையே சுட்டிக்காட்டுகின்றது என றாமநாயக்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவைப் பொறுத்தளவில் யுத்த வலயத்துக்கு கடமைக்கு அனுப்பப்படும் இராணுவத்தினர் மீண்டும் திரும்பி வந்தவுடன் அவர்கள் தமது வீட்டுக்குச் சென்று குடும்பத்தவர்களுடன் பொழுதைக் கழிப்பதற்கான விடுமுறை வழங்கப்படுவதாகவும், இதனால் இவர்களின் மன அழுத்தங்கள் குறைக்கப்படுவதாகவும் றாமநாயக்க தெரிவித்துள்ளார்.
எடுத்துக்காட்டாக ஆறு மாதங்கள் யுத்த களத்தில் பணியாற்றும் ஒருவர் தனது ஒவ்வொரு நாள் வாழ்வையும் இழக்கின்றார். இதனால் இவ்வாறான இராணுவத்தினர் அவர்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட்டு, அங்கே பெரும்பாலான பொழுதுகளைக் கழிக்க வேண்டும் என பல உளவியலாளர்கள் கூறுகின்றனர் எனவும் றாமநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடமையாற்றும் இராணுவத்தினருக்கு எந்த அடிப்படையில் விடுமுறை வழங்கப்படுவது தொடர்பாக தனக்கு உறுதியாகத் தெரியாது எனவும் இவர் கூறுகின்றார்.
இராணுவத்தினருக்கு உள ஆற்றுப் படுத்தல் வழங்கப்படுகின்றது. இராணுவத்தின் அதிகார கட்டளைச் சங்கிலியை எடுத்துப் பார்த்தால் இங்குள்ள ஒவ்வொரு இராணுவத்தினனுக்கும் எவ்வாறான ஆற்றுப்படுத்தல்கள் வழங்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறான உளவியல் மேம்பாட்டுப் பயிற்சிகள் இராணுவத்தினர் பல்வேறு உதவிகளை வழங்குகின்றது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் றுவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தில் கோப்ரல் தர நிலையிலுள்ள ஒருவர் ஏழு சிப்பாய்களுக்கு பொறுப்பாக கடமையாற்றுகின்றார். இவ் ஏழு சிப்பாய்களுடனும் அவர்களது கோப்ரல் ஒவ்வொரு வாரமும் முறைசார் கலந்துரையாடல்களை மேற்கொள்வார்.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் நேர்காணல்களின் மூலம் அறியப்படும், அடையாளங் காணப்படும் பிரச்சினைகளை உத்தியோக பூர்வமாக இக் கோப்ரல் பதிவு செய்து அறிக்கையிடுவார். இலங்கை இராணுவக் கட்டமைப்பில் நான்கு பிளாற்றூன்கள் ஒரு கொம்பனி ஆகும். இதன்படி, கொம்பனிப் பொறுப்பதிகாரி தனக்குக் கீழுள்ள இராணுவத்தினர் சந்தித்து அவர்களுக்கு தேவைப்படும் உள ஆற்றுப்படுத்தல்களை வழங்குவார்.
இவ்வாறு இலங்கை இராணுவக் கட்டமைப்பின் கட்டளைச் சங்கிலியில் கீழிருந்து மேல்நோக்கி பதவி வகிக்கும் அனைத்து இராணுவ அதிகாரிகளும் தேவைப்படும் பட்சத்தில் தமக்கு கீழுள்ள இராணுவத்தினருக்கு உள ஆற்றுப்படுத்தல்களை தேவையான பல்வேறு வடிவங்களில் வழங்குவர். இதன் மூலம் அனைத்து இராணுவத்தினரதும் உளவியலானது மிகச் சிறப்பாக காணப்படும் என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேலும் விளக்கமளித்தார்.
எவ்வாறிருப்பினும், இவ் இராணுவத்தினரின் மனங்களை அறிந்து அவர்களின் உளத் தாக்கங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இராணுவ டிவிசன்களில் தகைமையான மனோதத்துவ வைத்தியர் ஒருவர் மட்டும் உள்ளார்.
இராணுவ வீரர் ஒருவருக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமா அல்லது இல்லையா என்பதை இலங்கை கட்டளைத் தர அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்வார்கள். இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தலைமைத்துவ பயிற்சிகளில் ஆற்றுப்படுத்தலும் உள்ளடங்குகின்றது.
தனது கட்டளையின் கீழ் செயற்படும் இராணுவத்தினர் ஒருவர் எவ்வாறான மனத் தாக்கத்துக்கு உட்பட்டுள்ளார் என்பதை இவ் இராணுவ அதிகாரிகள் அடையாளங் கண்டுகொள்வர் எனவும் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
உளவியல் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த தகைமை பெற்ற மனோதத்துவ வைத்தியர் ஒருவராலேயே உளவியல் தாக்கத்துக்கு உட்பட்ட ஒருவரை நன்கு அடையாளங் காணமுடியும். உளத் தாக்கத்துக்கு உட்பட்ட இராணுவத்தினர் ஒருவரை அவருடன் கூடப் பணியாற்றும் சக இராணுத்தினனால் அடையாளங் கண்டு கொள்ள முடியாது என றாமநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த அடிப்படையில் இலங்கை இராணுவப் பேச்சாளரால் கூறப்பட்ட விளக்கத்தை இவர் ஏற்க மறுத்துள்ளதுடன், இவ்வாறான ஒரு முறைமை போதியளவு ஆற்றுப்படுத்தலை வழங்கமாட்டாது எனவும் றாமநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான உள மேம்பாட்டு பயிற்சிகள் பெற்ற ஒரு இராணுவ அதிகாரியும் தாக்கத்துக்கு உள்ளான இராணுவத்தினனும் ஒரே சூழலில் பணியாற்றுவதால் இவ்வாறான உளத்தாக்கங்களை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதாவது உள மேம்பாட்டு பயிற்சி பெற்ற குறிப்பிட்ட இராணுவ அதிகாரியும் அந்த சூழலில் மனத் தாக்கத்துக்கு உட்பட்ட உள நோயாளி ஆவார். இவ்வாறான ஒரு நோயாளியால் தனது சக இராணுவத்தினனை அடையாளங் கண்டு கொள்ள முடியாது என றாமநாயக்க விளக்கமளிக்கின்றார்.
கொழும்பு பல்கலைக் கழகத்தில் உளவியல் கற்கைத் துறை விரிவுரையாளரான கலாநிதி சரத் விஜயசூரியா போன்றவர்கள் களத்தில் பணியாற்றும் இராணுவத்தினரைச் சந்தித்து உளவியல் ஆலோசனைகளை வழங்குவதாகவும் இராணுவப் பேச்சாளர் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
தியானப் பயிற்சி போன்ற பல்வேறு மன அழுத்தங்களைக் குறைக்கும் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்வாறான தியானப் பயிற்சிகளைப் பெற விரும்புபவர்கள் இதனைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் இதனை Vipassana தியான மையம் வழங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் தொடர்பாக வினவியபோது, இவ்வாறான படுகொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒவ்வொரு இராணுவத்தினர் நிலைப்பாடு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்ட போதிலும், இவர்கள் PSTD என்கின்ற மன நோய்க்கு உட்பட்டிருக்கவில்லை எனவும் வனிகசூரிய பதிலளித்துள்ளார்.
கடந்த வாரம் இராணுவத்தினன் ஒருவன் கண்டியிலிருந்த தனது காதலியின் வீட்டை உடைத்து அங்கே புகுந்து கொண்டதுடன், தனது காதலியையும், காதலியின் தாயாரையும், தந்தையையும் துப்பாக்கியில் சுட்டுப் படுகொலை செய்து விட்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இச்சம்பவம் தொடர்பாக வனிகசூரியவிடம் வினவியபோது, "குறிப்பிட்ட இராணுவத்தினன் ஒரு ஆண்டுக்கு முன்னரே இராணுவத்தில் இணைந்திருந்தார். இவர் ஒருபோதும் யுத்தத்தில் பங்கு கொள்ளவில்லை. இவர் தனது தனிப்பட்ட விடயத்துக்காகவே இந்தப் படுகொலைகளை மேற்கொண்டுள்ளார். இவர் இராணுவத்தில் இணைந்திருக்காவிட்டாலும், இந்தப் படுகொலைகளைச் செய்திருப்பார் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன் எனப் பதிலளித்தார்.
ஆறு ஆண்டு சேவையைப் பூர்த்தி செய்த இராணுவத்தினர் ஒருவர், ஒன்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்த இராணுவத்தினர் ஒருவருக்கு பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டதால், இந்த மாதத்தின் ஆரம்பத்தில் ஒன்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்த இராணுவத்தினர் தனது இராணுவ பொறுப்பதிகாரியை படுகொலை செய்திருந்தார்.
உண்மையில் இந்தச் சம்பவத்தைப் பார்த்தால், இது முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகும். அதாவது சேவைக் காலம் குறைந்த ஒருவரை தனது பொறுப்பதிகாரியாக ஏற்றுக் கொள்ள முடியாது, பொறாமை உணர்வால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவம் இதுவாகும் என வனிகசூரிய விளக்கமளித்தார்.
ஆனால் இவை PSTD என்கின்ற மனநோய்த் தாக்கத்தால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் என்பதை வனிகசூரிய ஏற்க மறுத்துவிட்டார். மேற்கூறிய இரு எடுத்துக்காட்டுக்களும் PSTD என்கின்ற நோயின் புதிய அறிகுறிகளாக இருக்கலாம் எனவும், அண்மைக்காலத்தில் இலங்கையில் இராணுவத்தினர் படுகொலைச் சம்பவங்களில் ஈடுபடுவதால், இவர்களைப் பரிசோதிக்க வேண்டும் எனவும் றாமநாயக்க உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
வழிமூலம்: The Sunday Leader
தமிழில்: நித்தியபாரதி
Monday, May 28, 2012
உலகத் தமிழர்களின் ஆதரவோடு தமிழீழத் தாயகம் நோக்கிய நாதம் வானோசை ஒலிக்கின்றது!
தமிமீழத் தேசிய துக்க நாளான மே 18ம் நாள்
தொடங்கிய இந்த ஒலிபரப்பு, பிரதி ஞாயிறு தோறும் இலங்கை நேரம் இரவு 8:30க்கு,
1 மணி நேர ஒலிபரப்பாக ஒலித்து வருகின்றது.
சிற்றலை 12 250 Khz அலைவரிசையூடாக ஒலிபரப்பாகும் இந்த ஒலிபரப்பினை தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், மொறிசியஸ் உட்பட ஆசிய பிராந்தியத்தில் கேட்க கூடியதாக இருக்கும்.
மே 27ம் நாள் ஒலிபரப்பில், தமிழீழத்தில் நீதிக்காக குரல் கொடுத்து வரும் மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை மீது சிங்கள இனவாதிகளிhல் ஏற்படுத்தப்பட்டு வரும் நெருக்கடிகள் குறித்த தகவல்கள், தென் தமிழீழத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் அவர்களது கருத்துக்கள், தமிழீழத்துக்கான பொதுசன வாக்கெடுப்பினை நடத்தக் கோரி தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஓரு கையெழுத்துப் போராட்டம் குறித்து மருத்துவர் அருள் எழிலன் அவர்களுடைய கருத்துக்கள், பிரித்தானியாவில் இருந்து திருப்பி அனுப்பபடும் ஈழத் தமிழ் அகதிகள் விவகாரம் குறித்த தவகல்கள் மற்றும் மலேசியால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நினைவேந்தல் நிகழ்வுகளின் தொகுப்பு ஆகிய விடயங்கள் பிரதான விடயங்களாக உள்ளக்கப்பட்டுள்ளன.
மே27ம் நாள் ஞாயிறு ஒலிபரப்பினைக் கேட்க : http://soundcloud.com/tgte/27may2012
தமிழீழத் தாயகம் நோக்கிய சிற்றலை ஒலிபரப்பு குறித்த கருத்துக்களுக்கு media@tgte.org இந்த மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ள முடியுமென நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடங்கப்பட்டுள்ள இந்த வானலை சிற்றலை ஒலிபரப்பு, சிறிலங்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள இன்னுமொரு சவாலகவே சிறிலங்கா ஊடகங்கள் வர்ணித்துள்ளன.
இந்த சிற்றலை வானொலி ஒலிபரப்பை இலங்கையில் கேட்காமல் தடுக்க முடியாது என்று சிறிலங்காவின் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் அனுச பல்பிட்ட தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளன.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடத்தப்படும் சிற்றலை வானொலி ஒலிபரப்பு சமிக்ஞைகளை தடுப்பதற்கான கருவிகள் தம்மிடம் இல்லை என தெரிவித்துள்ள அனுச பல்பிட்ட ஆனால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் அதைச் செய்ய முடியுமென தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிற்றலை ஒலிபரப்புக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மட்டுமே அனுமதி பெற்றுள்ளது. அவர்களுக்கு மட்டும் தான் இந்த ஒலிபரப்பைத் தடுக்கும் வசதி உள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, இது குறித்து இலங்கை ஒலிபரப்பக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க கருத்து வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ளார்.
சிற்றலை 12 250 Khz அலைவரிசையூடாக ஒலிபரப்பாகும் இந்த ஒலிபரப்பினை தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், மொறிசியஸ் உட்பட ஆசிய பிராந்தியத்தில் கேட்க கூடியதாக இருக்கும்.
மே 27ம் நாள் ஒலிபரப்பில், தமிழீழத்தில் நீதிக்காக குரல் கொடுத்து வரும் மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை மீது சிங்கள இனவாதிகளிhல் ஏற்படுத்தப்பட்டு வரும் நெருக்கடிகள் குறித்த தகவல்கள், தென் தமிழீழத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் அவர்களது கருத்துக்கள், தமிழீழத்துக்கான பொதுசன வாக்கெடுப்பினை நடத்தக் கோரி தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஓரு கையெழுத்துப் போராட்டம் குறித்து மருத்துவர் அருள் எழிலன் அவர்களுடைய கருத்துக்கள், பிரித்தானியாவில் இருந்து திருப்பி அனுப்பபடும் ஈழத் தமிழ் அகதிகள் விவகாரம் குறித்த தவகல்கள் மற்றும் மலேசியால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நினைவேந்தல் நிகழ்வுகளின் தொகுப்பு ஆகிய விடயங்கள் பிரதான விடயங்களாக உள்ளக்கப்பட்டுள்ளன.
மே27ம் நாள் ஞாயிறு ஒலிபரப்பினைக் கேட்க : http://soundcloud.com/tgte/27may2012
தமிழீழத் தாயகம் நோக்கிய சிற்றலை ஒலிபரப்பு குறித்த கருத்துக்களுக்கு media@tgte.org இந்த மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ள முடியுமென நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடங்கப்பட்டுள்ள இந்த வானலை சிற்றலை ஒலிபரப்பு, சிறிலங்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள இன்னுமொரு சவாலகவே சிறிலங்கா ஊடகங்கள் வர்ணித்துள்ளன.
இந்த சிற்றலை வானொலி ஒலிபரப்பை இலங்கையில் கேட்காமல் தடுக்க முடியாது என்று சிறிலங்காவின் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் அனுச பல்பிட்ட தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளன.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடத்தப்படும் சிற்றலை வானொலி ஒலிபரப்பு சமிக்ஞைகளை தடுப்பதற்கான கருவிகள் தம்மிடம் இல்லை என தெரிவித்துள்ள அனுச பல்பிட்ட ஆனால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் அதைச் செய்ய முடியுமென தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிற்றலை ஒலிபரப்புக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மட்டுமே அனுமதி பெற்றுள்ளது. அவர்களுக்கு மட்டும் தான் இந்த ஒலிபரப்பைத் தடுக்கும் வசதி உள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, இது குறித்து இலங்கை ஒலிபரப்பக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க கருத்து வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ளார்.
சிறுவயதில் தமிழர்கள் என்றால் யார் என்று எனக்குத் தெரியாது !
நான் சிறுவயதாக இருந்த காலகட்டத்தில், தமிழர்கள் என்று ஒரு இனம்
இருப்பதே எனக்குத் தெரியாது என்று கோத்தபாய BBC நிருபருக்குத் தெரிவித்து
காமடி பண்ணியுள்ளார். பல பொதுமக்கள் காணமல் போவது தொடர்பாகவும், இறுதி
யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாகவும் BBC
செய்தியாளர் கோத்தபாயவிடன் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த கோத்தபாய,
வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமல்ல முழு இலங்கைக்கும் சொந்தம் என்று
கூறியுள்ளார். அங்கே சிங்களவர்கள் காணிகளை வாங்கலாம் என்று தெரிவித்த அவர்,
தான் சிறுவயதில் அம்பாந்தோட்டையில் இருந்தவேளை அங்கே தமிழர் என்று ஒரு
இனம் இருக்கவில்லையாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இப்போது பார்த்தால், அம்பாந்தோட்டையில் தமிழர்கள் வசிப்பதாகவும், அப்படி என்றால் வடக்கில் ஏன் சிங்களவர்கள் வசிக்கக்கூடாது எனவும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார். காணமல் போகும் நபர்கள் குறித்து கேட்க்கப்பட்டபோது, காணமல் போகும் நபர்கள் பாதள உலகக்கோஷ்டியினரோடு தொடர்புடையவர்கள் என்றும், அவர்கள் சிலவேளை போதைப்பொருள் வியாபாரியாகக் கூட இருக்கலாம் என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே அவர்கள், இந்தியா சென்றுவிட்டு, அவர்கள் பெற்றோரைக் கொண்டு தாம் காணமல் போயுள்ளதாக புகார் தெரிவிப்பதாகவும் கோத்தபாய புது விளக்கம் கொடுத்துள்ளார்.
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டது, வெறும் 6000 பேர் தான் என்று தெரிவித்த கோத்தபாய, இவர்களுள் போராளிகளும் அடங்குவதாகத் தெரிவித்தார். அதாவது கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 6000 பேருக்குள்ளேயே போராளிகளின் எண்ணிக்கையும் அடங்குவதாகவும், பொதுமக்கள் என்று குறிப்பிடும்போது மிகச் சொற்பமான அளவு மக்களே கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். கோத்தபாய தெரிவித்திருக்கும் கருத்துக்களின் மாற்றம் இல்லை ... ஆனால் அவர் நேர்காணல் வழங்கும் விதம் வெகுவாக மாறியுள்ளது. வழமையாக நிருபர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு கோபப்பட்டு பதற்றத்துடன் பதிலளிக்கும் கோத்தபாய, இம்முறை அதனை முற்றாகவே மாற்றியுள்ளார்.
ஆனால் இப்போது பார்த்தால், அம்பாந்தோட்டையில் தமிழர்கள் வசிப்பதாகவும், அப்படி என்றால் வடக்கில் ஏன் சிங்களவர்கள் வசிக்கக்கூடாது எனவும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார். காணமல் போகும் நபர்கள் குறித்து கேட்க்கப்பட்டபோது, காணமல் போகும் நபர்கள் பாதள உலகக்கோஷ்டியினரோடு தொடர்புடையவர்கள் என்றும், அவர்கள் சிலவேளை போதைப்பொருள் வியாபாரியாகக் கூட இருக்கலாம் என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே அவர்கள், இந்தியா சென்றுவிட்டு, அவர்கள் பெற்றோரைக் கொண்டு தாம் காணமல் போயுள்ளதாக புகார் தெரிவிப்பதாகவும் கோத்தபாய புது விளக்கம் கொடுத்துள்ளார்.
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டது, வெறும் 6000 பேர் தான் என்று தெரிவித்த கோத்தபாய, இவர்களுள் போராளிகளும் அடங்குவதாகத் தெரிவித்தார். அதாவது கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 6000 பேருக்குள்ளேயே போராளிகளின் எண்ணிக்கையும் அடங்குவதாகவும், பொதுமக்கள் என்று குறிப்பிடும்போது மிகச் சொற்பமான அளவு மக்களே கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். கோத்தபாய தெரிவித்திருக்கும் கருத்துக்களின் மாற்றம் இல்லை ... ஆனால் அவர் நேர்காணல் வழங்கும் விதம் வெகுவாக மாறியுள்ளது. வழமையாக நிருபர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு கோபப்பட்டு பதற்றத்துடன் பதிலளிக்கும் கோத்தபாய, இம்முறை அதனை முற்றாகவே மாற்றியுள்ளார்.
தான் சாந்தமாகப் இருப்பதுபோலவும், அடக்கமாகப் பதில்தருவதுபோலவும் நடித்துள்ளார். ஆனால் என்னதான் நடித்தாலும், தமிழர்களைப் பற்றி பேசும்போது மட்டும் அவர் டென்ஷனாவது அவர் முக பாவத்தை வைத்தே காட்டிக்கொடுத்து விடுகிறது அல்லவா ...
சத்தமின்றி இலங்கை வந்த தேமுதிக உறுப்பினர்: அதிர்ச்சியில் உளவுத்துறை !
தமிழகத்தில்
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலங்கை விவகாரத்தை வைத்து
அரசியல் செய்து வரும் நிலையில், தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும்,
நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக
கூறப்படுகின்றது. இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள்
மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள்
போன்றவர்கள், மத்திய அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து
செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக ரகசியமாக இலங்கை சென்று அங்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.
இது குறித்து கொழும்பில் உள்ள பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது,
தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், யாழ்ப்பாணம் வந்துள்ளது உண்மை. ஆனால், அருண் பாண்டியன் தனிப்பட்ட முறையில் ஒரு மாத சுற்றுலா விசாவில், வந்துள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக, திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஐங்கரன் இன்டர்நேஷனல் தலைவர் கருணாமூர்த்தியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார். கருணாமூர்த்தி ஈழத் தமிழர் ஆவார். யாழ்ப்பாணம் வந்த, அருண் பாண்டியன், இணுவில் என்ற கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது, பொது மக்கள் பலரையும் அவர் சந்தித்துப் பேசினார்.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மிக முக்கியமான புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் இருவர், அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது என்கின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் இலங்கை விவகாரத்தில் மிக ஆர்வமாக உள்ளதாகவும், அதனால் தான் தனது நம்பிக்கைகுரிய நட்சத்திரம் அருண்பாண்டியன் மூலம் சில தகவல்களை பெற்று வர பணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அருண் பாண்டியன் தமிழகம் வந்த பின்பு, இலங்கையில் ஈழ தமிழர்களின் நிலையை புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் புட்டுவைக்கப் போவதாகவும் ஒரு தகவல் உலா வருகின்றது. இதை லேட்டாக மோப்பம் பிடித்த தமிழக உளவுத்துறை , கடும் அதிர்ச்சி அடைந்து அது குறித்த தகவல்களை விரைவாக சேகரித்து வருகின்றது.
இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக ரகசியமாக இலங்கை சென்று அங்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.
இது குறித்து கொழும்பில் உள்ள பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது,
தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், யாழ்ப்பாணம் வந்துள்ளது உண்மை. ஆனால், அருண் பாண்டியன் தனிப்பட்ட முறையில் ஒரு மாத சுற்றுலா விசாவில், வந்துள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக, திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஐங்கரன் இன்டர்நேஷனல் தலைவர் கருணாமூர்த்தியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார். கருணாமூர்த்தி ஈழத் தமிழர் ஆவார். யாழ்ப்பாணம் வந்த, அருண் பாண்டியன், இணுவில் என்ற கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது, பொது மக்கள் பலரையும் அவர் சந்தித்துப் பேசினார்.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மிக முக்கியமான புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் இருவர், அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது என்கின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் இலங்கை விவகாரத்தில் மிக ஆர்வமாக உள்ளதாகவும், அதனால் தான் தனது நம்பிக்கைகுரிய நட்சத்திரம் அருண்பாண்டியன் மூலம் சில தகவல்களை பெற்று வர பணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அருண் பாண்டியன் தமிழகம் வந்த பின்பு, இலங்கையில் ஈழ தமிழர்களின் நிலையை புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் புட்டுவைக்கப் போவதாகவும் ஒரு தகவல் உலா வருகின்றது. இதை லேட்டாக மோப்பம் பிடித்த தமிழக உளவுத்துறை , கடும் அதிர்ச்சி அடைந்து அது குறித்த தகவல்களை விரைவாக சேகரித்து வருகின்றது.
மன்னார் முசலியில் மாணவியின் கண்கள் கைகளை கட்டப்பட்டு மூவர் பாலியல்வல்லுறவு!
மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறைப் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 14 வயது பாடசாலை மாணவி ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சட்டவைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாவத்துறைப் பகுதியைச் சேர்ந்த இப்பாடசாலை மாணவியை அதேபகுதியினை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கண்களையும் கைகளையும் கட்டி மறைவான இடத்திற்குக் கொண்டு சென்று பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் சிலாவத்துறை காவல்துறையில் இது தொடர்பாக முறைப்பாடு செய்த நிலையில் சிறுமி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய நிபுணரின் பரிசோதனைக்காக கடந்த வெள்ளிக்கிழமை மாலைகொண்டுசெல்லப்பட்டுள்ளார்
இதேவேளை இந்த மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சிலாவத்துறைப் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் காவல்துறயினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 3 சந்தேக நபர்களும் கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட நீதிவான் ஏ. யூட்சன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, May 27, 2012
காணாமல் போன யுவதி பாலத்திற்கு அடியில் சடலமாக மீட்பு (படங்கள்)
நாவலப்பிட்டி
பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடியன்லேன நீர்வீழ்ச்சிக்கு அருகில் 19 வயது
யுவதி ஒருவரின் சடலத்தினை பொது மக்கள் கண்ணுற்று நாவலப்பிட்டி பொலிஸாருக்கு
அறிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டி பொலிஸார் சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு வருகைத் தந்து விசாரணைகளை நடத்திய போது போஹில் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த ஜெபமாலை லூட்ஸ் ரொட்ரிகோ என்ற யுவதியே இவ்வாறு சடலமாக இனங்காணப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட யுவதி 25 ஆம் திகதி நாவலப்பிட்டி நகரிலுள்ள தனியார் கணினி பயிற்சி நிலையத்துக்குச் சென்றவர் எனவும் இரவாகியும் வீடு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து யுவதியின் பெற்றோர் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நாவலப்பிட்டி � பத்தனை பிரதான பாதையில் கடியன்லேன நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள பாலத்துக்கு அடியில் யுவதி இன்று 27 ஆம் திகதி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
யுவதியின் சடலம் காணப்பட்ட இடத்தில் யுவதியின் மேலும் சில உடைகள் இருந்த பொதியொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நீதிவானின் விசாரணைகளைத் தொடர்ந்து யுவதியின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுமென நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட் விஜயசிங்ஹ தெரிவித்தார்.
நாவலப்பிட்டி பொலிஸார் சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு வருகைத் தந்து விசாரணைகளை நடத்திய போது போஹில் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த ஜெபமாலை லூட்ஸ் ரொட்ரிகோ என்ற யுவதியே இவ்வாறு சடலமாக இனங்காணப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட யுவதி 25 ஆம் திகதி நாவலப்பிட்டி நகரிலுள்ள தனியார் கணினி பயிற்சி நிலையத்துக்குச் சென்றவர் எனவும் இரவாகியும் வீடு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து யுவதியின் பெற்றோர் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நாவலப்பிட்டி � பத்தனை பிரதான பாதையில் கடியன்லேன நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள பாலத்துக்கு அடியில் யுவதி இன்று 27 ஆம் திகதி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
யுவதியின் சடலம் காணப்பட்ட இடத்தில் யுவதியின் மேலும் சில உடைகள் இருந்த பொதியொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நீதிவானின் விசாரணைகளைத் தொடர்ந்து யுவதியின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுமென நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட் விஜயசிங்ஹ தெரிவித்தார்.
வெள்ளைவானில் இளம்பெண் ஒருவர் கடத்தல்: யாழில் இன்று காலை சம்பவம்
அதன் பின் குறித்த யுவதியை வானில் இழுத்துச் சென்றதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
வெள்ளை வாகனத்தில் வந்த சிலரால் திருநெல்வேலி பகுதியில் யுவதியொருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் இன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண், தனது தந்தையாருடன் தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு வீடு சென்ற போது வழி மறித்த கடத்தல் காரர்கள், பெண்ணின் தந்தையாரை கடுமையாக தாக்கிவிட்டு பெண்ணை கடத்திக் கொண்டு சென்றுள்ளனர்.
இதேவேளை குறித்த பெண், உரும்பிராய் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்ணுக்கும் ஆணொருவருக்கும் திருமணத்தில் ஏற்பட்டிருந்த பிணக்கே கடத்தலுக்கு காரணமாக அமைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த பெண்ணும் தந்தையாரும் பயணித்த வாகனம் நீண்டநேரம் அதே பகுதியில் கிடந்துள்ளது. இதேபோன்று கடத்தலின்போது பெண் கூச்சலிட்ட சத்தம் கேட்டு அயலவர்கள் அங்கு ஓடி வந்துள்ளனர். எனினும் அதற்குள் வாகனம் தப்பிச் சென்றுள்ளது.
தற்போது சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Friday, May 25, 2012
யேசு சிலுவையில் அறையப்படவில்லை, நபி வருகையை அவர் எதிர்வு கூறினார்: - தோலாலான நூல்
யேசு
சிலுவையில் அறையப்படவில்லை எனவும் நபி வருகையை அவர் எதிர்வு கூறினார்
எனவும் 5 ஆம் நூற்றாண்டுக்குரிய புத்தகமொன்றினை மேற்கோள்காட்டி ஈரானிய
ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமையானது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
குறித்த புத்தகமானது மிருக தோலினால் தயாரிக்கப்பட்டது. கடந்த 2000 ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் வைத்து கடத்தல்காரர்களிடமிருந்து இப்புத்தகம் மீட்கப்பட்டது.
மேற்படி புத்தகமானது யேசுநாதரின் சீடர்களில் ஒருவராகக் கருதப்படும் பர்னபாஸின் உண்மையான நற்செய்தி என துருக்கி நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையிலேயே இப்புத்தக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் கிறிஸ்தவ மதத்தின் ஆணி வேரையே ஆட்டம் காணச் செய்யுமென ஈரானிய ஊடகம் தெரிவித்துள்ளது.
சிரியக் (Syriac) மொழியில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
இது 5 ஆம் அல்லது 6ஆம் நூற்றாண்டுக்குரியதெனவும் இதில் முஹம்மது நபி அவர்களின் வருகை தொடர்பிலும் எதிர்வுகூறப்பட்டுள்ளதாக அவ்வூடகம் தெரிவித்துள்ளது.
எனினும் கிறிஸ்தவ உலகம் இத்தகைய நற்செய்தி நூல் இருப்பதனையே மறுத்து வருவதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நற்செய்தியின் 41 அத்தியாயத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகம் தெரிவிக்கின்றது.
'God has hidden himself as Archangel Michael ran them (Adam and Eve) out of heaven, (and) when Adam turned, he noticed that at top of the gateway to heaven, it was written "La elah ela Allah, Mohamad rasool Allah,"' meaning Allah is the only God and Mohammad his prophet.
மேலும் யேசுநாதர் சிலுவையில் அறையப்படவில்லையென அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவ்வூடகம் தெரிவித்துள்ளது.
துருக்கிய அதிகாரிகள் இப்புத்தகத்தினை 2000 ஆம் ஆண்டிலேயே கைப்பற்றினர்.
இவ்வருடம் பெப்ரவரி மாதம் வத்திக்கான் இப்புத்தகத்தினைப் பார்வையிட அனுமதி வழங்குமாறு துருக்கியிடம் கேட்டுக்கொண்டமையை அடுத்தே இது தொடர்பில் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் இச்செய்தி தொடர்பில் கிறிஸ்தவ அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
இப்புத்தகத்தின் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளதோடு, இது நகைப்புக்குரிய செய்தியெனவும் தெரிவித்துள்ளன.
கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சியில் ஈரான் பயம் கொண்டுள்ளதாகவும்,எனவே தான் இத்தகைய போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் ஆய்வாளர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த புத்தகமானது மிருக தோலினால் தயாரிக்கப்பட்டது. கடந்த 2000 ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் வைத்து கடத்தல்காரர்களிடமிருந்து இப்புத்தகம் மீட்கப்பட்டது.
மேற்படி புத்தகமானது யேசுநாதரின் சீடர்களில் ஒருவராகக் கருதப்படும் பர்னபாஸின் உண்மையான நற்செய்தி என துருக்கி நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையிலேயே இப்புத்தக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் கிறிஸ்தவ மதத்தின் ஆணி வேரையே ஆட்டம் காணச் செய்யுமென ஈரானிய ஊடகம் தெரிவித்துள்ளது.
சிரியக் (Syriac) மொழியில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
இது 5 ஆம் அல்லது 6ஆம் நூற்றாண்டுக்குரியதெனவும் இதில் முஹம்மது நபி அவர்களின் வருகை தொடர்பிலும் எதிர்வுகூறப்பட்டுள்ளதாக அவ்வூடகம் தெரிவித்துள்ளது.
எனினும் கிறிஸ்தவ உலகம் இத்தகைய நற்செய்தி நூல் இருப்பதனையே மறுத்து வருவதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நற்செய்தியின் 41 அத்தியாயத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகம் தெரிவிக்கின்றது.
'God has hidden himself as Archangel Michael ran them (Adam and Eve) out of heaven, (and) when Adam turned, he noticed that at top of the gateway to heaven, it was written "La elah ela Allah, Mohamad rasool Allah,"' meaning Allah is the only God and Mohammad his prophet.
மேலும் யேசுநாதர் சிலுவையில் அறையப்படவில்லையென அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவ்வூடகம் தெரிவித்துள்ளது.
துருக்கிய அதிகாரிகள் இப்புத்தகத்தினை 2000 ஆம் ஆண்டிலேயே கைப்பற்றினர்.
இவ்வருடம் பெப்ரவரி மாதம் வத்திக்கான் இப்புத்தகத்தினைப் பார்வையிட அனுமதி வழங்குமாறு துருக்கியிடம் கேட்டுக்கொண்டமையை அடுத்தே இது தொடர்பில் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் இச்செய்தி தொடர்பில் கிறிஸ்தவ அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
இப்புத்தகத்தின் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளதோடு, இது நகைப்புக்குரிய செய்தியெனவும் தெரிவித்துள்ளன.
கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சியில் ஈரான் பயம் கொண்டுள்ளதாகவும்,எனவே தான் இத்தகைய போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் ஆய்வாளர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
5 வயது சிறுவனுக்காக தலை குனிந்த ஒபாமா
வெள்ளை
மாளிகையில் தன்னைப் பார்க்க வந்த கருப்பர் இனத்தைச் சேர்ந்த 5 வயது
சிறுவனுக்காக தலை குனிந்துள்ளார் அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா.வெள்ளை
மாளிகையில் வெஸ்ட் விங் பகுதியில் உள்ள அறையில் ஜனாதிபதி தொடர்பான படங்களை
மாட்டி வைத்திருப்பார்கள். பழைய படங்களை அவ்வப்போது அகற்றி விட்டு புதிய
படங்களை மாற்றுவார்கள். ஆனால் ஒபாமா குணிந்தபடி இருக்கும் இந்தப் படம்
மட்டும் கடந்த 3 வருடங்களாக அகற்றப்படாமல் அப்படியே இருக்கிறது.
இந்தப் படத்தின் பின்னணி படு சுவாரஸ்யமானது. அமெரிக்க கடற்படைப்
பிரிவில் பணியாற்றி வந்தவர் கருப்பர் இனத்தைச் சேர்ந்த கார்ல்டன். இவர்
கடந்த ஜார்ஜ் புஷ் ஆட்சியின் கடைசி நாட்களின்போது வெள்ளை மாளிகையில், தேசிய
பாதுகாப்பு கவுன்சிலல் 2 ஆண்டு பணியாக நியமிக்கப்பட்டார். ஜார்ஜ் புஷ்
வெளியேறி ஒபாமா ஆட்சிக்கு வந்த பி்ன்னரும் பணியில் நீடித்த அவர், 3
ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.
அப்போது தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் ஒபாமாவை சந்தித்து குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள வந்திருந்தார். அவர்களை வரவேற்ற ஒபாமா அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் ஒபாமாவிடம் கார்ல்டனின் மனைவி, எனது இரு மகன்களும் உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகின்றனர் என்று கூறினார்.
இதையடுத்து முதலில் 5 வயது ஜேக்கப் பிலடெல்பியா ஒபாமாவிடம் பேசினான். அவன் ஒபாமாவிடம், எனது தலைமுடியைப் போலவே உங்களது தலைமுடியும் இருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன் என்று கேட்டான். இதைக் கேட்டதும் அங்கிருந்தவர்களுக்கு வியப்பாகி விட்டது.
ஆனால் சற்றும் சலனப்படாத ஒபாமா, இதற்கு நான் பதில் சொல்வதற்குப் பதில்
நீயே ஏன் அதைத் தொட்டுப் பார்க்கக் கூடாது என்று கேட்டார். அத்தோடு
நில்லாமல், சிறுவனின் முன்பு தலை குனிந்து தலையைத் தொட்டுப் பார்க்குமாறு
கூறினார். ஆனால் கேள்வியை வேகமாக கேட்டு விட்ட ஜேக்கப்பால், ஒபாமா தலையைத்
தொட்டுப் பார்க்க தயக்கம் ஏற்பட்டது.
இதைப் பார்த்த ஒபாமா, சும்மா தொட்டுப் பார் என்று தைரியமூட்டினார். இதையடுத்து சிறுவன் ஜேக்கப், ஒபாமா தலைமுடியைத் தடவிப் பார்த்தான். பிறகு அவனிடம் ஒபாமா கேட்டார், எப்படி இருக்கிறது என்று. அதற்கு அவன், ஆமாம், எனது தலைமுடியைப் போலத்தான் உள்ளது என்றான்.
இதையடுத்து ஜேக்கப்பின் அண்ணன் ஐசக் ஒபாமாவிடம், ஏன் எப் 22 போர் விமானங்களை விமானப்படையிலிருந்து நிறுத்தி விட்டீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர், அது செலவு பிடித்த வேலை. அதனால்தான் நிறுத்தி விட்டோம் என்றார்.
ஒபாமா தலையைக் குனிந்தபடி ஒரு சிறுவன் முன்பு நிற்கும் இந்த அரிய புகைப்படத்தை எடுத்தவர் பீட் செளசா. அவர் கூறுகையில், ஒரு புகைப்படக்காரர் எப்போதும் அலர்ட் ஆக இருக்க வேண்டும். ஜனாதிபதி ஒபாமா சட்டென தலையைக் குணிவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
நான் சுதாரித்து டக்கென அந்தக் காட்சியை எடுத்தேன். ஆனால் இந்த புகைப்படம் எனது வாழ்க்கையில் மறக்க முடியாததாக மாறும் என்று அப்போது நான் நினைத்துப் பார்க்கவில்லை என்றார்.
இந்த புகைப்படத்தின் ஒரு காப்பி இப்போது ஜேக்கப் பிலடெல்பியாவின் வீட்டிலும் தொங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது ஜேக்கப்பின் தந்தை ஆப்கானிஸ்தானில், அமெரிக்க வெளியுறவு அமைச்சக ஊழியராக பணியாற்றி வருகிறாராம்.
தற்போது 8 வயதாகும் ஜேக்கப்பின் கனவு என்ன தெரியுமா, அமெரிக்க ஜனாதிபதியாகவோ அல்லது ஒரு விமானியாகவோ வர வேண்டும் என்பதாம்.
அப்போது தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் ஒபாமாவை சந்தித்து குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள வந்திருந்தார். அவர்களை வரவேற்ற ஒபாமா அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் ஒபாமாவிடம் கார்ல்டனின் மனைவி, எனது இரு மகன்களும் உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகின்றனர் என்று கூறினார்.
இதையடுத்து முதலில் 5 வயது ஜேக்கப் பிலடெல்பியா ஒபாமாவிடம் பேசினான். அவன் ஒபாமாவிடம், எனது தலைமுடியைப் போலவே உங்களது தலைமுடியும் இருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன் என்று கேட்டான். இதைக் கேட்டதும் அங்கிருந்தவர்களுக்கு வியப்பாகி விட்டது.
இதைப் பார்த்த ஒபாமா, சும்மா தொட்டுப் பார் என்று தைரியமூட்டினார். இதையடுத்து சிறுவன் ஜேக்கப், ஒபாமா தலைமுடியைத் தடவிப் பார்த்தான். பிறகு அவனிடம் ஒபாமா கேட்டார், எப்படி இருக்கிறது என்று. அதற்கு அவன், ஆமாம், எனது தலைமுடியைப் போலத்தான் உள்ளது என்றான்.
இதையடுத்து ஜேக்கப்பின் அண்ணன் ஐசக் ஒபாமாவிடம், ஏன் எப் 22 போர் விமானங்களை விமானப்படையிலிருந்து நிறுத்தி விட்டீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர், அது செலவு பிடித்த வேலை. அதனால்தான் நிறுத்தி விட்டோம் என்றார்.
ஒபாமா தலையைக் குனிந்தபடி ஒரு சிறுவன் முன்பு நிற்கும் இந்த அரிய புகைப்படத்தை எடுத்தவர் பீட் செளசா. அவர் கூறுகையில், ஒரு புகைப்படக்காரர் எப்போதும் அலர்ட் ஆக இருக்க வேண்டும். ஜனாதிபதி ஒபாமா சட்டென தலையைக் குணிவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
நான் சுதாரித்து டக்கென அந்தக் காட்சியை எடுத்தேன். ஆனால் இந்த புகைப்படம் எனது வாழ்க்கையில் மறக்க முடியாததாக மாறும் என்று அப்போது நான் நினைத்துப் பார்க்கவில்லை என்றார்.
இந்த புகைப்படத்தின் ஒரு காப்பி இப்போது ஜேக்கப் பிலடெல்பியாவின் வீட்டிலும் தொங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது ஜேக்கப்பின் தந்தை ஆப்கானிஸ்தானில், அமெரிக்க வெளியுறவு அமைச்சக ஊழியராக பணியாற்றி வருகிறாராம்.
தற்போது 8 வயதாகும் ஜேக்கப்பின் கனவு என்ன தெரியுமா, அமெரிக்க ஜனாதிபதியாகவோ அல்லது ஒரு விமானியாகவோ வர வேண்டும் என்பதாம்.
தொலைபேசி எண்ணை வைத்தே இருக்கும் இடத்தை ஓன்லைன் மூலம் கண்டறிய
தொழில்நுட்ப மாற்றம் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இப்போது நம்முடைய தொலைபேசி எண்ணை வைத்து ஓன்லைன் மூலம் நாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்.
மொபைல் டிரேஸ் அல்லது போன் டிரேஸ் என்று சைபர்கிரைமில் உள்ளவர்கள் கண்டுபிடிக்க உபயோகப்படுத்தும் அதே தொழில்நுட்பம் தான் இப்போது இதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் நாம் இருக்கும் இடத்தை துல்லியமாக கூறாவிட்டாலும் ஓரளவு சரியாக தான் தெரிவிக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு போன் நம்பரிலிருந்து அடிக்கடி தொந்தரவு வந்தால் இந்த இணையதளத்திற்கு சென்று நாம் அந்த மொபைல் நம்பர் அல்லது போன் நம்பரை கொடுத்து எந்த பகுதி என்று தேடினால் ஒரே நொடியில் விடை கிடைக்கும்.
அதுமட்டுமின்றி மேப்பும் சேர்த்தே கொடுக்கின்றனர். இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் போன் நம்பர் அல்லது மொபைல் எண்ணை கொடுத்து US or International என்ற பட்டனை அழுத்தவும்.
இப்போது நமக்கு அந்த மொபைல் நம்பரின் விபரங்கள் சில நொடிகளிலே தெரிந்து விடும். அதே போன் நம்பரின் மேப்பை பார்ப்பதற்கு map+ என்ற பட்டனை அழுத்தி மொபைல் நம்பரின் மேப்பயும் பார்க்கலாம்.
இணையதள முகவரி
ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளராக நவநீதம்பிள்ளை மீண்டும் தெரிவு!
கடந்த 2010ம் ஆண்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவின்
தலைவராக தெரிவு செய்யப்பட்ட நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் இவ்வாண்டு
இறுதியுடன் நிறைவடையவுள்ளது.
இதனையடுத்து, மீண்டும் அவரையே தலைவராக நியமிப்பதற்கான அனுமதியை, ஐ.நா பொதுச் சபையிடம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கோரியிருந்தார்.
இதனையடுத்து, இது தொடர்பாக நேற்று ஐ.நா பொதுச்சபையில், வாக்கெடுப்பு நடத்தப்படாமல் நவநீதம்பிள்ளை ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த நவநீதம்பிள்ளை தென்னாபிரிக்காவில் மூத்த நீதிபதியாக பதவி வகித்தவர். பின்னர் ஐ.நா., பொதுச்செயலர் பான் கீ மூன் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, மீண்டும் அவரையே தலைவராக நியமிப்பதற்கான அனுமதியை, ஐ.நா பொதுச் சபையிடம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கோரியிருந்தார்.
இதனையடுத்து, இது தொடர்பாக நேற்று ஐ.நா பொதுச்சபையில், வாக்கெடுப்பு நடத்தப்படாமல் நவநீதம்பிள்ளை ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த நவநீதம்பிள்ளை தென்னாபிரிக்காவில் மூத்த நீதிபதியாக பதவி வகித்தவர். பின்னர் ஐ.நா., பொதுச்செயலர் பான் கீ மூன் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொத்தடிமையாக்கப்பட்டு மீட்கப்பட்ட சிறுவன் வீட்டுக்கு கூட்டிச்செல்லுமாறு தாயாரிடம் கதறல்
நான் மீண்டும் என் தாய் மற்றும் சகோதரருடன்
இணைந்து வாழ வீட்டுக்குப் போக வழிவிடுங்கள்'' . இவ்வாறு கண்ணீர் மல்கி
தாயைக் கட்டிப்பிடித்துக்கொண்டு வைத்தியசாலையில் கதறினான் பரமநாதன் ரஜிராம்
(வயது 13).
கல்லையும் கரையச் செய்தது இந்த காட்சி. நீதிமன்றில் நகர்தல் பத்திரம் சமர்ப்பித்து சிறுவனை இன்று விடுவிக்கவுள்ளதாக நன்னடத்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சண்டிலிப்பாயைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடத்தப்பட்டு, முஸ்லிமாக மாற்றப்பட்டு, யாழ்.நகருக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டு புடைவை வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட போது கண்டுபிடிக்கப்பட்டான்.
ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு மேலாக கொத்தடிமையாக்கப்பட்ட சிறுவன் தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.
மருத்துவப் பரிசோதனையின் பின்னர் குறித்த சிறுவன் வீடு செல்ல அனுமதிக்கப்படுவான் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று மருத்துவப் பரிசோதனைகள் யாவும் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சிறுவனை அழைத்துச் செல்ல அவனது சகோதரனும் உறவினர்களும் வைத்தியசாலைக்கு வந்துள்ளனர்.
எனினும் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் சிறுவனை விடுவிக்க முடியாது என்று வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் நேற்று வீடு செல்லும் கனவுடன் இருந்த சிறுவன் ஏமாற்றம் அடைந்து கதறியழத் தொடங்கினான். விடுதிக்குச் செல்ல மறுத்ததுடன், தனது சகோதரனுடன் வீட்டுக்கு செல்ல விடுமாறு மன்றாடினான். எனினும் சட்டப்படியே இந்த விடயத்தை அணுகவேண்டியிருப்பதால் சிறுவன் நேற்று வீடுசெல்ல அனுமதிக்கப்படவில்லை.
இது குறித்து சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்,
குறித்த சிறுவன் தனது தாயாருடன் செல்ல விரும்பியதையடுத்து மல்லாகம் நீதிமன்றில் இன்று நகர்தல் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை தாயாரிடம் அவன் ஒப்படைக்கப்படுவான் என்றனர்.
இதேவேளை, சிறுவனைக் கடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்ட அப்துல்லாஹ் மொஹமட் ஜமீல் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களான மொஹமட் சுல்தான் மொஹமட் றியாஸ், மொஹமட் முஸ்தப்பா மொஹமட் நஜீம் ஆகியோரில் 3 ஆவது நபரான நஜீப் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மற்றைய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லையும் கரையச் செய்தது இந்த காட்சி. நீதிமன்றில் நகர்தல் பத்திரம் சமர்ப்பித்து சிறுவனை இன்று விடுவிக்கவுள்ளதாக நன்னடத்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சண்டிலிப்பாயைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடத்தப்பட்டு, முஸ்லிமாக மாற்றப்பட்டு, யாழ்.நகருக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டு புடைவை வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட போது கண்டுபிடிக்கப்பட்டான்.
ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு மேலாக கொத்தடிமையாக்கப்பட்ட சிறுவன் தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.
மருத்துவப் பரிசோதனையின் பின்னர் குறித்த சிறுவன் வீடு செல்ல அனுமதிக்கப்படுவான் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று மருத்துவப் பரிசோதனைகள் யாவும் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சிறுவனை அழைத்துச் செல்ல அவனது சகோதரனும் உறவினர்களும் வைத்தியசாலைக்கு வந்துள்ளனர்.
எனினும் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் சிறுவனை விடுவிக்க முடியாது என்று வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் நேற்று வீடு செல்லும் கனவுடன் இருந்த சிறுவன் ஏமாற்றம் அடைந்து கதறியழத் தொடங்கினான். விடுதிக்குச் செல்ல மறுத்ததுடன், தனது சகோதரனுடன் வீட்டுக்கு செல்ல விடுமாறு மன்றாடினான். எனினும் சட்டப்படியே இந்த விடயத்தை அணுகவேண்டியிருப்பதால் சிறுவன் நேற்று வீடுசெல்ல அனுமதிக்கப்படவில்லை.
இது குறித்து சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்,
குறித்த சிறுவன் தனது தாயாருடன் செல்ல விரும்பியதையடுத்து மல்லாகம் நீதிமன்றில் இன்று நகர்தல் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை தாயாரிடம் அவன் ஒப்படைக்கப்படுவான் என்றனர்.
இதேவேளை, சிறுவனைக் கடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்ட அப்துல்லாஹ் மொஹமட் ஜமீல் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களான மொஹமட் சுல்தான் மொஹமட் றியாஸ், மொஹமட் முஸ்தப்பா மொஹமட் நஜீம் ஆகியோரில் 3 ஆவது நபரான நஜீப் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மற்றைய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, May 24, 2012
கருணா, பிள்ளையான், கே.பி. போன்றோர் பதவிகளில்; புலிகளுக்கு உணவளித்தோர் சிறையில்.- செல்வம் அடைக்கலநாதன் , ஸ்ரீரங்கா
நூற்றுக்கணக்காண மக்கள் பங்குபற்றி இவ் அடையாள
உண்ணாவிரதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்
செல்வம் அடைக்கலநாதன் சிவசக்தி ஆனந்தன் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராசா, சரவணபவன், புளொட் தர்மலிங்கம்
சித்தார்த்தன், ஐ.தே.கட்சி நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கா,
மற்றும் மனோகணேசன், ஆனந்தசங்கரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்து சிறைகளில் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்து இன்று கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இவ் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
உண்ணாவிரதத்தில் பற்கேற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரிவிக்கையில்,
கருணா மற்றும் பிள்ளையான் மற்றும் கே.பி போன்றோர் சுதந்திரமாக நடமாடும் அதேவேளை பதவிகளையும் வகித்து வரும்நிலையில் விடுதலைப் புலிகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு போன்ற உதவிகளை செய்தவர்களை சிறையில் வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வியெழுப்பினார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்ட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் வழக்கு தாக்கல் செய்யாமல் அரசியல் கைதிகளை சிறை வைப்பதனை எந்த ஒரு நாகரீக சமுதாயமும் ஏற்றுக்கொள்ள முடியாதென மேலும் தெரிவித்தார்.
இங்கு ஊடகவியலாளர்களில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா,
"பல அரசியல் கைதிகளை சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்துள்ளனர். ஆனால் இந்த நபர்களுக்கு பூரணமாக செயற்பட அனுமதி அளித்த தலைமைத்துவம் வழங்கிய கருணா அம்மான், கேபி, பிள்ளையான் போன்றோர் சுதந்திரமாக பாராளுமன்றில் உள்ளனர். அரச வீடுகளில் உள்ளனர். அவர்களுக்கு நீர், உணவு வழங்கியவர்கள் 10, 15 வருடங்கள் சிறையில் சந்தேகத்தின் பேரில் உள்ளனர். இது எவ்வகையில் நியாயம் என நாம் கேட்கிறோம்.
இவர்களை சிறையில் வைத்திருப்பதானால் கேபி, கருணா அம்மான், பிள்ளையான் போன்றோரையும் உள்ளே எடுக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு சட்டம் மற்றையவருக்கு இன்னொரு சட்டம் என்பதை நாம் நிராகரிக்கிறோம். கைதிகள் சிறையில் உள்ளனர். இறுதி யுத்தத்தில் தாங்கள் புலி என கூறி சரணடைந்தவர்களை அரசு புனர்வாழ்வளித்து விடுதலை செய்கிறது. ஆனால் புலி என்ற சந்தேகத்தில் கைது செய்தவர்களை சிறையில் வைத்துள்ளளனர்.
இவர்களையும் புனர்வாழ்வு செய்யுங்கள் அல்லது நீதிமன்ற வழியில் வழக்குத் தொடரவும் அப்படியில்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். யுத்தம் முடிந்து இன்னமும் இவர்களை தடுத்து வைத்திருப்பது மேலும் இனவாதத்தை தூண்டும் செயலாகும்" எனத் தெரிவித்திருந்தார்.
இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானவர்கள் கையில், கைது செய்யப்பட்ட தம் உறவுகள் புகைப்படங்களை தாங்கியவாறு அழுதபடி தென்பட்டனர்.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்து சிறைகளில் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்து இன்று கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இவ் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
உண்ணாவிரதத்தில் பற்கேற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரிவிக்கையில்,
கருணா மற்றும் பிள்ளையான் மற்றும் கே.பி போன்றோர் சுதந்திரமாக நடமாடும் அதேவேளை பதவிகளையும் வகித்து வரும்நிலையில் விடுதலைப் புலிகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு போன்ற உதவிகளை செய்தவர்களை சிறையில் வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வியெழுப்பினார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்ட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் வழக்கு தாக்கல் செய்யாமல் அரசியல் கைதிகளை சிறை வைப்பதனை எந்த ஒரு நாகரீக சமுதாயமும் ஏற்றுக்கொள்ள முடியாதென மேலும் தெரிவித்தார்.
இங்கு ஊடகவியலாளர்களில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா,
"பல அரசியல் கைதிகளை சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்துள்ளனர். ஆனால் இந்த நபர்களுக்கு பூரணமாக செயற்பட அனுமதி அளித்த தலைமைத்துவம் வழங்கிய கருணா அம்மான், கேபி, பிள்ளையான் போன்றோர் சுதந்திரமாக பாராளுமன்றில் உள்ளனர். அரச வீடுகளில் உள்ளனர். அவர்களுக்கு நீர், உணவு வழங்கியவர்கள் 10, 15 வருடங்கள் சிறையில் சந்தேகத்தின் பேரில் உள்ளனர். இது எவ்வகையில் நியாயம் என நாம் கேட்கிறோம்.
இவர்களை சிறையில் வைத்திருப்பதானால் கேபி, கருணா அம்மான், பிள்ளையான் போன்றோரையும் உள்ளே எடுக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு சட்டம் மற்றையவருக்கு இன்னொரு சட்டம் என்பதை நாம் நிராகரிக்கிறோம். கைதிகள் சிறையில் உள்ளனர். இறுதி யுத்தத்தில் தாங்கள் புலி என கூறி சரணடைந்தவர்களை அரசு புனர்வாழ்வளித்து விடுதலை செய்கிறது. ஆனால் புலி என்ற சந்தேகத்தில் கைது செய்தவர்களை சிறையில் வைத்துள்ளளனர்.
இவர்களையும் புனர்வாழ்வு செய்யுங்கள் அல்லது நீதிமன்ற வழியில் வழக்குத் தொடரவும் அப்படியில்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். யுத்தம் முடிந்து இன்னமும் இவர்களை தடுத்து வைத்திருப்பது மேலும் இனவாதத்தை தூண்டும் செயலாகும்" எனத் தெரிவித்திருந்தார்.
இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானவர்கள் கையில், கைது செய்யப்பட்ட தம் உறவுகள் புகைப்படங்களை தாங்கியவாறு அழுதபடி தென்பட்டனர்.
தமிழ்க் கல்வெட்டுக்கள் பொலநறுவையில் கண்டுபிடிப்பு
பொலநறுவையில் மூன்றாம், ஐந்தாம் சிவாலயம் மற்றும் நான்காம் விஷ்ணு கோவில் என்பற்றில் இச் சாசனங்கள் கண்டுபடிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேராசிரியர் இந்த தகவலை தெரிவித்தார்.
இச்சாசனங்கள் பல வருடங்களுக்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. காலஓட்டத்தில் எழுத்துக்கள் இயற்கை காரணிகளால் சிதைவடைந்துள்ளன.
எனினும் நுட்பமான முறையில் படிமம் எடுக்கப்படும் பட்சத்தில் அவற்றில் எழுதப்பட்டிருப்பவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என பேராசிரியர் சி. பத்மநாதன் தெரிவித்தார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேராசிரியர் இந்த தகவலை தெரிவித்தார்.
இச்சாசனங்கள் பல வருடங்களுக்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. காலஓட்டத்தில் எழுத்துக்கள் இயற்கை காரணிகளால் சிதைவடைந்துள்ளன.
எனினும் நுட்பமான முறையில் படிமம் எடுக்கப்படும் பட்சத்தில் அவற்றில் எழுதப்பட்டிருப்பவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என பேராசிரியர் சி. பத்மநாதன் தெரிவித்தார்.
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை
மனிதர்களை கொல்லும்
மர்ம தீவு : திகிலூட்டும் உண்மைகண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல
பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள்.
சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும்
மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள்.
இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற Ôதுர்கானா ஏரிÕ கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தால், ஒரு பகுதி ஆவியாகிறது.
மீதமுள்ள நீர், அதிக உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக் கடல் திகழ்கிறது. குட்டி குட்டி தீவுகளும், பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையும் கவர்ந்திழுக்கிறது. இந்த அட்ராக்ஷனோடு நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சிகளும் உள்ளன.
இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்று Ôஎன்வைட்டினெட்Õ. இங்கு வாழும் பழங்குடியின மக்கள் பேசும் மொழி சொல். இதன் அர்த்தம் Ôதிரும்ப வராதுÕ என்பதாகும். என்வைட்டினெட் தீவுக்குள் செல்பவர்கள் யாரும் திரும்பி வருவது கிடையாதாம். அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே சவால் விடும் வகையில் இந்த தீவு உள்ளது.
முன்பொரு காலத்தில் இதில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்றும் பக்கத்துக்கு தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். வியாபாரத்துக்காக பக்கத்து தீவுகளுக்கு வருவார்களாம். ஆனால் ஒரு காலத்துக்கு பிறகு தீவில் இருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் யாரும் வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போகவே மர்ம தீவாக மாறியது என்வைட்டினெட்.
கடந்த 1935ம் ஆண்டு ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார். என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் மார்டின் ஷெப்லிஸ், பில் டேசன் ஆகியோரை அனுப்பி வைத்தார் விவியன். நாட்கள்தான் போனதே தவிர விஞ்ஞானிகள் திரும்பியபாடில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே ஆய்வுகளை செய்தனர். ஹெலிகாப்டரில் பறந்தபடியே வேவு பார்த்தனர். எந்த தடயமும் கிடைக்கவில்லை. பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை.
இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்தவர்களிடம் தகவல்கள் சேகரித்தார். ‘அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும். அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள். அப்படித்தான் அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள்Õ என்று பக்கத்து தீவுவாசிகள் கூறினர்.
பிரமாண்ட ஒளி வெள்ளம் எப்படி வருகிறது, அது மனிதர்களை எரித்து விடுகிறதா, அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே என்ற கேள்விகளுக்கு விவியனுக்கு விடை கிடைக்கவில்லை.
இந்த தீவுக்கும், வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் சூடு பிடித்துள்ளது. இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மர்ம முடிச்சுகள் எதுவும் இன்னும் அவிழவில்லை.
Thanks:- கே.எஸ்.அருள்மொழி
இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற Ôதுர்கானா ஏரிÕ கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தால், ஒரு பகுதி ஆவியாகிறது.
மீதமுள்ள நீர், அதிக உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக் கடல் திகழ்கிறது. குட்டி குட்டி தீவுகளும், பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையும் கவர்ந்திழுக்கிறது. இந்த அட்ராக்ஷனோடு நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சிகளும் உள்ளன.
இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்று Ôஎன்வைட்டினெட்Õ. இங்கு வாழும் பழங்குடியின மக்கள் பேசும் மொழி சொல். இதன் அர்த்தம் Ôதிரும்ப வராதுÕ என்பதாகும். என்வைட்டினெட் தீவுக்குள் செல்பவர்கள் யாரும் திரும்பி வருவது கிடையாதாம். அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே சவால் விடும் வகையில் இந்த தீவு உள்ளது.
முன்பொரு காலத்தில் இதில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்றும் பக்கத்துக்கு தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். வியாபாரத்துக்காக பக்கத்து தீவுகளுக்கு வருவார்களாம். ஆனால் ஒரு காலத்துக்கு பிறகு தீவில் இருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் யாரும் வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போகவே மர்ம தீவாக மாறியது என்வைட்டினெட்.
கடந்த 1935ம் ஆண்டு ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார். என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் மார்டின் ஷெப்லிஸ், பில் டேசன் ஆகியோரை அனுப்பி வைத்தார் விவியன். நாட்கள்தான் போனதே தவிர விஞ்ஞானிகள் திரும்பியபாடில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே ஆய்வுகளை செய்தனர். ஹெலிகாப்டரில் பறந்தபடியே வேவு பார்த்தனர். எந்த தடயமும் கிடைக்கவில்லை. பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை.
இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்தவர்களிடம் தகவல்கள் சேகரித்தார். ‘அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும். அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள். அப்படித்தான் அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள்Õ என்று பக்கத்து தீவுவாசிகள் கூறினர்.
பிரமாண்ட ஒளி வெள்ளம் எப்படி வருகிறது, அது மனிதர்களை எரித்து விடுகிறதா, அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே என்ற கேள்விகளுக்கு விவியனுக்கு விடை கிடைக்கவில்லை.
இந்த தீவுக்கும், வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் சூடு பிடித்துள்ளது. இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மர்ம முடிச்சுகள் எதுவும் இன்னும் அவிழவில்லை.
Thanks:- கே.எஸ்.அருள்மொழி
புலிகள் தயாரித்த நீர்மூழ்கி ஏவுகணை: தென்னாசியாவே நடுங்கியது !
ரோப்பிடோ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், நீர்மூழ்கி
ஏவுகணைகளை புலிகள் தாமே வடிவமைத்து இயக்கி வந்ததாக இந்தோனேசிய ஆங்கில ஊடகம்
ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. ஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா
போன்ற நாடுகளே கடலுக்கு அடியில் சென்று, எதிரியின் கப்பல்களைத்
தாக்கக்கூடிய ரோப்பிடோக்களைத் தயாரிப்பதில் வல்லவர்கள். தொழில் நுற்பத்தில்
பன்மடங்கு வளர்சியடைந்திருக்கும் இந் நாடுகளுக்கு இணையாக விடுதலைப்
புலிகள் உள்ளூர் பொருட்களைப் பாவித்து இவ்வகையான நீர்மூழ்கி ஏவுகணைகளைத்
தயாரித்துள்ளனர் என அது மேலும் கருத்துத் தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக்
எக்ஸ்புளோசிவ் என்று சொல்லப்படும், படு பயங்கரமான வெடி மருந்துகளை இவர்கள்
இந்த ஏவுகணைகளில் பொருத்தியுள்ளனர்.
குறிப்பாகச் சொல்லப்போனால், இவ்வகையான ஏவுகணையின் தாக்குதலில் சிக்கும் எந்தக் கப்பலும் சுக்கு நூறாகிவிடும். விடுதலைப் புலிகள், ஆரம்ப காலத்தில் தற்கொலைப் படகுகள் மூலமே இலங்கை கடற்படையினரைத் தாக்கி வந்தனர். 2002ம் ஆண்டுக்குப் பின்னரே இவர்கள் நீர்மூழ்கி ஏவுகணகளைச் செய்ய கற்றுகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகள் உற்பத்திசெய்யும் நீர்மூழ்கி ஏவுகணைகள், தமது இலக்கை அறிந்து, அதனை துரத்திச் சென்று தாக்க வல்லது. அதுபோல இல்லை என்றாலும், எதிரியின் கப்பலை நோக்கி ஏவுகணையை தரையில் இருந்தே கட்டுப்படுத்தக்கூடிய தொழில் நுற்பத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர் எனவும் அறியப்படுகிறது.
தமது வசதிகளுக்கு ஏற்ப, ரிமோட் கன்றோலர் மூலம் இயக்கக்கூடிய நீர்மூழ்கி ஏவுகணைகளை புலிகள் துல்லியமாக தயாரித்துவைத்திருந்துள்ளனர். இலங்கை இராணும் புலிகளின் கடற்படை முகாம் ஒன்றை 2009ம் ஆண்டு அதிரடி நடவடிக்கை ஒன்றின் மூலம் திடீரெனக் கைப்பற்றியது. அங்கே காணப்பட்ட, நீர்மூழ்கி ஏவுகணைப் பார்த்து இராணுவம் அதிர்ந்துபோயுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. தெற்காசியாவில் இவ்வகையான பாரிய சக்திகொண்ட நீர்மூழ்கி ஏவுகணைகளைக் கொண்ட ஒரே இயக்கம், புலிகளாகத்தான் இருக்கவேண்டும் என இந்தோனேசிய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது இலங்கை அரசானது, தனக்குத் தேவையான துப்பாக்கி ரவைகளைக்கூட பிற நாடுகளிடம் இருந்தே தருவித்துவரும் நிலையில், விடுதலைப் புலிகள் இதுபோன்ற கனரக ஆயுதங்களை மிக இலகுவாக உற்பத்திசெய்யக் கற்றுக்கொண்டனர் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்க விடையமாகும்.
குறிப்பாகச் சொல்லப்போனால், இவ்வகையான ஏவுகணையின் தாக்குதலில் சிக்கும் எந்தக் கப்பலும் சுக்கு நூறாகிவிடும். விடுதலைப் புலிகள், ஆரம்ப காலத்தில் தற்கொலைப் படகுகள் மூலமே இலங்கை கடற்படையினரைத் தாக்கி வந்தனர். 2002ம் ஆண்டுக்குப் பின்னரே இவர்கள் நீர்மூழ்கி ஏவுகணகளைச் செய்ய கற்றுகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகள் உற்பத்திசெய்யும் நீர்மூழ்கி ஏவுகணைகள், தமது இலக்கை அறிந்து, அதனை துரத்திச் சென்று தாக்க வல்லது. அதுபோல இல்லை என்றாலும், எதிரியின் கப்பலை நோக்கி ஏவுகணையை தரையில் இருந்தே கட்டுப்படுத்தக்கூடிய தொழில் நுற்பத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர் எனவும் அறியப்படுகிறது.
தமது வசதிகளுக்கு ஏற்ப, ரிமோட் கன்றோலர் மூலம் இயக்கக்கூடிய நீர்மூழ்கி ஏவுகணைகளை புலிகள் துல்லியமாக தயாரித்துவைத்திருந்துள்ளனர். இலங்கை இராணும் புலிகளின் கடற்படை முகாம் ஒன்றை 2009ம் ஆண்டு அதிரடி நடவடிக்கை ஒன்றின் மூலம் திடீரெனக் கைப்பற்றியது. அங்கே காணப்பட்ட, நீர்மூழ்கி ஏவுகணைப் பார்த்து இராணுவம் அதிர்ந்துபோயுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. தெற்காசியாவில் இவ்வகையான பாரிய சக்திகொண்ட நீர்மூழ்கி ஏவுகணைகளைக் கொண்ட ஒரே இயக்கம், புலிகளாகத்தான் இருக்கவேண்டும் என இந்தோனேசிய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது இலங்கை அரசானது, தனக்குத் தேவையான துப்பாக்கி ரவைகளைக்கூட பிற நாடுகளிடம் இருந்தே தருவித்துவரும் நிலையில், விடுதலைப் புலிகள் இதுபோன்ற கனரக ஆயுதங்களை மிக இலகுவாக உற்பத்திசெய்யக் கற்றுக்கொண்டனர் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்க விடையமாகும்.
இலங்கை மீது அமெரிக்காவின் அடுத்த ‘குண்டு‘ தயார்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கீழ்
செயற்படும், ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான
செயலகம், ஆண்டுதோறும் நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பான அறிக்கையை
வெளியிட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக வெளியிடப்படும் அறிக்கைகளில்,இலங்கை குறித்து காட்டமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், 2011ஆம் ஆண்டுக்கான மனிதஉரிமைகள் அறிக்கையை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனும், ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் மைக்கல் போஸ்னரும் இணைந்து இன்று வெளியிடவுள்ளனர்.
வொசிங்டன் நேரப்படி, இன்று காலை 10.30 மணியளவில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகச்சந்திப்பு அறையில் இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
இந்த அறிக்கை கடந்தவாரம் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலரைச் சந்திப்பதற்கு முன்னரே தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் ஹிலாரி கிளின்ரனும், மைக்கல் போஸ்னரும் சுமார் ஒரு மணிநேரம் செய்தியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் மைக்கல் போஸ்னர்,
“இலங்கையில் போரின் போது இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்ட மீறல்கள் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது.
எல்லா இலங்கையர்களுக்கும் நீதியானதும் சமத்துவமானதுமான நல்லிணக்கத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் ஐ.நாவுடனும், அனைத்துலக சமூகத்துடனும் இணைந்து பணியாற்றக் கடமைப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக வெளியிடப்படும் அறிக்கைகளில்,இலங்கை குறித்து காட்டமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், 2011ஆம் ஆண்டுக்கான மனிதஉரிமைகள் அறிக்கையை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனும், ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் மைக்கல் போஸ்னரும் இணைந்து இன்று வெளியிடவுள்ளனர்.
வொசிங்டன் நேரப்படி, இன்று காலை 10.30 மணியளவில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகச்சந்திப்பு அறையில் இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
இந்த அறிக்கை கடந்தவாரம் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலரைச் சந்திப்பதற்கு முன்னரே தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் ஹிலாரி கிளின்ரனும், மைக்கல் போஸ்னரும் சுமார் ஒரு மணிநேரம் செய்தியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் மைக்கல் போஸ்னர்,
“இலங்கையில் போரின் போது இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்ட மீறல்கள் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது.
எல்லா இலங்கையர்களுக்கும் நீதியானதும் சமத்துவமானதுமான நல்லிணக்கத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் ஐ.நாவுடனும், அனைத்துலக சமூகத்துடனும் இணைந்து பணியாற்றக் கடமைப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Wednesday, May 23, 2012
மே மாதம் 16ம் திகதி பொட்டம்மானை நான் பார்த்தேன் !
தமிழீழ
தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு, நீண்ட நாட்களாகப் பாதுகாப்பு
வழங்கிவரும் படையணியாக இம்ரான் பாண்டியன் படையணி இருந்தது யாவரும் அறிந்த
ஒரு விடையம். இது இராணுவத்துக்கும் தெரிந்த தகவல் தான். தலைவரின்
பாதுகாப்பை இப்படையணியூடாகப் பாதுகாத்து வந்தவர்களுள் மிக முக்கிய நபராக
சொர்ணம் கருதப்படுகிறார். ஆனால் பலர் அறிந்திருக்காத விடையம் ஒன்று உள்ளது,
ஏன் ..விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பலர் கூட இதனை அறிந்திருக்கவில்லை
எனலாம். அது என்னவென்றால் 2002ம் ஆண்டு இம்ரான் பாண்டியன் படையணி
பிரிக்கப்பட்டு, அதில் உள்ள சிலரைக் கொண்டு ராதா வான்காப்பு படையணி
பலப்படுத்தப்பட்டது. பின்னர் அப்படையணியே தலைவரின் பாதுகாப்பை
கவனித்துவந்தது.
இவர்களுக்கே சைவர் (0 0) இலக்கத்தில் ஆரம்பிக்கும் தகடுகள் வழங்கப்பட்டது. (விடுதலைப் புலிகள் தங்கள் கழுத்தில் நச்சுக் குப்பியோடு சேர்த்து இத் தகடுகளை அணிந்திருப்பது வழக்கம்) இவ்வாறு சைவர் தகடுகள் வழங்கப்பட்ட போராளிகளே முள்ளிவாய்க்கால்வரை தேசிய தலைமையை பாதுகாத்து வந்துள்ளனர். 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி பொட்டம்மானை தான் கண்டு அவரோடு பேசியதாக, சைவர் இலக்க தகட்டுடன் போராடி பின்னர் மீண்டு வந்துள்ள போராளி ஒருவர் அதிர்வுக்குத் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் இருந்து, நந்திக்கடல் பக்கமாகச் செல்ல ஒரு பாதை இருப்பதாகவும், அப்பாதையில் உண்டியல் பிள்ளையார் கோயில் என்று ஒரு கோவில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கறுப்பு நிறம் கொண்ட, சேறு சகதிகளில் செல்லக்கூடிய மோட்டார் சைக்கிளில் வந்த பொட்டு அம்மான், கடல் மூடப்பட்டுவிட்டதா என்று தன்னிடம் கேட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனூடாக, ஆனந்தபுரம் சமருக்குப் பின்னர், பொட்டம்மானை தாம் காணவில்லை என்றும், முள்ளிவாய்க்கால் பகுதியில் பொட்டம்மான் இருக்கவில்லை என்ற கூற்றுக்களில் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது. ராதா வான்காப்பு படைப்பிரிவில் இருந்து சிலர் மற்றும் தலைவரின் மகனின் பாதுகாப்பு பிரிவில் இருந்து சிலரும் சேர்ந்து ஒரு குழுவாகச் சென்று, இராணுவ முற்றுகையை உடைத்து வெளியேற முற்பட்டுள்ளனர். இந் நிலையில் அவர்களை இராணுவம் சுற்றிவளைத்துவிட்டது. (இதில் தலைவரின் மகன் சாள்ஸும் அடங்குவார்) இக் குழுவில் இருந்த எழில் வண்ணன் என்பவர், தனது சட்டலைட் தொலைபேசியூடாக டென்மார்க்கில் உள்ள உற்ற நண்பரைத் தொடர்புகொண்டு, தாம் சுற்றிவளைக்கப்பட்டதை விபரித்துள்ளார். அச் சுற்றிவளைப்பில் இருந்து தாம் தப்பிக்க முடியாது எனவும், எல்லாம் முடிந்துவிட்டது... ஆனால் போராட்டத்தை புலம்பெயர் மக்களே இனிக் கொண்டு நடத்தவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இருந்து, தன்னுடன் பேசிவிட்டு புறப்பட்ட பொட்டம்மானைப் பார்த்து என்ன செய்யப்போகிறீர்கள் என நான் கேட்டேன். போராடுவோம் இறுதிவரை போராடுவோம். கடல் மூடப்பட்டால், பிறிதொரு பகுதியை உடைக்க முடியும் என்று சற்றும் மனம் தளராதவராய் அவர் கூறிவிட்டு, நந்திக்கடல் பக்கமாகச் சென்றார் என்று சைவர் இலக்க தகடு கொண்ட போராளி ஒருவர் மேலும் தெரிவித்தார். தேசிய தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சுமார் 600க்கும் மேற்பட்ட போராளிகள் காத்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். அவர்கள் அனைவரும் இலக்கை அடைந்தார்களா என்பது தான் தனக்குத் தெரியவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எது எவ்வாறு இருப்பினும் பொட்டம்மான் குறித்து முன்னர் வெளியான பல தகவல்கள் பிழையானவை என்பது மட்டும் தற்போது நிரூபனம் ஆகியுள்ளது எனலாம். அவர் தேசிய தலைவரோடு முள்ளிவாய்க்காலில் நின்றிருந்தது உறிதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களுக்கே சைவர் (0 0) இலக்கத்தில் ஆரம்பிக்கும் தகடுகள் வழங்கப்பட்டது. (விடுதலைப் புலிகள் தங்கள் கழுத்தில் நச்சுக் குப்பியோடு சேர்த்து இத் தகடுகளை அணிந்திருப்பது வழக்கம்) இவ்வாறு சைவர் தகடுகள் வழங்கப்பட்ட போராளிகளே முள்ளிவாய்க்கால்வரை தேசிய தலைமையை பாதுகாத்து வந்துள்ளனர். 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி பொட்டம்மானை தான் கண்டு அவரோடு பேசியதாக, சைவர் இலக்க தகட்டுடன் போராடி பின்னர் மீண்டு வந்துள்ள போராளி ஒருவர் அதிர்வுக்குத் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் இருந்து, நந்திக்கடல் பக்கமாகச் செல்ல ஒரு பாதை இருப்பதாகவும், அப்பாதையில் உண்டியல் பிள்ளையார் கோயில் என்று ஒரு கோவில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கறுப்பு நிறம் கொண்ட, சேறு சகதிகளில் செல்லக்கூடிய மோட்டார் சைக்கிளில் வந்த பொட்டு அம்மான், கடல் மூடப்பட்டுவிட்டதா என்று தன்னிடம் கேட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனூடாக, ஆனந்தபுரம் சமருக்குப் பின்னர், பொட்டம்மானை தாம் காணவில்லை என்றும், முள்ளிவாய்க்கால் பகுதியில் பொட்டம்மான் இருக்கவில்லை என்ற கூற்றுக்களில் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது. ராதா வான்காப்பு படைப்பிரிவில் இருந்து சிலர் மற்றும் தலைவரின் மகனின் பாதுகாப்பு பிரிவில் இருந்து சிலரும் சேர்ந்து ஒரு குழுவாகச் சென்று, இராணுவ முற்றுகையை உடைத்து வெளியேற முற்பட்டுள்ளனர். இந் நிலையில் அவர்களை இராணுவம் சுற்றிவளைத்துவிட்டது. (இதில் தலைவரின் மகன் சாள்ஸும் அடங்குவார்) இக் குழுவில் இருந்த எழில் வண்ணன் என்பவர், தனது சட்டலைட் தொலைபேசியூடாக டென்மார்க்கில் உள்ள உற்ற நண்பரைத் தொடர்புகொண்டு, தாம் சுற்றிவளைக்கப்பட்டதை விபரித்துள்ளார். அச் சுற்றிவளைப்பில் இருந்து தாம் தப்பிக்க முடியாது எனவும், எல்லாம் முடிந்துவிட்டது... ஆனால் போராட்டத்தை புலம்பெயர் மக்களே இனிக் கொண்டு நடத்தவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இருந்து, தன்னுடன் பேசிவிட்டு புறப்பட்ட பொட்டம்மானைப் பார்த்து என்ன செய்யப்போகிறீர்கள் என நான் கேட்டேன். போராடுவோம் இறுதிவரை போராடுவோம். கடல் மூடப்பட்டால், பிறிதொரு பகுதியை உடைக்க முடியும் என்று சற்றும் மனம் தளராதவராய் அவர் கூறிவிட்டு, நந்திக்கடல் பக்கமாகச் சென்றார் என்று சைவர் இலக்க தகடு கொண்ட போராளி ஒருவர் மேலும் தெரிவித்தார். தேசிய தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சுமார் 600க்கும் மேற்பட்ட போராளிகள் காத்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். அவர்கள் அனைவரும் இலக்கை அடைந்தார்களா என்பது தான் தனக்குத் தெரியவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எது எவ்வாறு இருப்பினும் பொட்டம்மான் குறித்து முன்னர் வெளியான பல தகவல்கள் பிழையானவை என்பது மட்டும் தற்போது நிரூபனம் ஆகியுள்ளது எனலாம். அவர் தேசிய தலைவரோடு முள்ளிவாய்க்காலில் நின்றிருந்தது உறிதிப்படுத்தப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)