பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்றழித்து
தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு
காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் யாழ் பல்கலைக்கழக
மாணவர் சமூகம் இந்த சுவரொட்டி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
வலிகள் தந்த வாரம் எனும் தலைப்பில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.
முள்ளிவாய்க்கால் எமது முடிவல்ல!
வலிகளை வாழ்வாக்கி கனவுகளை நனவாக்குவோம்!
உரிமைக்காய் குரல் கொடுப்போம்! நீதிக்காய் போராடுவோம்!
உயிர்கள் அழிந்து போனாலும் உணர்வுகள் அழியப்போவதில்லை!
தமிழர்களின் உரிமைக்குரல் சர்வதேசத்தின் துணையோடு ஒடுக்கப்பட்ட நாள்!
என தமது விடுதலை வேணவாவை மற்றும் உணர்வை உயிரூட்டும் முகமாக சுவரொட்டிகளை வெளிப்படுத்தினர்.
தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின் சிங்கள இனவெறி அரசும் அதன் துணைக்குழுக்களும் முள்ளிவாய்க்காலின் தொடர்ச்சியாக புலம்பெயர் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளை முடக்குவதற்கு மேற்கொள்ளும் பரப்புரையின் காரணமாக புலம்பெயர் மக்களின் விருப்பு மட்டும் தான் தமிழீழம் என்ற வெளிநாடுகளின் பொதுவான கருத்தை உடைத்தெறிந்து தமிழர்கள் ஒரு தனித்துவமான இனம் அதன் அடிப்படையில் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு,
விடுதலை வேண்டும் என்பது ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் அரசியல் வேணவா என்பதை நிரூபிக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் தமது விடுதலை உணர்வை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
அத்தோடு புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களாகிய எம்மை தாயக உறவுகளிடம் இருந்து தனிமைப்படுத்த எடுக்கும் சிங்கள அரசின் அரசியல் சதியையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது ஒரு மக்கள் போராட்டம் என்ற உண்மையை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கோடிட்டுக்காட்டியுள்ளார்கள்.
கருத்துச் சுதந்திரம் பேணப்படாத நாட்டில் சிங்கள அரசின் அடாவடித்தனமான எவ்வித காட்டுமிராண்டித்தனமான விரட்டலுக்கும் அஞ்சாமல் தமிழின தன்மானத்தோடு தாயகத் தமிழர்களின் கருத்தை ஒருமித்து நிலைநாட்டி பல்கலைக்கழக மாணவர் சமூகத்தை பிரநிதித்துவப்படுத்தும் அனைவருக்கும் புலம்பெயர் ஈழத்தமிழராகிய நாம் தலைவணங்குகிறோம்.
வலிகள் தந்த வாரம் எனும் தலைப்பில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.
முள்ளிவாய்க்கால் எமது முடிவல்ல!
வலிகளை வாழ்வாக்கி கனவுகளை நனவாக்குவோம்!
உரிமைக்காய் குரல் கொடுப்போம்! நீதிக்காய் போராடுவோம்!
உயிர்கள் அழிந்து போனாலும் உணர்வுகள் அழியப்போவதில்லை!
தமிழர்களின் உரிமைக்குரல் சர்வதேசத்தின் துணையோடு ஒடுக்கப்பட்ட நாள்!
என தமது விடுதலை வேணவாவை மற்றும் உணர்வை உயிரூட்டும் முகமாக சுவரொட்டிகளை வெளிப்படுத்தினர்.
தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின் சிங்கள இனவெறி அரசும் அதன் துணைக்குழுக்களும் முள்ளிவாய்க்காலின் தொடர்ச்சியாக புலம்பெயர் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளை முடக்குவதற்கு மேற்கொள்ளும் பரப்புரையின் காரணமாக புலம்பெயர் மக்களின் விருப்பு மட்டும் தான் தமிழீழம் என்ற வெளிநாடுகளின் பொதுவான கருத்தை உடைத்தெறிந்து தமிழர்கள் ஒரு தனித்துவமான இனம் அதன் அடிப்படையில் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு,
விடுதலை வேண்டும் என்பது ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் அரசியல் வேணவா என்பதை நிரூபிக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் தமது விடுதலை உணர்வை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
அத்தோடு புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களாகிய எம்மை தாயக உறவுகளிடம் இருந்து தனிமைப்படுத்த எடுக்கும் சிங்கள அரசின் அரசியல் சதியையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது ஒரு மக்கள் போராட்டம் என்ற உண்மையை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கோடிட்டுக்காட்டியுள்ளார்கள்.
கருத்துச் சுதந்திரம் பேணப்படாத நாட்டில் சிங்கள அரசின் அடாவடித்தனமான எவ்வித காட்டுமிராண்டித்தனமான விரட்டலுக்கும் அஞ்சாமல் தமிழின தன்மானத்தோடு தாயகத் தமிழர்களின் கருத்தை ஒருமித்து நிலைநாட்டி பல்கலைக்கழக மாணவர் சமூகத்தை பிரநிதித்துவப்படுத்தும் அனைவருக்கும் புலம்பெயர் ஈழத்தமிழராகிய நாம் தலைவணங்குகிறோம்.
No comments:
Post a Comment