news

Tuesday, May 29, 2012

இரவு முழுவதும் எங்களை தூங்கவே விடவில்லை:ஷாருக்கானின் சில்மிஷம் அம்பலம்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணியை தோற்கடித்து கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றியது.
கொல்கத்தா அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகர் ஷாருக்கான் இந்த வெற்றியால் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார். அத்தோடு இதே ஐ.பி.எல்லில் நடைபெற்ற லீக் ஆட்டங்களில் அவருடைய நடத்தையால் நிறைய சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டதும் நினைவிருக்கலாம்.
இரவு முழுவதும் தூங்காமல் தனது சந்தோஷத்தை வெளிக்காட்டியுள்ளார். சேப்பாக்கம் மைதானத்திலும் வீரர்கள் அறையிலும் போட்டி முடிந்த பிறகு 1 1/2 மணி நேரம் வெற்றியை கொண்டாடினார். பின்னர் வீரர்களை ஓட்டலுக்கு அழைத்து சென்று விருந்து கொடுத்தார். இந்த விருந்து நிகழ்ச்சி இரவு முழுவதும் நடந்தது. கொல்கத்தா வெற்றியை வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
கொல்கத்தா அணி வீரர் லட்சுமி ரத்தன் சுக்லா கூறும்போது, ஷாருக்கான் இரவு முழுவதும் தூங்கவில்லை. எங்களையும் தூங்க விடவில்லை என்றார்.

No comments:

Post a Comment