news

Monday, May 14, 2012

மாணவியை மோட்டார் சைக்கிளில் கடத்த முற்பட்ட நபர் பிடிபட்டார் !


யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் 11 வயது மாணவி ஒருவரை மோட்டார் சைக்கிலில் சென்ற இளைஞன் ஒருவன் கடத்துவதற்கு முயற்சித்த சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று காலை கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

பிரத்தியேக வகுப்பு முடிவடைந்த பின்னர் கல்லூரியின் வாசலில் வீட்டிற்கு செல்வதற்கு தந்தைக்காக காத்து நின்றபோது இளைஞன் மாணவியை கடத்த முயன்றுள்ளார். அதிஸ்ட்ட வசமாக அவ் வேளை மாணவியின் தந்தையார் அவ்விடத்திற்கு வந்த போது குறித்த இளைஞன் பாடசாலை வளாகத்துக்குள் தப்பியோடியுள்ளார்.

இவரைத் துரத்திச் சென்ற தந்தையார் இளைஞனைத் பிடித்து கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றதாகவும் பின்னர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அதிர்வு இணையம் அறிகிறது.

No comments:

Post a Comment