வெயில் காலங்களில் ஊர் சுற்றுவது என்பது சற்று கடினமான ஒன்று தான்.
இக்காலங்களில் பெண்கள் மிகவும் கவலைப்படுவது முக அழகு கெட்டுவிடும் என்பதை
நினைத்து தான்.
உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால், வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுத்து விடும்.
1. வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில்
அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன் பால் பவுடர்
கலந்து தடவினாலும் எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும், இதை
தொடர்ந்து ஒரு மாத காலமாவது பின்பற்ற வேண்டும்.
2. தக்காளி பழத்தை நன்கு பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி காய்ந்த
பின் கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன் வெள்ளரிப்பழம்
அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும்
கழுவலாம்.
3. பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன் காரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால் அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.
4. எண்ணெய் பசை சருமத்தினர் அடிக்கடி குளிர்ந்த தண்ணீரீல் முகம் கழுவ
வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால்
எண்ணெய் வழிவது குறைவதோடு முகமும் பளபளப்பாக இருக்கும்.
5. எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும்.
6. வெள்ளரிக்காய் சாறு எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர்,
தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில்
தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து
வந்தால் எண்ணெய் வழிவது குறையும்.
7. சோளத்தை நன்கு பவுடர் செய்து தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து
முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தின் எண்ணெய்ப் பசை
நீங்கும்.
8. எண்ணெய்ப் பசை சருமத்தினர் வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு
வந்ததும் சிறிது தயிர், கடலை மா மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில்
பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து
முகம் பளபளக்கும்.
9. எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம
அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி முகத்தில் பூச வேண்டும்.
சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.
10. பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை
போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான
தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால் முகத்தில்
வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.
No comments:
Post a Comment