news

Friday, May 25, 2012

ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளராக நவநீதம்பிள்ளை மீண்டும் தெரிவு!


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளராக நவநீதம்பிள்ளை மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் இவ்வாண்டு இறுதியுடன் நிறைவடையவுள்ளது.
இதனையடுத்து, மீண்டும் அவரையே தலைவராக நியமிப்பதற்கான அனுமதியை, ஐ.நா பொதுச் சபையிடம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கோரியிருந்தார்.
இதனையடுத்து, இது தொடர்பாக நேற்று ஐ.நா பொதுச்சபையில், வாக்கெடுப்பு நடத்தப்படாமல் நவநீதம்பிள்ளை ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த நவநீதம்பிள்ளை தென்னாபிரிக்காவில் மூத்த நீதிபதியாக பதவி வகித்தவர். பின்னர் ஐ.நா., பொதுச்செயலர் பான் கீ மூன் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment