news

Friday, May 4, 2012

உப்புவெளியில் விபச்சார விடுதி முற்றுகை: பெண் உட்பட நால்வர் கைது !


திருகோணமலை - உப்புவெளி - அலஸ்வத்தை - தொரன்காடு சந்தி பகுதியில் நடத்திச் செல்லப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. உப்புவெலி பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது என அறியப்படுகிறது. முற்றுகையின் போது மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நால்வரும் 2ம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றத்தை ஒப்புக் கொண்டதால் 80,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment