news

Thursday, May 17, 2012

✿ தாயகத்தில் மலர்ந்த மலர்கள் இரத்தவெள்ளத்தில் கண்ணீர் விட்டு உயிர் மாய்த்த எம் உறவுகளுக்காக எமது அகவணக்கம் ✿

எம் இனத்தினை கூண்டோடு
மண்ணில் புதைத்தவர்களின்
தலையை கொய்ய
எமக்கு ஒரு காலம் வராதோ!!????'

சுத்தமான காற்றைச் சுவாசித்த
எம் மக்களையும் போராளிகளையும்
நச்சுக் குண்டடித்து
மூச்சுத்திணற விட்டவர்களை
மூச்சுத்திணறவிடும்
காலம் தான் வராதோ...,,?

எரியும் நெருப்பை கையில் ஏந்தி
எம் மண்மீட்ப்புக்காய் போராடியவர்களை
எரி வாயுவினால் அழித்தவர்களை
நாம் எம் கைகளினால் தீ மூட்ட
ஒரு காலம்தான் வராதோ,?'????

எம் உறவுகளின் நிலையை
இன்றுவரை அறியமுடியாமல்
தவிக்கும் பரிதாப நிலைமைபோல்
சிங்கள ராணுவம் எங்கே போய்விட்டது
என்று கேள்வி கேட்போருக்கு.
நாம் மீண்டும் போராடி
அவர்களையும் கூண்டோடு
அழித்துவிட்டோம்!!
தமிழீழம் வென்றுவிட்டோம்
என்று வெற்றிச் சங்கு முழங்கிக்கூற
எமக்கு ஒரு காலம்தான் வராதோ!!??????



தோல்விகள் தொடரில்லை எமக்கு
தொலைவில் நீ இருந்தாலும்
தொடர்ந்து நீ தோள்கொடு
தொடரட்டும் எம் மக்களின்
விடிவிற்காய் உன் பணி....!

உடைந்து போனது - எம்
உடைமைகள்தான்
உணர்வுகள் இல்லை
உள்ளத்தின் வலியை பார்த்து
உதறிவிட எண்ணாதே
உன் கனவை - நாளும்
உலகுக்கு கொண்டு செல்வோம்
உண்மைதனை- எம் பலம்
உடைக்கட்டும் துட்டகைமுனுவின்
துளிர்களின் கையை....!

ஈழத்தாயை மிதிக்கிறான்
இன்றியமையா துன்பத்தில்
ஈழமக்கள் இழந்தது போதுமடா
இன்றே நீ ஏந்திடு
ஒற்றுமை எனும் ஆயுதம்
ஒழியட்டும் எமை சூழ்ந்த தடைகள்
ஒரே நாளில் ,,,,,!

No comments:

Post a Comment