கடந்த மே 11ம் திகதி நடந்த தங்கள் திருமணத்துக்கு வருமாறு சூப்பர் ஸ்டாருக்கு சினேகா-பிரசன்னா அழைப்பிதழ் கொடுத்திருந்தனர்.
ஆனால் ரஜினியால் திருமணம் மற்றும் அதன் பிறகு திரையுலகினருக்காக நடத்தப்பட்ட பிரத்தியேக வரவேற்பில் பங்கேற்க முடியவில்லை.
அப்போது கோச்சடையான் படப்பணிகளில் நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் சினேகாவையும் பிரசன்னாவையும் தன் வீட்டுக்கே வரவழைத்து அவர்களுக்கு திருமணப் பரிசு வழங்கி, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார்.
ஸ்ரீராகவேந்திரர் உருவப்படத்தின் ஆயில் பெயின்டிங்கை இருவருக்கும் அன்புப் பரிசாக அளித்த ரஜினி, இருவருக்கும் திருமண வாழ்த்து கூறினார்.
இதுகுறித்து பிரசன்னா கூறுகையில், இந்த நாள் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது. சூப்பர் ஸ்டாரின் அன்புப் பரிசோடு வாழ்க்கையைத் தொடங்குகிறோம் என்றார்.
No comments:
Post a Comment