news

Thursday, May 17, 2012

இந்தியர்களின் மானத்தை வாங்கும் ஐஸ்வர்யா ராய் !


இந்தியப் பெண்களின் மானத்தை ஐஸ்வர்யா ராய் வாங்குவதாக பிரித்தானியப் பத்திரிகையான டெய்லி மெயில் முதல் பக்கச் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாகப் பெண்கள் கற்பமாக இருக்கும் தருணங்களில், உடல் எடை அதிகரிப்பது வழக்கம். ஆனால் பிள்ளை பிறந்த பிற்பாடு அவர்கள் திரும்பவும் மெலிந்துவிடுவார்கள். அதிலும் சில பெண்கள் தாம் நடிகையாக இல்லையேல் மாடலாக இருந்தால் நிச்சயம் சில மாதங்களில் மெலிந்துவிடுவார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராயைப் பொறுத்தவரை அவர் இன்னமும் குண்டாகவே உள்ளார் என்றும், இது இந்தியப் பெண்களையும் அவர் ரசிகர்களையும் பெரும் சங்கடத்தில் ஆழ்த்துவதாகவும் இப்பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

உலக அழகியாக 1994ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய் அமெரிக்காவில் உள்ள ஹாலிவுட்டிலும் பிரபல்யமான நபர் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆங்கிலப் படங்களில் நடித்து மேற்குலகிலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஐஸ்வர்யா. நியூயோர்க், லண்டன், பாரீஸ் என்று பல தலைநகரங்களில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. ஆனால் இவர் சமீபகாலமாக எவரையும் சந்திப்பதோ இல்லை பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதோ இல்லை. இருப்பினும் ஐஸ்வர்யாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிள்ளை பிறந்து பல மாதங்கள் ஆகியும் அவர் இன்னும் பழைய தோற்றத்துக்கு வரவில்லை என இப் புகைப்படத்தைக் காணும்போது தெரிவதாகக் கூறப்படுகிறது. பிரித்தானிய நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கம் மனைவி விக்ரோரியா பெக்கம், ஹாலிவுட் நடிகை யூலியா ரோபேட்ஸ், உட்பட பல நூறு பிரபல்யமான பெண்கள், பிள்ளை பிறந்தபின்னர் தமது உடல் எடையைக் குறைத்துக்கொண்டு பழைய தோற்றத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் அதனை ஐஸ்வரியா ராயால் ஏன் செய்யமுடியவில்லை என பிரித்தானிய ஆங்கிலப் பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது.



No comments:

Post a Comment