news

Sunday, April 29, 2012

சிறுமியிடம் இருந்து எனது கணவரை மீட்டுத்தாருங்கள்: மனைவி !

காதலித்து, பதிவுத் திருமணம் செய்த மனைவியை விட்டு விட்டு சிறுமி ஒருவரை கூட்டிச் சென்று கல்யாணம் செய்துகொண்ட வாலிபர் ஒருவர் யாழ் நீதிமன்றத்தினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டார் என அதிர்வு இணையம் அறிகிறது. தாவடியை சேர்ந்த (இளவயது)வாலிபர் ஒருவர் ஏற்கனவே இளம் பெண் ஒருவரைப் பதிவுத் திருமணம் செய்திருந்தார். ஆறு மாதக் குழந்தையொன்றும் இத் தம்பதிகளுக்குப் பிறந்திருந்தது.

இந்த நிலையில் இந்த வாலிபர் 17 வயதுடைய சிறுமி ஒருவரோடு காதல் வயப்பட்டாராம். பாக் பீச் இன்ரர்நெட் கஃபே என இவர்களின் காதல் நாளுக்கு நாள் வளர்ந்து கல்யாணத்தில் நிறைவடைய வேண்டிய நிலைக்கு வந்தது. காரணம் இவர்களுக்கு இடயே ஏற்பட்ட உடலுறவு. இருவரும் இரகசியமாக வீட்டை விட்டுக் கிளம்பியிருந்தார்கள். தனது கணவன் இரகசியமாகக் காதலியைக் கூட்டிச் சென்றுவிட்ட செய்தியை அறிந்த மனைவி அதிர்ச்சியடைந்தார். யாழ். சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவில் இதுபற்றி கைக்குழந்தையுடன் சென்று முறைப்பாடு செய்திருந்தார். தனது கணவனை சிறுமியிடமிருந்து மீட்டுத்தருமாறு பொலிஸாரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பொலிஸார் பிடியாணையுடன் கணவணையும், காதலியையும் தேடிக்கண்டு பிடித்து கைது செய்தனர். யாழ் நீதிமன்றில் இவர்களை நேற்று முன்தினம் பொலிசார் ஆஜர் செய்தனர். எதிர்வரும் ஒன்பதாம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். யாழ் கலச்சாரம் எங்கே சென்றுகொண்டு இருக்கிறது. கட்டிய மனைவி தன் கணவனை சிறுமியிடம் இருந்து மீட்டுத்தருமாறு வேண்டி நிற்கிறாரே ! கணவன் கைதுசெய்யப்படுவதால், திருந்திவிடுவாரா ? இல்லை திரும்பவும் மனைவியுடன் வந்து வாழும்போது அந்த 17 வயதுக் காதலியை மறந்து தான் போய்விடுவார ? கல்யாணம் முடித்த ஆண் என்றுகூடப் பாராமல் சிறுமி அவரோடு பழக என்ன காரணம் ? உங்கள் கருத்துக்களையும் கொஞ்சம் பதிவுசெய்யுங்கள். நன்றி !

No comments:

Post a Comment