தாய்மை தனக்கு அளவற்ற பேரின்பம் அளிப்பதாக நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார். |
இங்கிலாந்து வாழ் இந்தியரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கேத் வாஸ் 25 ஆண்டுகளாக பதவி வகிப்பதை முன்னிட்டு லண்டனில் விருந்தளித்தார். அதில் ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன் பங்கேற்றனர். அப்போது ஐஸ்வர்யா ராய் கூறுகையில், தாயாக கிடைத்துள்ள அனுபவம் பேரின்பம் தருகிறது. அதை ரசிக்கிறேன், நேசிக்கிறேன். இப்போதைக்கு குழந்தையை வளர்ப்பதே எனது முன்னுரிமை. மீண்டும் நடிக்க வருவது பற்றி உடனடி திட்டம் இல்லை என்றார். அபிஷேக் கூறுகையில், குழந்தையை கவனிக்க நான் நேரம் ஒதுக்காததை குற்றமாக நினைக்கிறேன். அந்த கடினமான வேலைகளை ஐஸ்வர்யா தான் செய்கிறார் என்றார். |
news
Sunday, June 17, 2012
தாய்மையால் அளவில்லா இன்பம் அடைகிறேன்: ஐஸ்வர்யா ராய்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment